Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த - மோடி இரவோடிரவாகச் சந்திப்பு

Featured Replies


மஹிந்த - மோடி இரவோடிரவாகச் சந்திப்பு
 
 

article_1494571131-494005575.jpgஇலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான கலந்துரையாடலொன்று தொடர்பில், இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் காணப்படவில்லை என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கவே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நரஞ்சித் சிங் சந்து தெரிவித்தார்.

நேற்று (11) மாலை, கங்காரம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராப் போசன விருந்துபசாரத்தை அடுத்தே, மஹிந்தவுடனான இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இதில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியல் ஜீ.எல்.பீரிஸும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/196493/மஹ-ந-த-ம-ட-இரவ-ட-ரவ-கச-சந-த-ப-ப-#sthash.YEu4sA12.dpuf
  • தொடங்கியவர்

பல நெருக்கடிகளக்கு மத்தியில் மோடியை சந்தித்த மஹிந்த, கோத்தா : கலந்துரையாடிய விடயங்களும் வெளியாகின

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர்  விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆட்சியிலும், நிகழ்கால ஆட்சியிலும் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு  மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். narendra-modi-mahinda-rajapaksa-gotabaya

சர்வதேச வெசாக் வாரத்தை முன்னிட்டு இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று  இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். 

இதன் போது தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கலந்துகொண்டிருந்தனர். இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட சந்திப்பொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். 

இந்த சந்திப்பு ஒரு திட்டமிடப்படாத அவசர சந்திப்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.  

அதேபோல் இந்த சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கலந்துகொண்டார். இந்த சந்திப்பு குறித்து ஜி.எல் பீரிஸ் குறிப்பிடுகையில், 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது  மிகவும் ஆரோக்கியமான வகையில்  இடம்பெற்றுள்ளது. எமது ஆட்சியில் இந்தியா எமக்கு பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கிய நட்புறவு நாடாகும். 

அதேபோல் இப்போதும் அவர்களது உறவு முறையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆகவே நாம் கடந்த காட்சியில் கையாண்ட நட்புறவை தக்கவைக்கும் வகையில் இந்த சந்திப்புகளை கோரியிருந்தோம். அதற்கமைய நேற்று பின்னிரவு எமக்கான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கடந்த காலத்தில் தமது ஆட்சியிலும் அதேபோல் நிகழ்கால ஆட்சியில் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சந்திப்பில் பிரதமர்  நரேந்திர மோடிக்கு  நன்றி தெரிவித்திருந்தார்.

  அதேபோல் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையிலும் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் தொடர்ந்தும் அமைய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். 

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் பங்களிப்புகள் வரவேற்க்கத்தக்கது. முன்னைய ஆட்சியில் இந்தியாவின் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மிகவும் நெருக்கடியான கால சூழலில் எமக்கு இந்த சந்திப்புகளை இந்திய தூதரகம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. எனவே இந்த சந்திப்பு மிகவும் ஆரோக்கியமான வகையில் அமைந்தது என அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/19939

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.