Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடம் பயிற்சி பெற்று திரும்பிய 19 பேரில் 14 பேர் சிங்கள இளைஞர்கள்

Featured Replies

அண்மைக்காலங்களில் பொலிஸ் துறையினர் இரகசியப் புலனாய்வுத் துறையினர், இராணுவத்தரப்பினருக்கு மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்திருக்கும் தகவல்களைத் தொடர்ந்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் திரும்பியுள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பினரைச் சேர்ந்த தமிழ் உறுப்பினர்கள் மட்டுமன்றி இயக்கத்தில் இணைந்துள்ள சிங்கள இளைஞர்களும் அடங்கிய குழுவினர் தற்போது மத்திய மாகாணப் பிரதேசங்களில் செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும், இவர்கள் புலிகள் இயக்க முகாம்களில் தீவிர ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடனும் பாரிய வெடி தயாரிப்பதற்கான வெடி மருத்துப் பொருட்களுடனும் தாக்குதல்களை நடத்துவதற்குத் தயாராக மலைநாட்டுப் பிரதேசங்களில் ஒளிந்திருப்பதாகவும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இவர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்வதற்காக கடந்த 18 ஆம் திகதியிலிருந்து விசேட இராணுவப் பிரிவினரும், பொலிஸ் பிரிவினரும் தீவிர தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி விசேட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுவதற்காக கொழும்பு பொலிஸ் தலைமையகத்தைச்சேர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் பாதுகாப்புத்துறையால் நுவரெலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு மேலதிக பொலிஸ் பிரிவினரும், இராணுவத்தினரும் தேவைப்படுவதால் கூடுதலான பொலிஸாரும், இராணுவத்தினரும் தற்போது மத்திய பிரதேசங்களுக்கு பாதுகாப்புத்துறையால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு களுத்துறைப் பொலிஸ் படைப் பயிற்சி மத்திய நிலையத்திலிருந்து பொலிஸ் படையணியினரும், கண்டி பிரதான இராணுவ முகாமிலிருந்து இராணுவப் படையணியினரும் தற்போது மேற்படி விசேட தேடுதல் நடவடிக்கைக்கான மத்திய நிலையமாகிய நுவரெலியாவுக்கு வந்து சேர்ந்திருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லங்காதீபவுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மத்திய பிரதேசங்களில் புலிகள் இயக்க தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பகுதிகளிலும், ஏற்கனவே அவ்வாறு சந்தேகத்துக்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள பகுதிகளிலும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். இவ்வாறான இடங்களில் ஒன்றாகிய நுவரெலியாவைச் சேர்ந்த மஹகஸ்தோட்ட பகுதியில் வடபகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒளித்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும், வெடிகுண்டுப் பொருட்களும் அடங்கிய ஒரு தொகுதிப் பொருட்களை அண்மையில் நுவரெலியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்துக் கைப்பற்றியிருந்தனர்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பு மலையகப் பிரதேசங்களில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடுவதுபற்றி மேலும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்திருக்கும் முக்கிய தகவல்களுக்கேற்ப, புலிகள் இயக்கத்தினால் ஏற்கனவே மத்திய பிரதேசங்களிலிருந்து ஒரு தொகுதி இளைஞர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் தமிழ், சிங்கள இரு இனத்து இளைஞர்களும் அடங்குவர் எனவும், இவர்கள் தற்போது கிளிநொச்சியில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் மலைநாட்டுப் பிரதேசங்களுக்குத் திரும்பிவிட்டதாகவும், தாக்குதலுக்குத் தயாரான நிலையில் குறிப்பிட்ட பிரதேசங்களில் பாதுகாப்பாக ஒளிந்திருப்பதாகவும் மேலும் குறித்த புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு புலிகள் இயக்கத்தினரிடம் ஆயுதப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு திரும்பியவர்கள் எனக் கருதப்பட்ட ஆசிரியர் தொழில் புரியும் மூன்று தமிழ் இளைஞர்களை கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் றாகலை பிரதேசத்தில் வைத்து மூன்று நாட்களுக்கு முன்னர் கைது செய்திருந்தனர். இவர்களிடம் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தீவிர புலன்விசாரணைகளிலிருந்தே மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள், நடமாட்டங்கள் பற்றிய முக்கியமான பல தகவல்கள் கிடைத்ததாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களில் 19 நபர்கள் கிளிநொச்சியில் புலிகள் இயக்க முகாம்களில் ஆயுதப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு திரும்பியவர்கள் என்றும் இவர்களில் ஐந்துபேர் மட்டுமே மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என்றும், ஏனைய 14 நபர்களும் சிங்கள இளைஞர்கள் எனவும் புலனாய்வுத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் இரண்டுபேர் புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்களாவர். இதைத்தொடர்ந்து புகையிரதத் திணைக்கள ஊழியர் சங்கம் ஒன்றின் தலைவர் உட்பட சந்தேகத்துக்கிடமான மூன்று ஊழியர்களிடம் பொலிஸ் புலனாய்வுத் தரப்பு மேற்கொண்ட விசாரணைகளின்போது இவ்வாறு புலிகள் இயக்கத்தினருக்கும் தெற்கே வசிக்கும் ஒரு சில முக்கிய நபர்களுக்குமிடையே இருந்துவந்த நெருங்கிய தொடர்புகள் பற்றிய விரிவான விபரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தரப்பு தெரிவித்துள்ளது குறித்து புகையிரதத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் உதவியுடனேயே அவர்களால் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களிலிருந்து புலிகள் இயக்கத்தினரின் பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கண்டு பிடித்துக் கைப்பற்ற முடிந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- லங்காதீப: 19/02/2007-

http://www.thinakkural.com/news/2007/2/21/...s_page21790.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.