Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு வார்த்தையேனும் கூறாதது ஏன் ?

Featured Replies

ஒரு வார்த்தையேனும் கூறாதது ஏன் ?

 

ரொபட் அன்­டனி

பெரும் எதிர்­பார்ப்­புக்கு மத்­தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யக தமிழ் மக்­களின் மேலோங்­கிய நம்­பிக்­கை­க­ளுக்கிடையே இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி இலங்­கைக்­கான இரண்­டுநாள் விஜ­யத்தை மேற்­கொண்டு நாடு­தி­ரும்­பி­யுள்ளார். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை வரு­வ­தற்கு முன்­பாக அவர் முன் உள்ள கட­மைகள் தொடர்­பாக நாம் அடிக்­கடி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம்.

குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்­களின் அர­சியல் தீர்வுப் பிரச்­சினை மற்றும் மலை­யக மக்­களின் அபி­வி­ருத்திப் பிரச்­சினை, அடிப்­படை தேவை பிரச்­சினை தொடர்­பாக ஆரா­ய­வேண்­டிய கடமை மற்றும் பொறுப்பு இந்­தியப் பிர­த­ம­ருக்கு இருப்­ப­தாக நாங்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம்.

அந்­த­வ­கையில் தற்­போது இந்­தியப் பிர­தமர் மோடியின் இலங்கை விஜயம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யக மக்­களின் அபி­லா­ஷை­கள் இந்­தியத் தலை­மையால் பிர­தி­ப­லிக்­கப்­பட்­டதா என்ற கேள்வி வெகு­வாக எழு­கின்­றது. அதா­வது இந்­தியப் பிர­தமர் மோடி தனது கட­மையை உரிய வகையில் செய்­தாரா? வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யக மக்­களின் அபி­லா­ஷை­களை ஆராய்ந்­தாரா? என்ற கேள்­வி­க­ளுக்கு விடை­கா­ண­ வேண்­டி­யுள்­ளது.

இலங்கை வந்த இந்­தியப் பிர­தமர் மோடி பல்­வேறு முக்­கி­யத்­து­மிக்க சந்­திப்­புக்­களை நடத்­தினார். கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை கடந்த வியா­ழக்­கி­ழமை வந்­த­டைந்த இந்­தியப் பிர­த­ம­ருக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இரு­கரம் கூப்பி அமோக வர­வேற்­ப­ளித்­தி­ருந்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வா­றா­ன­தொரு உருக்­க­மான தனது மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தான பாரி­ய­தொரு பிர­தி­ப­லிப்பை வெளிப்­ப­டுத்­துவார் என யாரும் எதிர்­பார்க்­க­வில்லை.எனினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் அளித்த உணர்­வுடன் கூடிய வர­வேற்­பா­னது அனை­வ­ரையும் கவர்ந்­த­தாக அமைந்­தது.

தொடர்ந்து அதேதினத்தில் கங்­கா­ரா­மயவில் இடம்­பெற்ற வெசாக் தோர­ணங்களை திறந்­து­வைக்கும் நிகழ்வில் இரண்­டு­நா­டு­க­ளி­னதும் பிர­த­மர்கள் கலந்து கொண்­டனர். அதனைத் தொடர்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அளித்த இரவு விருந்­து­ப­சா­ரத்தில் நரேந்­திர மோடி கலந்­து­கொண்டார். இந்த விருந்­து­ப­சா­ரத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டனர்.

அதனை அடுத்து நேற்று வெள்­ளிக்­கி­ழமை கொழும்பில் ஆரம்­ப­மான ஐக்­கிய நாடு­களின் சர்­வ­தேச வெசாக் தின நிகழ்வை இந்­தியப் பிரதமர் மோடி ஆரம்­பித்து வைத்தார். இந்த நிகழ்­விலும் அவ­ருக்கு உற்­சா­க­மான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. விசே­ட­மாக நிகழ்வில் வர­வேற்­பு­ரை­யாற்­றிய அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ இந்­தியப் பிர­தமர் மோடியை எங்­களில் ஒருவர் என வர்­ணித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதன் பின்னர் மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்த இந்­தியப் பிர­தமர் மோடி அங்கு கிளங்கன் வைத்­தி­ய­சா­லையை திறந்து வைத்­த­துடன் நோர்­வூட்டில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­திலும் உரை­யற்­றினார். தமிழ் முற்­போக்கு கூட்­டணி மற்றும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து பேச்சு நடத்­தினார்.

தொடர்ந்து தல­தா­மா­ளி­கைக்கு விஜயம் செய்த இந்­தியப் பிர­தமர் மோடி அங்­கி­ருந்து கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை சென்­ற­டைந்தார். விமான நிலை­யத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­திய மோடி நேற்று மாலை நாடு­தி­ரும்­பினார்.

இந்­நி­லையில் இந்­தி­யப்­பி­ர­த­மரின் இலங்கை வருகை வடக்கு, கிழக்கு மக்கள் மலை­யக தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை எவ்­வாறு பிர­தி­ப­லித்­தது என்­பது குறித்து ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. மலை­ய­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அங்கு விஜயம் செய்த இந்­தியப் பிர­தமர் மோடி மிகவும் உணர்ச்­சி­க­ர­மான ஒரு உரையை மலை­யக மக்கள் மத்­தியில் ஆற்­றினார்.

மலை­யக மக்கள் மகிழ்ச்­சி­ய­டையும் வகையில் இந்­தியப் பிர­தமர் மோடி இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிரச்­சி­னை­களை உணர்ந்­த­வ­ராக அதன் ஆழங்­களை அறிந்­த­வ­ராக உரை­யாற்­றினார். மேலும் 10 ஆயிரம் வீடு­களை இந்­திய அர­சாங்கம் மலை­யக மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்கும் என்ற வாக்­கு­று­தியை மோடி அளித்­தி­ருந்தார். அது­மட்­டு­மன்றி மலை­யக மக்­களின் எதிர்­கால பய­ணத்தில் இந்­தியா ஒரு­மி­கப்­பெ­ரிய பங்­கா­ள­னாக திகழும் என்­ப­தையும் அவர் கூறி­யி­ருந்தார்.

 கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை வந்­த­போது யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­தியப் பிர­தமர் மோடி வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆராய்ந்­தி­ருந்தார். அப்­போது அவரால் மலை­யகம் செல்ல முடி­ய­வில்லை. எனவே இம்­முறை இந்­தியப் பிர­தமர் மோடி மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்து அந்த மக்­களின் பிரச்­சி­னை­களை ஆராய்ந்­தி­ருக்­கின்றார்.

அது­மட்­டு­மன்றி மலை­யக மக்கள் மகிழ்ச்­சி­ய­டையும் வகை­யி­லான விட­யங்­களை தெரி­வித்­துள்ள இந்­தியப் பிர­தமர் மோடி இந்­தியா எப்­போதும் மலை­யக மக்­க­ளுக்­காக முன்­னிற்கும் என்று கூறி­யி­ருக்­கின்றார். அதன்­படி இந்­தியப் பிர­த­மரின் மலை­யக விஜ­ய­மா­னது குறிப்­பி­டத்­தக்க மகிழ்ச்­சி­யையும் வெற்­றி­யையும் கொடுத்­தி­ருப்­ப­தாக கூறலாம்.

பிர­தமர் அளித்த வாக்­கு­று­தி­களின் செயற்­பாட்டு தன்மை எவ்­வாறு இருக்கும் என்று நாம் இங்கு விவா­திக்க முன்­வ­ர­வில்லை. ஆனால் ஒரு அர­சியல் தலைவர் என்ற வகையில் இந்­தியப் பிர­தமர் மோடியின் மலை­யக விஜயம் மக்­க­ளுக்கு மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்று கூறலாம். இந்­தி­யா­விற்கும் மலை­யக மக்­க­ளுக்­கு­மி­டை­யி­லான தொப்­புள்­கொடி உறவை இந்­தியப் பிர­தமர் இந்த விஜ­யத்தில் நினை­வூட்­டி­யுள்­ளமை மிக முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

ஆனால் வடக்கு, கிழக்கு மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் இந்­தியப் பிர­தமர் மோடி எந்­த­ளவு தூரம் அவர்­களின் பிரச்­சி­னை­களை பிர­தி­ப­லித்தார் என்­பது கேள்­விக்­குறி­யாக உள்­ளது. சர்­வ­தேச வெசாக் தின ஆரம்ப நிகழ்வில் உரை­யாற்­றிய இந்­தியப் பிர­தமர் மோடி இலங்கை, இந்­தி­யா­விற்­கான உறவு தொடர்­பிலும் வர்த்­தக பொரு­ளா­தார தொடர்­புகள் குறித்தும் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

ஆனால் நீண்­ட­கால ரீதி­யாக காணப்­படும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்பில் எந்­த­வி­த­மான கருத்­துக்­க­ளையும் அவர் வெளி­யி­ட­வில்லை. இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உறவைப் பற்றி உரை­யாற்­றிய மோடி இந்த நாடு இந்­த­ளவு தூரம் பின்­ன­டை­வு­களை நோக்கி சென்­ற­மைக்கு கார­ண­மான தேசிய இனப்­பி­ரச்­சினை குறித்தோ அதற்­கான தீர்வு குறித்தோ, பெரி­தாக எத­னையும் பிரஸ்­தா­பிக்­க­வில்லை.

வடக்கு, கிழக்கு மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­தர தீர்வை விரை­வாக காண்­பதன் மூலமே இந்­த­நாடு முன்­னேற்­றத்தை நோக்கி பய­ணிக்கும் எனும் வகை­யி­லான எந்­த­வொரு கருத்­தையும் அவர் முன்­வைக்­க­வில்லை. மேலும் மலை­ய­கத்­திற்கு சென்று உரை­யாற்­றிய இந்­தியப் பிர­தமர் மோடி வடக்கு, கிழக்கு பிரச்­சினை தொடர்பில் எந்­த­வொரு கருத்­தையும் முன்­வைக்­க­வில்லை.

இது வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்­களின் இந்­தியா மீதான நம்­பிக்கை தொடர்பில் கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இலங்­கையின் தமிழ் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சினை தொடர்­பான தீர்வு விவ­கா­ரத்தில் இந்­தியா மிகப்­பெ­ரி­ய­தொரு வகி­பா­கத்தை வகிக்­க­வேண்­டு­மென தமிழ் பேசும் மக்கள் எதிர்­பார்த்து காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

இந்த விட­யத்தில் இந்­தியா மீது வடக்கு, கிழக்கு மக்கள் அசைக்க முடி­யாத நம்­பிக்­கையை வைத்­தி­ருக்­கின்­றனர். அவ்­வா­றான நிலையில் இலங்­கைக்­கான இரண்­டுநாள் விஜ­யத்தின் போது நடை­பெற்ற இரண்டு பொதுக்­கூட்­டங்­க­ளிலும் இந்­தியத் தலைமை வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் எத­னையும் பிரஸ்­தா­பிக்­காமை மக்கள் மத்­தியில் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

விசே­ட­மாக மோடியின் இலங்கை விஜ­யத்தின் இறுதி அங்­க­மாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பு நடை­பெற்­றது. அந்த சந்­திப்பில் தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள், அவர்கள் எவ்­வா­றான தீர்வை எதிர்­பார்க்­கின்­றனர், இந்த விட­யத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு என்ன என்­பவை தொடர்பில் இந்­தியப் பிர­த­ம­ருக்கு கூட்­ட­மைப்பு விரி­வாக எடுத்­து­ரைத்­தி­ருந்­தது.

அவற்றை இந்­தியப் பிர­தமர் உள்­வாங்­கிக்­கொண்டார். எனினும் கொழும்­பிலும், மலை­ய­கத்­திலும் நடை­பெற்ற இரண்டு பொது நிகழ்­வு­க­ளிலும் வடக்கு, கிழக்கு மக்­களின் தேசிய அர­சியல் பிரச்­சினை தொடர்பில் எதுவும் பிரஸ்­தா­பிக்­கா­மையே கவ­லையை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

இலங்கை தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு விட­யத்தில் இந்­தியா காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை வழங்­கு­வ­தா­கவே மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். இந்­தியா இதற்­கான இரா­ஜ­தந்­திர ரீதி­யான காய்­களை நகர்த்­து­வ­தா­கவே அனை­வரும் நம்­பு­கின்­றனர். எனினும் தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் வகையில் இந்­தியத் தலைமை இலங்­கையில் ஒரு கருத்தை வெளி­யிட்­டி­ருந்தால் அது மேலும் வரவேற்கக்கூடியதாக இருந்­தி­ருக்கும் என்­பதே மக்­களின் கருத்­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

அது­மட்­டு­மன்றி இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­தி­ர­மோடி திடீ­ரென நேற்று முன்­தினம் இரவு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இந்­தியப் பிர­த­மரின் இலங்கை விஜ­யத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. இது ஒரு மரி­யாதை நிமித்­தமா­ன சந்­திப்பு எனக் கூறப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் அங்கு என்­ன­வி­ட­யங்கள் பேசப்­பட்­டன என்­பது தொடர்பில் எவ்­வி­த­மான தக­வல்­களும் வெளி­வ­ர­வில்லை.

அது­மட்­டு­மன்றி தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதில் அர­சியல் தீர்வை உள்­ள­டக்கும் செயற்­பா­டுகள் மிகவும் மந்த கதி­யி­லேயே இடம்­பெற்று வரு­கின்­றன. குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு உட்­ப­டுத்­து­வது தொடர்­பில் பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை.

அது­மட்­டு­மன்றி வடக்கு, கிழக்கை இணைத்து உச்­ச­பட்ச அதி­கா­ரத்தை பகிர்தல், சமஷ்டி முறை­யி­லான தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைத்தல் ஆகிய விட­யங்­களில் தமிழர் தரப்­பிற்கும் பெரும்­பான்மை தரப்­பிற்­கு­மி­டையில் பாரிய முரண்­பா­டுகள் நீடித்து வரு­கின்­றன. அந்த வகையில் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்­வுத்­திட்ட விட­யத்தில் இந்த அர­சாங்­கத்­திலும் மிகவும் மந்­த­க­தி­யான நிலை­மை­களே தொடர்­கின்­றன. பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எப்­ப­டி­யா­வது தீர்­வுத்­திட்­ட­மொன்றை பெற்­று­விட வேண்டும் என்ற நோக்கில் இரா­ஜ­தந்­தி­ர ரீ­தியில் காய்­களை நகர்த்­தி­வ­ரு­கி­றது. எனினும் தற்­போ­தைய நிலை­மை­யா­னது மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தாக இல்லை.

மிக நீண்­ட­கா­லத்­திற்குப் பின்னர் ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­கின்­றது. பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்திருப்பதுடன் இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. எனினும் தீர்வை நோக்கி பயணிப்பதில் முட்டுக்கட்டைகளும் தடைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் சரியானதீர்வை பெற்றுக்கொள்ள இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்.

இந்த விடயத்தில் இந்தியா இதயசுத்தியுடன் செயற்படவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அந்த எதிர்பார்ப்பை இந்தியா பூர்த்தி செய்யவேண்டும். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் இந்தியப் பிரதமர் இரண்டாவது தடவையாகவும் இலங்கைக்கு விஜயம் செய்துவிட்டார். ஆனால் இதுவரை உறுதியான தீர்வுத்திட்டத்திற்கான அடித்தளம் இடப்படவில்லை.

இந்த நிலையிலேயே இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் அமைந்திருக்கிறது. தற்போது இந்தியா மீது தமிழ் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாமல் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை பிரயோகித்து தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்கவேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமையாகும். மீண்டும் ஒருமுறை இந்தியப் பிரதமர் இலங்கை வந்து சென்றுள்ளார். இனியாவது தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு பிறக்கின்றதா எனப் பார்ப்போம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-13#page-3

  • தொடங்கியவர்

பாரதப் பிரதமரின் விஜயத்தால் தோட்டத் தொழிலாளர்களின் கூடையில் நிறைந்தது என்ன?

 

 

பாரதப் பிரதமரின் விஜயத்தால் தோட்டத் தொழிலாளர்களின் கூடையில் நிறைந்தது என்ன?
 

பாரதப் பிரதமரின் மலையக விஜயம் அரசியல் அரங்கை மாத்திரமல்லாது மலையக மக்களின் வாழ்க்கையிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக தேர்தல்கோலம் பூண்டிருந்த ஹட்டன் நகர் இன்று வழமைக்கு திரும்பியுள்ளது.

சுவரொட்டிகள், பிரம்மாண்டமான பதாகைகள், வர்ணக்கொடிகள் ஆகியன தேர்தல் களத்தை மீண்டும் நினைவூட்டிச் சென்றன.

ஆயினும், இவையனைத்தும் வாக்குறுதியளித்து வாக்குப்பெற்று மறையும் தேர்தலுக்காகவல்ல.

பாரதப் பிரதமரை வரவேற்கவும், தமது அரசியல் கட்சியின்பால் மோடியின் கவனத்தை ஈர்க்கவும் கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்ட நாடகங்களே இவை.

நோர்வூட்டில் இடம்பெற்ற வீதி மறிப்பும், தகாத வார்த்தைப் பிரயோகமும் மலையகத் தலைமைகளை கூனிக்குறுகவே செய்ததன்றி, தலை நிமிரவா செய்தது?

தேயிலைச்செடி பறித்துக் கூனிப்போன தோட்டத்தொழிலாளர்களின் கூடையில் இறுதியில் நிறைந்தது தான் என்ன?

விருந்தோம்பல் பண்பைப் பறைசாற்றுவதற்காய், விழாவுக்கான ஏற்பாடுகளிலும் பிரசாரங்களிலும் தீவிரம் காட்டிய அரசியல் தலைமைகள் பாராட்டப்படட்டும்.

ஆனாலும், டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பெயர்ப்பலகையில் தமிழ் மெல்லச் செத்திருப்பதையும் சற்று அவதானித்திருக்க வேண்டாமா?

பிரதமர் மோடியின் வருகையினால், குன்றும் குழியுமான வீதிகள் அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டு மறுவடிவம் பெற்றன.

வெளிநாட்டுத் தலைவரிடம் நன்மதிப்புப்பெறும் முனைப்பை, மலையக மக்கள் இன்றும் நடந்தே பயணம் செய்யும் ஏனைய வீதிகளை செப்பனிடுவதிலும் காட்ட வேண்டும் என்பதே மக்களின் அங்கலாய்ப்பு.

இரத்தம் உறிஞ்சும் அட்டைகள், தினந்தோறும் தாக்கும் குளவிகள் இவற்றுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இசைவாக்கமடைந்திருக்கிறார்கள்.

மக்கள் அவதியுற்றபோது அகற்றப்படாத குளவிக்கூடுகள், பாரதப் பிரதமரின் விஜயத்தால் வெகுவிரைவாகக் கலைக்கப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டர்களில் இருந்து வெளியேறிய காற்றுக்குக்கூட தாக்குப்பிடிக்காத குடியிருப்புக்கூரைகள், மறைக்கப்பட்டிருக்கும் மலையக மக்களின் வாழ்வியலின் அவலத்தை தெளிவாகக் காட்டியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

வாகனப் போக்குவரத்தையே கண்டிராத மலையகத்தின் சில வீதிகளில் நேற்று முழுவதும் மக்களை ஏற்றிச்செல்வதற்கான இலவச பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

வெளிநாட்டுத் தலைவர்களின் வருகையால் தலைநகரில் குறுநேரப் பயணமும் நெடுநேரப் பயணமாவது வழமை.

ஆனால், இம்முறை மலையகத்தின் முக்கிய நகரங்கள் சிலவற்றையும் இந்த நிலைமை ஆக்கிரமித்திருந்ததுடன், பொதுப்போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன.

ஏனைய தேவைகளுக்காக செல்லும் மக்கள், பஸ்கள் சேவையில் ஈடுபடாததால் நேற்றைய தினம் முழுவதும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இவர்களுக்கான மாற்றுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படாமைக்கு பொறுப்புக்கூறுவது யார்?

அரசியல்வாதிகளின் போட்டிக்கு மத்தியில் பாரதப் பிரதமரின் கவனத்தை ஈர்த்தது யார்?

 

 

 

http://newsfirst.lk/tamil/2017/05/பாரதப்-பிரதமரின்-விஜயத்த/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ம..... இல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.