Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பொன்சேகாவின் கருத்துக்களால் இரு கட்சிகளிடையே முரண்பாடு

Featured Replies

அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பொன்சேகாவின் கருத்துக்களால் இரு கட்சிகளிடையே முரண்பாடு

கொழும்பு காலி­மு­கத்­தி­ட­லில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான கூட்டு எதிர்க்­கட்­சி­யின் மேதி­னக் கூட்­டத்­துக்கு இந்த அளவுக்கும் மக்­கள் திரள்­வார்­கள் என்று ஆளும் கட்­சித்­த­லை­வர்­க­ளும் நினைக்­க­வில்லை; எதிர்க்­கட்­சி­யி­ன­ரும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. நாட்­டின் சமீ­ப­கால அர­சி­யல் வர­லாற்­றில் இது ஒரு பிர­ மிப்­பைத் தரும் சாத­னை­யா­கும்.

இத்தகைய விதத்தில் பெரும் அள­வில் மக்­கள் திரள்­வார்­கள் என்று எதிர்­பார்க்­கா­த­தால், அந்த மிக­ வி­சால­மான மைதா­ னத்தைக் கூட்டு எதி­ர­ணி­யி­னர்­க­ளுக்கு வழங்­குவ தற்குத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ ர­ம­சிங்க ஏற்­பாடு செய்­தி­ருந்­தார். அந்த ஏற்­பாட்­டுக்­குத் தாமே பணிப்­புரை வழங்­கி­யி­ருந்­தார் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் பின்­னர் தெரி­வித்­தி­ருந்­தார். இரு­வ­ருமே இவ்­வ­ளவு பெரிய மனித வெள்­ளம் அந்தக் கூட்டத்துக்குத் திர­ளும் என்று எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

ஆனால் சமீ­ப­கா­லத்­தில் அர­சின் தவ­றான செயற்­பா­டு­கள், செயற்­றி­றன் இன்மை, வாழ்க்­கைச் செலவு அதி­க­ரிப்பு என்பவை­க­ளு­டன் பர­வ­லான ஊழல்­கள் பற்­றிய குற்­றச்­சாட்­டு­ கள் தொடர்­பில் எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்­குச் சாத­க­மான பரப்­புரை வாய்ப்புக் கிடைத்­துள்­ளது. ராஜ­பக்ச ஆட்­சி­யின் போது இருந்­ததை விட இப்­போது அந்த வகை­யில் அதிக செயற்­பா­டு­கள் காணப்­ப­டு­வ­தாக அர­சு­த­ரப்பு புல­னாய்­வுப் பிரி­வு­க­ளின் தலை­வர்­கள் சிலர் அபிப்­பி­ரா­யப்­ப­டு­கி­றார்­கள். உயர்­நிலை வழக்­கு­கள் பல­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மல் கிடப்­பில் போடப்­ப­டி­ருப்­ப­தா­னது, சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் குற்­றச்­சாட்­டு­க­ளில் இருந்து விடு­விக்­கப்­பட்டுவிட்­ட­தாக மக்­கள் கருத இட­ம­ளித்­துள்­ளது.

குற்­றச்­சாட்­டு­கள் வெறும் பரப்­பு­ரைக்­காக செய்­யப்­பட்­டவை என்ற வகை­யில் மக்­கள் கரு­து­வ­தால் எதிர்த்­த­ரப்­பி­னர் மீது அனு­தா­பம் ஏற்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது. வெளிப்­ப­டை­யா­கக் கூறப்­பட்ட பல பெரிய குற்­றச்­சாட்­டு­ கள் தொடர்­பில் எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­களை ஒப்­பிட்­டுப் பார்க்­கை­யில் மிக சாதா­ர­ண­மா­கக் காணப்­ப­டு­கின்­றன. இதற்கு முக்­கிய கார­ணம், அர­சுக்­குள்­ளேயே காணப்­ப­டும் பிரி­வி­னை­யா­கும். ஒரு தரப்பு ஆத­ர­வ­ளிக்­கி­ற­தென்­றால், மற்றொரு தரப்பு பல நட­வ­டிக்­கை­க­ளில் இறங்கி அதனை முறி­ய­டித்து விடுகின்­றது.

திங்­கட்­கி­ழமை இரவு காலி­மு­கத்­தி­ட­லில் பெரும் எண்­ணிக்­கை­யில் மக்­கள் திரண்­டி­ ருந்­தார்­கள் என்ற செய்தி அர­சுத்­த­லை­வர்­களை ஆட்­டம் காணச் செய்­தது. இதைச் சாதா­ர­ண­மாக எடுத்­துக் கொள்­ளக்­கூ­டாது. நாங்­கள் ஒரு­வரை ஒரு­வர் குற்­றஞ்­சாட்­டிக் கொண்­டி­ருப்­பதை விடுத்து ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்­டும் என்­ப­தற்­கான காலம் ஏற்­பட்­டுள்­ளது என்­றார், பெயர் குறிப்­பிட விரும்­பாத அமைச்­சர் ஒரு­வர்.

காலி­மு­கத்­தி­ட­லில் கூடிய மக்­கள்

அள­வை­யா­ளர் நாய­கம் பி.எம்.பி.உத­ய­காந்­த­வின் கருத்­துப்­படி, காலி முகத்­தி­ட­ லா­னது பக்­கத்­தி­லுள்ள வீதி­க­ளை­யும் சேர்த்து 18 எக்­கர் விஸ்­தீ­ர­ணம் கொண்­டது. கம்பெல் பார்க் (யு.என்பி.மேதி­னக் கூட்­டம் நடந்த இடம்) 3.5 ஏக்­கர் விஸ்தீர ணம் மட்­டுமே கொண்­டது. மைத்­திரி பிரிவு சுதந்திரக் கட்சிக் கூட்­டம் நடை­பெற்ற கெட்­டம்­பே­யிலுள்ள முனி­சிப்­பல் விளை­யாட்­டுத்­தி­டல் 2.5 ஏக்­கர் விஸ்தீரணம் மட்­டுமே கொண்­டது.

இந்த ஒவ்­வொரு இடத்­தின் விஸ்­தீ­ர­ண­த்தை வைத்தே அங்கு கூடிய மக்­கள் தொகையை இல­கு­வாக மதிப்­பீடு செய்து கொள்­ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. காலி முகத்­தி­டலை எதிர்த்­த­ரப்­பி­ன­ரால் முழு­மை­யாக நிரப்ப முடி­யா­மல் போகும் என்று சிறி­சே­ன­வும், விக்­கி­ர­ம­சிங்­க­வும் ஏன் கரு­தி­னார்­கள் என்­ப­தை­யும் இது விளக்­கு­வ­தாய் உள்­ளது.

அரசு தரப்பு புல­னாய்­வா­ளர்­க­ளின் கணிப்­பின்­படி காலி­மு­கத்­தி­ட­லில் கூடிய மக்­கள் தொகை ஒரு இலட்­சத்­துக்கு மேலி­ருக்­கும். கம்பெல் பார்க்­கில் நடந்த ஐ.தே.க கூட்­டத்­துக்கு 45 ஆயி­ரம் பேர் குழு­மி­யி­ருப்­பார்­கள். அதே சம­யம் கெட்­டம்பே மைதா­னத்­தில் சிறி­சே­ன­வின் கூட்­டத்­துக்கு கூடிய மக்­கள் தொகை 40 ஆயி­ர­மாக இருக்­க­லாம். இந்த இரண்டு கூட்­டங்­க ­ளுக்­கும் வந்­தி­ருந்த மக்­கள் தொகை­களை ஒன்­றா­கக் கூட்டிப் பார்த்தாலும் காலி­ மு­கத்­தி­ட­லில் கூடி­ய­வர்­க­ளின் தொகைக்கு ஈடா­க­மாட்­டாது.

காலி முகத்­தி­ட­லில் அப­ரி­மி­த­மான கூட்­டம் கூடி­யமை மட்­டு­மல்ல, அரசு சார்பு தரப்­பி­ன­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் கவ­லைக்கு கார­ணம். கூட்­டத்­துக்கு வந்­த­வர்­கள் எல்­லாம் கூட்டு எதிரணிக்குத்­தான் வாக்­க­ளிப்­பார்­கள் என்­ப­தில்­லை­யென்று சிலர் ஆறு­தல் கூறிக் கொண்­டா­லும், சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர் ஒரு­வர் கூறி­யது போல் அர­சுக்கு எதி­ரான மன­மாற்­றம் மக்­கள் மத்­தி­யில் உரு­வா­கி­யி­ருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

வேறு வார்த்­தை­யில் கூறு­வ­தா­னால், சிறி­சேன–விக்­கி­ர­ம­சிங்க கூட்டு செல்­வாக்கு இழந்து விட்­டது என்­ப­தா­கும். அது மட்­டு­மின்றி சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு மாற்­றீ­டாக ராஜ­பக்­ச­வி­ன­ரால் தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள லங்கா பொது­ஜன கட்­சி­யா­னது நிலை கொள்­ளத் தொடங்­கி­விட்­டது. அந்­த­வ­கை­யில் சிறி­சே­ன­வின் தலை­மை­யி­லான பிரிவு ஒரு பின்னடைவு நிலைக்­குத் தள்­ளப்­பட்டு விட்­டது.

இந்த நிலை­யில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது பெரிய பிரிவு, சிறிய பிரிவு என்­ற­வ­கை­யில் நாடு முழு­வ­தும் பிரி­யத் தொடங்­கி­விட்­டது. பெரிய பிரிவு ராஜ­பக்­ச­வை­யும், சிறி­ய­ பி­ரிவு சிறி­சேன­ வையும் ஆத­ரிப்­ப­தாக உள்­ள­மை­யால், ஐ.தே. கட்சியின் மத்தியில் உள்­ள­கப் பிரச்­சி­னை­கள் இருந்­தா­லும், அது பல­மான கட்­சி­யாக நிலைத்­தி­ருக்­கும் என்று தோன்­று­கின்­றது.

மேதின காலி­மு­கத்­தி­டல் கூட்­டம் முடி­வ­டைந்த கையோடு முன்­னாள் அரச தலை­வர் ராஜ­பக்­ச­வின் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளில் 42 பொலி­ஸாரை மீளப்­பெற்­றுக் கொள்­வ­தற்­கான உத்­த­ரவை சிறி­சேன விடுத்­தி­ருக்­கி­றார்.

இது ஒரு அர­சி­யல் ப­ழி­வாங்­கல் என்று முன்­னாள் அரச தலை­வர் ராஜ­பக்ச கண்­டித்­தி­ருக்­கி­றார். ராஜ­பக்ச குடும்­பத்­தி­னர் தொடர்­பாக விசா­ர­ணை­கள் முடி­வுற்­றுள்ள வழக்­கு­க­ளைத் தொடர்ந்து நடத்துமாறானபணிப்­பு­ரை­க­ளும் விடு­ க்­கப்­பட்­டிருப்­ப­தா­கத் தெரி­கின்­றது.

அமைச்­சர்­கள் முரண்­பாடு

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தி­லும் காலி முகத்­தி­ட­லில் நடந்த கூட்­டம் பற்றி விவா­திக்­கப்­பட்­டது. அரச தலை­வர் சிறி­சே­ன­வின் தலை­மை­யில் நடந்த அமைச்சரவைக் கூட்­டத்­தில், ஐ.தே. கட்சியின் மேதினக் கூட்­டத்­தில்.வைத்து அமைச்சர் ராஜிதசேனாரத்ன தம்மைப்பற்றி அசிங்கத்தனமான கருத்து வௌியிட்டதாக அமைச்­சர் ஜோன் சென­வி­ரத்ன பிரச்­சினை கிளப்­பி­னார். இதன்போது குறுக்­கிட்ட அரச தலை­வர், அமைச்­சர் சரத்­பொன்­சே­கா­வும் சில சர்ச்­சை­யான கருத்­துக்­களை வௌியிட்­டி­ருந்­தார் என்று குறிப்­பிட்­டார்.

மேதின ஐ.தே.கட்சி கூட்­டத்­தில் பேசிய போது ராஜித சேனா­ரத்ன பின்­வ­ரு­ மாறு கூறி­னார். சில சிக்­க­லான விட­யங்­க­ளைக் கவ­னிக்க சரத்­பொன்­சே­கா­வுக்கு அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்று அண்­மை­யில் அரச தலை­வர் குறிப்­பிட்­டி­ருந்­தார். சரத்­பொன்­சேகா வரப்­போ­கி­றார் என்று கேள்­விப்­பட்­ட­தும் ராஜ­பக்­சக்­க­ளுக்கு பயம் பற்­றிக் கொண்­டு­விட்­டது. ஜோன் என்று ஒரு­வர் இருக்­கி­றார். எங்­க­ளு­ட­னி­ருக்­கும் ஜோன் அம­ர­துங்­கவை நான் கூற­வில்லை. அந்­தப் பக்­கத்­தில் இருக்­கும் ஜோனைக் குறிப்­பி­டு­கி­றேன். அவர் பெரி­தும் கவ­லைக்­குள்­ளாகி­விட்­டார்.

அவர் ஒரு சம­யம் இரத்­தி­ன­பு­ரிக்­குச் சென்று தாம் மகிந்­த­வு­டன் சேரப் போவ­தா­கக் கூறு­வார். பிறகு அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­துக்­கும் வரு­வார். அவர் ஒரு காலை அந்தப் பக்கம் வைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இவர்­க­ளை­யெல்­லாம் நீதி­யின் முன் நாம் கொண்டு வரு­வோம். அதே மேதி­னக் கூட்­டத்­தில் சரத்­பொன்­சேகா பேசியபோது போரை நாங்­கள் வென்ற இரண்டு வாரங்­க­ளின் பின்­னர் அப்­போ­தைய ஐ.நா.செய­ல­ளர் நாய­கம் பான்­கீ­மூ­னு­டன் ராஜ­பக்ச இர­க­சிய உடன்­ப­டிக்­கை­யொன்­றில் போர்­குற்­றம் புரிந்­த­வர்­க­ளைத் தண்­டிப்­ப­தாக கையொப்­பம் இட்­டார்.

ஆனால் பின்­னர் கூறி­னார், போர்­வீ­ரர் எவ­ரா­வது விசா­ர­ ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டால் தாம் மின்­சாரக் கதி­ரையை எதிர்­கொள்­ள­வும் தயா­ராய் இருப்­ப­தாக. இந்த மாதி­ரி­யான துரோகங்­க­ளுக்­காக அவர் அவ­ரு­டைய சால்­வை­யா­லேயே தூக்­கி­லி­டப்­பட வேண்­டும். மின்­சாரக் கதி­ரை­ யில் அம­ரச் செய்ய வேண்­டி­ய­தில்லை. அமைச்­சர் சென­வி­ரட்ன கூறு­கை­யில்,

த­மக்கு ராஜ­பக்­ச­வு­ட­னேயோ அல்லது அவ­ரது குழு­வி­ன­ ரோ­டேயோ எது­வி­தத் தொடர்­பும் கிடை­யாது. சேனா­ரத்­ன­வின் கருத்து தவ­றா­னது என்­றார். இந்த மாதிரி தனிப்­பட்ட தாக்­கு­தல்­களை அமைச்­சர்­கள் நிறுத்த வேண்­டும் என்ற விளையாட்­டுத்துறை அமைச்­சர் தயா­சி­றி­ ஜயசேகர வலி­யு­றுத்­தி­னார். வெளி­யு­றவு அமைச்­சர் மங்­கள சம­ர­வீர கூறு­கை­யில்,

‘‘எமது அக்­கறை ராஜ­பக்ச மீது இருக்­க­லா­காது. நாம் எதைக் செய்ய வேண்­டுமோ அதைச் செய்­தாக வேண்­டும்’’ என்­றார்.

அமைச்­சர்­க­ளான ராஜித சேனாரத்ன மற்றும் சரத்பொன்சேகா ஆகியோர் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­களைத் தாம் ஆத­ரிக்­க­வில்­லை­யென்று கூறிய அரச தலை­வர், அவை குறித்­துத் தாம் கவலைப்படு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். இந்­தக் கட்­டத்­தில் அமைச்­சர் மலிக் சம­ர­விக்­கி­ரம கருத்­துத் தெரி­விக்­கை­யில், ஐ.தேசி­யக்­கட்சி அவைத் தலை­வர் என்ற முறை­யில் தாமோ தமது கட்­சியோ குறித்த அமைச்­சர்­க­ளின் கருத்­துக்­களை அங்­கீ­க­ரிக்­க­வில்­லை­ என்றார்.­­ கெட்­டெம்பே மேதி­னக் கூட்­டத்­தில் அரச தலை­வர் பேசிய போது, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யைத் தாம் இப்­போது ஜன­நா­ய­கக் கட்­சி­யாக மாற்­றி­யுள்­ளார் என்­றார்.

அந்­தக் காலத்­தில் கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ராக இருந்­துள்­ளேன். அமைச்­ச­ர­வை­யில் எவ­ரா­வது குரல் எழுப்­பக் கூடி­ய­தாக இருக்­க­வில்லை. இப்­பொ­ழுது கட்சி ‘திறந்த’ கட்­சி­யாக விளங்­கு­கின்­றது. குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு இடம் ஒதுக்­கு­வ­தற்­காக நான் வர­வில்லை. கட்­சி­யின் இளை­ஞர் அணி­யில் இப்­போது இள­வ­ர­சர்­கள் இல்லை. பரி­சுத்­த­மான ஜன­நா­ய­கக் கட்­சி­யாக நாம் முன்­னேற வேண்­டும். ஊழ­லற்ற வீண்­வி­ர­யம் களவு மற்­றும் குடும்ப அரசியல் அற்ற கட்­சி­யாக நாம் உயர வேண்­டும்.

இந்த விழு­மி­யங்­களை நான் இப்­போது உரு­வாக்­கி­யுள்­ளேன் என்­றார். பொது­வில் அரசு சார்­பில் தலைமை அமைச்­ச­ரும், அர­ச­த­லை­வ­ரும் எதிர்­கொண்­டு­வ­ரும் சவால்­கள் அதி­க­ரித்­த­படி இருக்­கின்­றன.

பொரு­ளா­தார மற்­றும் அபி­வி­ருத்தி தொடர்­பி­லான பிரச்­சி­னைகளை எதிர்­நோக்­கும் அதே சம­யம் மக்­கள் மனங்­க­ளை­வென்­றெ­டுப்­ப­தும் முக்­கிய பிரச்­சி­னை­க­ளாக இரு­வ­ருக்­கும் இப்­போது தோற்­ற­ம­ளிக்­கின்­றன.

http://uthayandaily.com/story/2438.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.