Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இந்தப் பூமி இன்னுமின்னும் இரத்தத்தில் தோய வேண்டுமா?’

Featured Replies

‘இந்தப் பூமி இன்னுமின்னும் இரத்தத்தில் தோய வேண்டுமா?’
 

image_5a87769fc1.jpgஇந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா? அதற்கு இடமளிக்க முடியாது” என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 

 

நாட்டின் சில பாகங்களில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கை காரணமாக, முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண பொதுமக்களே முயலும் நிலை ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. 

 

ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க, நிலையியல் கட்டளையின் கீழ், கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இனவாதச் செயற்பாடுகளை மீண்டும் தூண்டும் வகையிலான செயற்பாடுகள் நாட்டில் இடம்பெற்று வருகின்றன. 

“சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதம், மதவாத்தை தூண்டும் வகையில் சிலரால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 

“30 வருடங்களாக, இந்த நாட்டு மக்கள் போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மீண்டும் அவ்வாறான நிலைக்கு இடமளிக்க முடியாது.  

“அண்மைய காலங்களில் இடம்பெறும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. வில்பத்து விவகாரம், தொல்பொருள் இடங்கள் அழிக்கப்படுகின்றமை, முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் ஆகியவை தொடர்பில், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

“நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும் நிறுவனங்கள் இருந்தாலும் அவையும் இதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனங்கள் தமது கடமையை செய்ய தவறும் பட்சத்தில் தங்களது பிரச்சினைக்குத் தீரவுக்காண்பதற்கு பொதுமக்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/‘இந்தப்-பூமி-இன்னுமின்னும்-இரத்தத்தில்-தோய-வேண்டுமா-’/175-197276

  • தொடங்கியவர்

இன­வாத முறுகல் நீடித்தால் மக்கள் வீதியில் இறங்­கு­வதை தவிர்க்க முடி­யாது

22-1693cd9160efa3e89a7d9ffecc743da0692e19e5.jpg

 

அர­சாங்கம் இந்த நிலை­மையை விரும்­பு­கின்­றதா ? அநுர எம்.பி.கேள்வி

 (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டில் உள்ள அனைத்து முஸ்­லிம் மக்­களும் எமக்கு எப்­போது என்ன நடக்கும் என்ற அச்­சத்தில் வாழ்ந்து வரு­கின்­றனர் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க நேற்று சபையில் தெரி­வித்தார்.  

இன­வாத முறுகலை முடி­வுக்கு கொண்­டு­வ­ராத நிலைமை தொட­ரு­மாயின்; மக் கள் வீதியில் இறங்கி இரத்தம்  சிந்­து­வது நிச்­சயம். அத­னையா அர­சாங்கம்  விரும்­பு­கின்­றது எனவும் அவர் கேள்வி எழுப்­பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 கீழ் இரண்டில் கேள்வி எழுப்­பிய மக்கள் விடு­தலை முன்­னணி தலைவர் அநுர குமார திஸா­நா­யக்க தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,  

தற்­போது நாட்டில் மீளவும் இன­வாத , மத­வாதம் மீளவும் தலை­தூக்­கி­யுள்­ளது. சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு இடையில் முறுகல் நிலையை தோற்­று­விப்­ப­தற்கு சில குழுக்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. இதன்­படி இன­வாத நோக்­கத்­துடன் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன.

30 வருட யுத்­தத்­திற்கு முகங்­கொ­டுத்து இரத்­தமும் கண்­ணீரும் சிந்­திய அனு­ப­வத்தை கொண்ட நாம் மீளவும் அவ்­வா­றான நிலை­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. எனினும் இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு எதி­ராக எந்­த­வொரு நட­வ­டிக்­கை­களும் எடுக்­க­வில்லை. தற்­போது இன­வாத நடத்­தை­க­ளுக்கு அர­சாங்கம் உடந்­தை­யாக செயற்­ப­டு­வ­தா­கவே தெரி­கின்­றது.

இதன்­படி வில்­பத்து வன அழிப்பு, காணிப்­பி­ரச்­சினை தீர்வு, தொல்­பொ­ரு­ளி­யியல் இடங்கள் தொடர்­பான பிரச்­சினை, முஸ்­லிம்­களின் வர்த்­தக மற்றும் பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு இது­வரை தீர்க்­கப்­ப­ட­வில்லை. இரு தரப்­பிலும் இருக்கும் இன­வா­தி­க­ளினால் இந்த நாடு பல விளை­வு­களை சந்­தித்­துள்­ளது. அளுத்­கம பிர­தே­சத்­திலும் இவ்­வா­றான நிலைமை ஏற்­பட்­டது.

எனவே இந்த பிரச்­சினை தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன? அர­சாங்கம் இதனை நடக்­க­விட்டு பார்க்­கின்­றது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. தற்­போது முஸ்­லிம்கள் எமக்கு எப்­போது என்ன நடக்கும் என்ற அச்­சத்தில் வாழ்ந்து வரு­கின்­றனர். இந்த நிலைமை தடுக்க ஏன் அரசு தலை­யி­ட­வில்லை எத்­தனை வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன? இன­வா­தத்தை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளன.எத்­தனை பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இது தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.

இனவாத முறுகல் நிலையை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவராமல் அரசாங்கம் தொடர்ந்து செயற்படுமாயின் மக்கள் பொல்லுகளுடன் வீதியில் இறங்கி இரத்தம் சிந்தும் அபாயம் ஏற்படும். இதற்கு தான் அரசாங்கம் விருப்புகின்றதா என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.