Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணிகள் இணைப்பு விவகாரத்தில் திருப்பம் பன்னீரும்,பழனியும் விரைவில் தனி ஆலோசனை

Featured Replies

அணிகள் இணைப்பு விவகாரத்தில் திருப்பம்
பன்னீரும்,பழனியும் விரைவில் தனி ஆலோசனை
 
 
 

அ.தி.மு.க., அணிகள் இணைவதில் உள்ள சிக்கல் தீர, முதல்வர் பழனிசாமியும், முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தனியாக சந்தித்து பேச வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

 

Tamil_News_large_1765604_318_219.jpg

இது தொடர்பாக, இருவரும் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என, நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் விரும்பு கின்றனர். சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் மட்டும் விரும்பவில்லை.
 

நிபந்தனை


இணைப்பு பேச்சு நடத்த, இரு அணிகளிலும் குழு அமைக்கப்பட்டதும், இருதரப்பிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், பேச்சு துவங்க, பன்னீர் அணி, இரு முக்கிய நிபந்தனைகளை விதித்தது.'சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும்; ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, பரிந்துரை செய்ய வேண்டும்' என, பன்னீர் அணி சார்பில், நிபந்தனை விதிக் கப்பட்டது. இதை, சசிகலா அணியினர் ஏற்கவில்லை. 'நிபந்தனையின்றி பேச முன்வர வேண்டும்' என, நிராகரித்தனர்.

இதன் காரணமாக, பேச்சு துவங்காமலே நின்று

போனது. பேச்சுக்கு தயார் எனக்கூறிக் கொண்டே, பொதுச் செயலர் சசிகலா, துணை பொதுச் செயலர் தினகரன், முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவு தருவதாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், பிரமாண வாக்குமூலத் தில், கையெழுத்து வாங்கும் பணியை துரிதப்படுத்தினர்.

அதனால், பன்னீர் அணியினர் அதிர்ச்சி அடைந்த னர். இனியும் சசிகலா அணியினரைநம்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்த அவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க கிளம்பிவிட்டனர். இதற்கிடையில், இரு அணிகள் இணைப்பு நடை பெற, முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல் வர் பன்னீர்செல்வமும், தனித்து பேச வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.
 

கருத்து வேறுபாடு


இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இரு அணிகளும் இணைய தடையாக இருப்பது, முதல்வர் பதவி. பன்னீர் அணியினர், முதல்வர் மற்றும் பொதுச் செயலர் பதவிகள், தங்களுக்கு வேண்டும் என்கின்றனர். முதல்வர் பதவியை துறக்க, பழனிசாமி தயாராக இல்லை; பொதுச் செய லர் பதவியை விட்டுக் கொடுக்க, தயாராக உள்ளார். அதை, பன்னீர் அணியினர் ஏற்க வில்லை. தற்போதைய முதல்வர் பழனிசாமி, சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்.

அவர் கீழ் பன்னீர் அணியினர் இணைந்தால், சசி கலாவை ஏற்றுக் கொண்டதாகி விடும்.ஜெயலலிதா வால், இரு முறை முதல்வராக்கப்பட்டவர், பன்னீர் செல்வம். அவரை, தொண்டர்களும், மக்களும் ஏற்று கொண்டனர்.

எனவே, முதல்வர் மற்றும் பொதுச் செயலர் பதவியை, அவருக்கு வழங்க வேண்டும். பழனி சாமிக்கு துணை முதல்வர் பதவியை வழங்க லாம் என, பன்னீர் தரப்பினர் ஆலோசனை கூறி உள்ளனர். அதை, பழனிசாமி தரப்பினர் ஏற்க வில்லை. இதன்

 

காரணமாக, கருத்து வேறுபாடு நிலவுகிறது. இருவரும் அமர்ந்து பேசினால், இப்பிரச் னைக்கு தீர்வு காணலாம். இரு அணிகளும் இணைந்தால், எதிர்ப்பு குரல் கொடுக்க, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் முயற்சிப்பர். ஆட்சி கலைந்தால், சசிகலா குடும்பத்திற்கும் சிக்கல் ஏற்படும் என்பதால், அவர்கள் அமைதி யாக இருக்க வாய்ப்பு அதிகம்.

எனவே, முதல்வர் பழனிசாமியும், பன்னீர் செல்வமும் தனியாக சந்தித்து பேச வேண்டும். வேறு யாரையும் உடன் வைத்துக் கொள்ளக் கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

முதல்வருடன் திவாகரன் பேச்சு?


சசிகலா குடும்பத்தினரில் சிலர், அ.தி.மு.க., வின் இரு அணிகள் இணைவதை விரும்பு கின்றனர். இது தொடர்பாக, சசிகலா வின் தம்பி திவாகரன், முதல்வர் பழனிசாமியுடன் போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, 'யாரையும் நம்பாமல், நீங்களும், பன்னீர்செல்வ மும் சந்தித்து பேசுங்கள். இருவரும் இணைந் தால் தான் அனைவருக்கும் நல்லது' என, கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1765604

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.