Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மக்களை மனித கேடயமாக்கி துருப்புகள், ஆயுதங்களை கப்பல் மூலம் அரசு நகர்த்தி வருகின்றது: கூட்டமைப்பு.

Featured Replies

யாழ். மக்களை மனித கேடயமாக்கி துருப்புகள், ஆயுதங்களை கப்பல் மூலம் அரசு நகர்த்தி வருகின்றது: கூட்டமைப்பு.

யாழ். குடாநாட்டுக்கான ஒரேயொரு தரைவழிப்பாதையை அரசு நீண்டகாலமாக மூடிவைத்துக்கொண்டு, அங்குள்ள மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தித் துருப்புகளையும், ஆயுதத் தளபாடங்களையும் கடல்வழியாக நகர்த்தி வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையொப்பம் இட்டு விடுத்திருக்கும் ஓர் அறிக்கையில் இவ்வாறு குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பலில் அரசுப் படைகளும், ஆயுத உபகரணங்களும் நகர்த்தப்படுவதை சர்வதேச சமூகம் தலையிட்டுத் தடுக்கவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக் கோரியிருக்கின்றது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் களான செ. கஜேந்திரன், கி. சிவநேசன், ம. கா.ஈழவேந்தன், பத்மினி சிதம்பரநாதன், ம.க. சிவாஜிலிங்கம், க.பத்மநாதன், ச.சந் திரநேரு, க.துரைரட்ணசிங்கம், க. தங் கேஸ்வரி, சிவநாதன் கிஷோர், ந. ஸ்ரீகாந்தா, மாவை சேனாதிராஜா, ப. அரியநேத்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 தொடக்கம் யாழ். குடாநாட்டிற்கான தரைவழிப் பாதை மூடப்பட்டுள்ளது. இதன் காரண மாக யாழ். குடாநாட்டிற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இடையிலான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள தால் குடாநாட்டின் வர்த்தக நடவடிக்கை கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், நோயாளர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என எவரும் தமது எந்தவொரு அவசர தேவைக் கும் கொழும்புக்கோ ஏனைய பகுதிகளுக்கோ செல்ல முடியாதவாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குடாநாட்டில் பாரிய உணவுப்பஞ்சம் நிலவுகின்றபோதும் அங்கு உணவுப் பொருள் கள் தாராளமாகக் கிடைப்பதாக அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது. யாழ். குடாநாட்டில் மக்கள் சிறைக் கைதிகள் போன்று நடத்தப்படுகின்றனர். அதேபோன்று பிற மாவட்டங்களில் தங்கியுள்ளவர்கள் தமது எந்தவொரு அவசிய தேவைக்கும் தாம் விரும்புகின்ற நேரத்தில் யாழ்ப்பாணம் செல்ல முடியாத அவல வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

மக்களின் அடிப்படை மனித உரிமை களை முழுமையாக மீறும் வகையில் அரசினால் மூடப்பட்டுள்ள ஏ9 வீதியை உடன டியாகத் திறக்கவேண்டுமென தமிழர்தரப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும் இன்று வரை அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

அதேபோன்று, நாம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந் திரிகளை நேரடியாகச் சந்தித்து மூடப்பட்ட வீதியைத் திறப்பதற்கு வேண்டிய அழுத்தங்களை அரசுக்குக் கொடுத்துப் பாதை யைத் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்துள்ள போதிலும் இற்றைவரை அவர்கள் அதற்கான எந்தவொரு நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தினை அளிக்கின்றது.

சர்வதேச சமூகத்தின் பாராமுகமான இந்த நடவடிக்கையினால் இலங்கை அரசு இன்று யாழ். குடாநாட்டு மக்களை மனி தக் கேடயங்களாகப் பயன்படுத்தி தனது ஆயுத தளபாடங்களையும், இராணுவத் தினரையும் யாழில் இருந்து திருகோணமலைக்கும், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் நகர்த்தி வருகின்றது.

கடந்தவாரம் யாழில் இருந்து கப்பல் மூலம் தென்பகுதியை வந்தடைந்த பொது மக்கள் எம்மிடம் நேரடியாகக் கூறிய தக வல்களின்படி, தாம் பயணம் செய்த கப்பலில் பெருமளவு இராணுவத்தினரும் பயணம் செய்ததாகவும் தாம் தமது உயிரைக் கையில் பிடித்தபடியே வந்து சேர்ந்ததாகவும் கூறினார்கள்.

ஸ்ரீலங்காப் படைகளினதும் அரசின தும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறு ஆயுத தளபாடங்களையும், இராணுவத்தினரையும் ஏற்றிச்செல்லும் கப்பல்களில் பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி ஏற்றிச்செல்வதை உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம். இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் பாராமுகமாக இருக்காமல் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இச் செயற்பாட்டி னைத் தடுத்து நிறுத்தவும் போர்நிறுத்த உடன்படிக்கையினை மீறும் வகையில் மூடிவைக்கப்பட்டுள்ள ஏ 09 வீதியைத் திறப் பதன் மூலம் அங்கு நிலவும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்கவும் அரசின்மீது அழுத்தம் கொடுக்கவேண்டு மெனவும் அவசரமாகக் கோருகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Uthayan-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.