Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பிமலை முருகன் ஆலயத்திற்குச் செல்ல இராணுவத்தினரால் தடை!

Featured Replies

மட்டக்களப்பு கிரான் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடும்பிமலை முருகன் ஆலயத்துக்குச் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாக குறித்த பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாலயத்தில், வருடாந்தம் பிரதேச மக்களால் திருவிழா மேற்கொள்ளப்படுவது வழமை. இம்முறை அங்கு திருவிழா மேற்கொள்ளச் சென்ற மக்களுக்கு, குடும்பிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமின் அதிகாரிகளால், தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இடத்தில் யுத்த காலத்தின் பின்னர் பௌத்த வணக்கஸ்தலம் அமைக்கப்பட்டு, வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால், அங்கு முருகன் ஆலயத்துக்குச் செல்வதற்கு, ஆலய நிர்வாகத்தினருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் தரவையிலுள்ள உயர் இராணுவ அதிகாரி இராணுவ முகாமின் அதிகாரி பிரிகேடியர் குலதுங்கவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பின்னர் அந்த அதிகாரியின் நெறிப்படுத்தலின் பேரில், தடை நீக்கப்பட்டு, முருகன் ஆலயத்துக்குச் செல்லவும் உற்சவத்தை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், இனிமேல் இவ்வாறான தடைகள் இடம்பெறாது எனவும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் பிரிகேடியர் குலதுங்க பொதுமக்களிடம் தெரிவித்திருந்துள்ளார்.

10012_1494801117_bbbb.JPG

 

10012_1494801117_vv.JPG

http://battinaatham.com/description.php?art=10012

 

இராணுவத்தின் தடையை உடைத்த துரைராஜசிங்கம்.

10014_1494827284_bb.jpg

கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடும்பிமலை முருகன் ஆலயத்துக்குச் செல்ல இராணுவத்தினரால் விதிக்கப்பட்ட தடை, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தின் நடவடிக்கையை அடுத்து, நீக்கப்பட்டது. அவ்வாலயத்தில், வருடா வருடம் பிரதேச மக்களால் பூசைகள் மேற்கொள்ளப்படுவது வழமை. இம்முறை அங்கு திருவிழா மேற்கொள்ளச் சென்ற மக்களுக்கு, குடும்பிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமின் அதிகாரிகளால், தடைவிதிக்கப்பட்டது. மேற்படி இடத்தில் யுத்த காலத்தின் பின்னர் பௌத்த வணக்கஸ்தலம் அமைக்கப்பட்டு, வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அங்கு முருகன் ஆலயத்துக்குச் செல்வதற்கு, ஆலய நிர்வாகத்தினருக்குத் தடை விதிக்கப்பட்டது. குறித்த விடயத்தை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கத்தின்  கவனத்துக்கு ஆலய நிர்வாகத்தினர் கொண்டு வந்ததையடுத்து,

தரவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் அதிகாரி பிரிகேடியர் குலதுங்கவுடன்  மேற்கொண்ட கலந்துரையாடலின்போது, மேற்படி விடயம் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் அந்த அதிகாரியின் நெறிப்படுத்தலின் பேரில், தடை நீக்கப்பட்டு, முருகன் ஆலயத்துக்குச் செல்லவும் உற்சவத்தை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இனிமேல் இவ்வாறான தடைகள் இடம்பெறாது எனவும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் பிரிகேடியர் குலதுங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://battinaatham.com/description.php?art=10014

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

வர வர  வற்றி நாதம் கூட செமையா செய்தி போடுறான் பாருங்கள் இந்த ஐயா ஏதோ விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போட்டோவை போட்டு தடையை உடைந்தார் சிங்கம் என்று போடுறார்கள் பேசி தீர்ப்பதெல்லாம் தடையை உடைப்பதென்றால் ??  தடையை உடைப்பதை என்ன வென்று சொல்லுவாங்களோ ?? 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவை பப்பாளிமர உச்சிலை ஏற்றிவைச்சி அழகுபார்க்கணுமின்னு யாருக்கோ விருப்பமென்டா செய்யட்டுமே நமக்கென்ன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.