Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மந்திரிகளின் மோசடிகள், தொடர்ந்து அம்பலமாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள் ளது.

Featured Replies

தமிழக மந்திரிகளின் மோசடிகள், தொடர்ந்து அம்பலமாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள் ளது. மந்திரிகள் விஜயபாஸ்கர், காமராஜை தொடர்ந்து, பெண் மந்திரி சரோஜா, 30 லட்சம் ரூபாய் கேட்டு, பெண் அதிகாரியை அடாவடி யாக மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, பாதுகாப்பு கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

 

Tamil_News_large_176912920170511235107_318_219.jpg

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி, தன்னிச் சையாக செயல்படுகின்றனர். ஊழியர்கள் நியமனம், பணி இடமாற்றம், 'டெண்டர்' என, அனைத்திற்கும் லஞ்சம் பெறுவதாக, புகார் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக் கின. சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில், வாக்கா ளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்ததற்கான ஆவணங்களும் சிக்கின. அவர் மீது, இன்னமும் விசாரணை தொடர்கிறது.

அவரைத் தொடர்ந்து, மோசடி புகாரில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது, மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

ரூ.30 லட்சம்


இந்நிலையில்,30 லட்சம் ரூபாய் லஞ்சம்கேட்டு, பெண் அதிகாரியை, அமைச்சர் சரோஜா

மிரட்டியதாக, புகார் எழுந்துள்ளது. இது தொடர் பாக, தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ராஜமீனாட்சி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
 

அதில் கூறியுள்ளதாவது:


ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2012ல், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், 2016ல், தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக, பணியில் சேர்ந்தேன். ஜெ., மறைவுக்கு பின், இப்பணியில் இருந்து என்னை நீக்க, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பல வழிகளில் தொல்லைகொடுத்தார். அவரை சந்தித்த போது, 'இந்த பணிக்கு, 10 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஜெய லலிதா, இலவசமாக பணி வழங்கி விட்டார். பணியில் நீடிக்க வேண்டும் என்றால், அந்த தொகையை தர வேண்டும்' என, மிரட்டினார்.
 

மாறுதல்


அதனால், 2017 பிப்ரவரியில், அவரிடம், என் தந்தை வாயிலாக, 10 லட்சம் ரூபாய் கொடுத் தேன். குடலிறக்க நோயால் அவதிப்பட்டதா லும், குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டி இருந்ததாலும், சென்னைக்கு மாறுதல் கோரி விண்ணப்பித்தேன்.
 

அமைச்சர் வீடு


இது தொடர்பாக பேச, அமைச்சர் சரோஜா, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அவரது வீட்டுக்கு அழைத்தார். மே, 7ல், அமைச் சரின் வீட்டுக்கு சென்றேன்; அங்கு, அமைச்சர், அவரது கணவர் மற்றும் கான்ட்ராக்டர் ஒரு வரும் இருந்தனர்.அமைச்சர் மற்றும் அவரது கணவர், பணி மாறுதல் அளிக்க, 20 லட்சம் ரூபாய் கேட்டனர். முன்னதாக, 'செலவினங் களை கூடுதலாக காட்டி, மாதம்தோறும்

 

மாமூல் தர வேண்டும்; சத்துணவு பணியாளர் நியமனத்திற்கு, 50 பேரிடம், தலா, 2.50 லட்சம் வசூலித்து தர வேண்டும்' என்றனர்.

நான் மறுத்தேன். ஆத்திரம் அடைந்த அமைச் சர், 'நான்கு ஆண்டுகளில், நான், 4,000 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும்; அதற்கு, ஒத்து ழைக்க வேண்டும். முடியாது என்றால், வேலையை விட்டு ஓடிவிடுங்கள். உங்கள் பணியின் தற்போதைய, 'ரேட்' 30 லட்சம்; அதை கொடுத்தால், பணி நிரந்தரம் செய்து விடு
கிறேன்; முடியாது என்றால், பணம் கொடுக்க காத்திருப்போருக்கு, விட்டுக்கொடுங் கள்' என்றார்.

மேலும், 'இதுகுறித்து வெளியில் சொன்னால், வேலையில் இருந்து நீக்கி விடுவேன். வீண் பழி சுமத்தி, அசிங்கப்படுத்தி விடுவேன்' என, மிரட்டி னார்.அமைச்சரால், எனக்கும், என் குடும்பத் தாரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்ற கமிஷனர், கரண் சின்ஹா, லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றம் செய்வதாக கூறி உள்ளார். அடுத்தடுத்து, அமைச்சர்கள் புகாருக்குள்ளா வது, அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
 

கணவனே கணக்குப்பிள்ளை!


இதுகுறித்து, ராஜ மீனாட்சி கூறியதாவது:சமூக நலத்துறையின் கீழ் தான், பெண்கள், குழந்தை கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு உள்ளது. ஆனால், இந்த துறையின் அமைச்சர், பணம் கேட்டு மிரட்டுகிறார். பண வசூலிப்பில், அவரது கணவர், கணக்குப்பிள்ளை போல செயல்படுகிறார்.சத்துணவு பணியாளர் வேலைக்கு, 2 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். சமூக நலத்துறை யில், லஞ்சம் தலைவிரித் தாடு கிறது. லஞ்சப் பணத்தில் மஞ்சக்குளிக்கும் சரோஜா மீது, பிரதமர், கவர்னர், முதல்வருக் கும், ஆதாரங் களுடன் புகார் மனு அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1769129

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.