Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செத்தும் சாகாத நிலையில் செயலிழந்து கிடக்கும் உடன்பாடு.

Featured Replies

செத்தும் சாகாத நிலையில் செயலிழந்து கிடக்கும் உடன்பாடு.

அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்துக்கு வழிசெய்த புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு இன்றுடன் ஐந்து வயது கடந்து விட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருக்கின்றமை போல செயலிழந்து, செல்லரித்து, உக்கி, உருக்குலைந்து வெறும் காகிதமாகி இருக்கின்றது அந்த உடன்பாடு. என்றாலும் பெயரளவிலேனும் அது நின்று, நிலைத்து, நீடிக்கின்றது என்பதே யதார்த்தம்.

நிழல் யுத்தம் ஒன்று தனது கோரமான நிஜ முகத்தை மூடிக்கொண்டு இங்கு தொடர்வதற்கு இடமளித்து செயலற்றுச் செத்துக்கிடக்கிறது யுத்த நிறுத்த உடன்பாடு. அதனைக் கிழித்தெறியும்படி பௌத்த சிங்களப் பேரினவாதம் எகிறும் போதும் அப்படிச் செய்யத் தனக்கு விருப்பமும் ஆசையும் இருந்தும் பெயரளவிலேனும் அதைக் கிழித்தெறியாமல், அது நடைமுறையில் இருப்பதுபோல பாசாங்கு பண்ணுகிறது பாவனை செய்கிறது தென்னிலங்கை அரசுத்தலைமை. அதற்கான சில காரணங்களை நேற்று இப்பத்தியில் பார்த்தோம். இன்னும் சில காரணங்களை இன்று நோக்குவோம்.

யுத்த நிறுத்த உடன்பாட்டை பெரியளவில் வெளிப்படையாகவே பகிரங்கமாகவே மீறும் வகையில் பெரும் படையெடுப்புகளையும் இராணுவ நடவடிக்கைகளையும் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளையும் மேற்கொண்டுவரும் அரசுத்தரப்பு, அந்த உடன்பாட்டைக் கிழித்தெறிவதாகவோ அல்லது அதிலிருந்து வெளியேறுவதாகவோ வெளிப்படையாக அறிவிக்கப் பின் நிற்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்று சர்வதேச அழுத்தம் என்பது யாவருக்கும் தெரிந்த விடயம்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வுகாண்பதில் சிரத்தை ஏதுமின்றி, இராணுவ நடவடிக்கை முனைப்பில் இலங்கை அரசு தீவிரமாக இருக்கின்றது என்ற அதிருப்தியும் விசனமும் சர்வதேச சமூகத்தில் மேலோங்கி வரும் வேளை இது. இதற்காக இலங்கை அரசுக்கு எதிராகத் தனது கசப்புணர்வை வெளிப்படுத்துவதற்கான வழிவகைகள், நடைமுறைகள் மற்றும் சர்வதேசக் கட்டுப்பாடு விதிப்புகள் போன்றவை குறித்து சர்வதேச மட்டத்தில் பல்வேறு அரங்குகளில் நிலைகளில் சர்வதேச சமூகம் ஆராய்ந்து வரும் காலகட்டமும் இது.

இந்தச் சமயத்தில் யுத்தநிறுத்த உடன்பாட்டிலிருந்து வெளியேறும் அறிவிப்பை இலங்கை அரசுத்தரப்பு தானாக விடுக்குமானால் அதன் விளைவு, இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விபரீதமாகிவிடும் என்பதும் அரசுத் தலைமைக்கு நன்கு தெரியும்.

எனவே, யுத்த நிறுத்தத்தைப் பேணி, மதிப்பதாக வெளியே கூறிக்கொண்டு, அதேசமயம், அதை மீறும் வகையிலான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன்மூலம் விடுதலைப்புலிகள் தரப்பை சீற்றமுறவைத்து, யுத்தநிறுத்தத்திலிருந்து வெளியேறும் இக்கட்டுக்குப் புலிகளைத் தள்ளும் இரட்டைத் தந்திரோபாயத்தைக் கையாள்கிறது அரசுத் தலைமை.

இதன்மூலம் இரண்டு இலக்குகளை அடையலாம் என அது நினைக்கிறது. ஒன்று புலிகளைக் கொண்டே யுத்த நிறுத்த உடன்பாட்டை முறிக்க வைத்து, யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து வெளியேறலாம். அடுத்தது யுத்த நிறுத்தம் முறிந்ததற்கான முழுக் குற்றத்தையும் பொறுப்பையும் புலிகள் மீது சுமத்தலாம்.

இந்தக் குள்ளநரித்தனம் புரிந்து கொண்டமையால்தான் இவ்வளவு ஆத்திரமூட்டலுக்கு மத்தியிலும் சில உள்நோக்கங்களோடு காலம், இடம், வலி அறிந்து காத்திருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள் எனக் கொள்ளலாம்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள அரசுத்தரப்பு பின்னடிப்பதற்கான மற்றைய காரணம், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிந்து, முழு அளவில் யுத்தம் தீவு முழுவதும் வெடிக்குமானால் அதன் நேரடியான விபரீதமான மோசமான கோரமான கொடூரமான முகத்தையும் விளைவுகளையும் சந்திக்க வேண்டும் என்ற அச்சநிலையாகும்.

கொடூரப் போர் வெடிக்குமானால் இழப்புகளை மனித உயிர் மற்றும் உடைமைகளை மட்டுமல்லாமல் பொருளாதாரம், சுபீட்ச வாழ்வு, நாட்டின் எதிர்கால நலன், சர்வதேச மட்டத்தில் நற்பெயர், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை எனப் பலபல பேரிழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற யதார்த்த மெய்யுண்மை தென்னிலங்கையைப் பீதிக்குள் ஆழ்த்தாமல் இல்லை.

தனது இராணுவ ரீதியான பலம் தொடர்பாக அளவுக்கு அதிகமாகத் தானே பிரசாரம் செய்து, தென்னிலங்கை மக்களை ஒரு மாயையான எதிர்பார்ப்புக்குள் ராஜபக்ஷ அரசு மூழ்க வைத்திருக்கின்றது. யுத்தம் வெடித்து, தென்னிலங்கை மக்களின் அந்த அதீத நம்பிக்கையை எதிர்பார்ப்பை சிதறடிக்கும் பெறுபேறுகள் வெளிப்படுமானால் தனது பிரசாரத்துக்குத் தானே பலியாகும் பேராபத்து அரசுத் தரப்புக்குநேரும். அது கருதியும் யுத்த நிறுத்தத்தைத் தொடரவேண்டிய கட்டாயம் தெற்குக்கு. மேலும், யுத்த நிறுத்தம் முறியாமல் இன்னும் தொடருமானால் இப்போது மேலதிகமாகக் கிடைக்கும் கால அவகாசத்தை வைத்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடமிருந்து ஆயுத தளபாடங்களை வாங்கிக் குவிக்கும் தனது திட்டத்தை கனகச்சிதமாக நிறைவு செய்து தனது படைப்பலத்தை ஒரேயடியாக விஸ்வரூபம் எடுக்கவைத்து அதன்பின் புலிகளை முழு யுத்தத்தில் எதிர்கொண்டால் வெற்றிவாகை நிச்சயமாக கிட்டும் என்ற நம்பிக்கையும் அரசுத் தலைமைக்கு உண்டு.

அத்தோடு, யுத்த நிறுத்த உடன்பாட்டை இம்முறை முறித்தால் இனி இப்போதைக்கு அமைதி முயற்சி, சமாதானப் பேச்சு, சமரச எத்தனம், நல்லிணக்க உடன்பாடு என்பவை எல்லாம் இந்த ஜென்மத்திலும் வாய்க்காத விடயங்களாகிவிடும் என்ற உண்மையும், உடன்பாட்டிலிருந்து விலகும் விருப்பை நடைமுறைப்படுத்த விடாது அரசுத்தரப்பைத் தடுக்கின்றது.

விரும்பியும், விரும்பாமலும் யுத்த நிறுத்த உடன்பாட்டை பெயரளவுக்கேனும் பின்பற்றுவதாக அரசுத்தரப்பு பாவனை பண்ணுவதற்கு இந்த அம்சங்களே பிரதான காரணம்.

-Uthayan-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.