Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எந்தத்தரப்பும் போர் நிறுத்தத்தில் இருந்து விலகவில்லை': நோர்வே தூதுவர்

Featured Replies

hans20060117.jpgநோர்வே அரசு, விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் தொடர்ந்து சமாதான அனுசரணையாளராக தொழிற்பட விரும்புகிறது. அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உதவிகள் புரியவும் தயாராக உள்ளது."

இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்தாவது வருடத்தை நிறைவு செய்வதை முன்னிட்டு, தேசிய அமைதி சபையினால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டு நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு.

கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

"இந்த வருடம் பெப்ரவரி 22 ஆம் நாளுடன் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்கின்றது. எனினும் போர்நிறுத்தம் முன்னர் இருந்ததை விட மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. நான் இந்த சந்தர்ப்பத்தில் போர் நிறுத்தத்தின் மூலம் பெறப்பட்ட சில அனுகூலங்களை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இருபது வருடங்களுக்கு இடம்பெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு போர் நிறுத்தம் உருவாக்கப்பட்டது. இந்த 20 வருடங்களில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்து இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்.

போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் நிலைமையில் அதிக முன்னேற்றம் தென்பட்டது. நாளாந்தமும் ஏற்படும் வெடிகுண்டுப்பீதி, பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் என்பன வெகுவாக குறைந்திருந்தன. பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினார்கள். பிள்ளைகள் செல்லும் பேரூந்துகள் ஆபத்தான நேரத்தில் ஆபத்தான இடத்தினால் செல்லும் என்ற அச்சம் அவர்களுக்கு இல்லை. இன்று காணப்படும் பாதுகாப்பு கண்காணிப்பு நிலைகள் எல்லாம் பெருமளவில் காணாமல் போயிருந்தன. நாட்டின் எல்லா வீதிகளும் திறந்திருந்தன.

எனக்கு நன்கு நினைவிருக்கின்றது, எப்படி மக்கள் திருகோணமலை கடற்கரையிலும் மட்டக்களப்பு தேசிய பூங்காவிலும், யாழ்ப்பாணத்தில் உள்ள நன்பர்கள் வீட்டிலும் தமது நாட்களை இனிமையாக கழித்தார்கள் என்று.

மிக முக்கியமாக மக்கள் கொல்லப்படுவது மிகவும் குறைந்திருந்தது. தொடர்ச்சியான வன்முறைகள் குறைவடைந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. போர் நிறுத்தம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதுடன், காயங்களில் இருந்தும் மக்களை காப்பாற்றியிருந்தது.

போர் நிறுத்தம் விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்கும் இடையில் நேரடியான பேச்சுவார்த்தைக்கும் வழி சமைத்து கொடுத்திருந்தது. அது அரசியல் பேச்சுக்களாகவும் மாறியிருந்தன. இனப்பிரச்சனைக்கு ஒரு அமைதியான தீர்வைக் காண்பதற்கு இந்த பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

போர் நிறுத்தத்தில் பங்கு பற்றிய தரப்புக்களில் சிறிலங்காவிற்கு பொருளாதார நன்மைகளையும் போர் நிறுத்தம் ஏற்படுத்தியிருந்தது. அண்மைய உலக வங்கியின் அறிக்கையின் படி போர் நிறுத்தம் ஆரம்பித்த முதல் வருடத்தில் வடக்கில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி நான்கு மடங்காகவும் கிழக்கில் இரு மடங்காகவும் அதிகரித்திருந்ததாக தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளும் போர் நிறுத்தத்தின் பொருளாதார நன்மைகளை அனுபவித்தன. போர் நிறுத்தமும் சமாதனப் பேச்சுக்களும் வெற்றிகரமாக இருந்தன. அனைத்துலக சமூகமும் அதில் பங்கெடுத்தக் கொண்டது. இது சிறிலங்காவிற்கு அன்னிய முதலீடுகள், அன்னிய உதவிகள், பெருமளவான உல்லாசப்பயணிகள் வருவதற்கு வழியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போதைய மோதல்களால் சிறிலங்காவின் பொருளாதாரம் முன்னர் இருந்ததை விட ஒவ்வொரு வருடமும் 2/3 விகிதம் குறைந்து கொண்டு செல்வதாக உலக வங்கி அண்மையில் தெரிவித்துள்ளது. எனவே அமைதி முயற்சிகளுடன் அதிக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் இருந்து விடுபடுவார்கள்.

போர் நிறுத்தத்தின் மற்றுமொரு வெற்றியாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் நிர்மானத்தையும் அதன் பணிகளையும் கூறலாம். பெருமளவான மோதல்களை தவிர்க்கும் நோக்குடன் போர் நிறுத்த கண்காணிப்புக்குழு> கட்சிகளுடனும் பொதுமக்களுடனும் பணியாற்றியிருந்தது.

மேலும் எல்லாச் சம்பவங்களையும் வெளிக்கொண்டு வரும் முகமாகவும் அது பணியாற்றியிருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் இரு தரப்புக்களுடனும் கண்காணிப்புக்குழு ஒத்துழைத்தமையால் பல ஆபத்தான சந்தர்ப்பங்களில் மோதல்கள் தவிர்க்கப்பட்டதாக நான் நம்புகிறேன்.

போர் நிறுத்தமானது இடைக்கால தற்காலிகமான நடைமுறையாகும். ஆனால் இது அமைதி நடவடிக்கை மூலம் பல உயிர்களை காப்பாற்றும் என்பது எனது வலிமையான கருத்தாகும்.

இருந்த போதும், போர் நிறுத்தத்தில் பல மீறல்கள் இருக்கவில்லை எனக் கூறமுடியாது. அதன் மீறலாக அமைந்த படுகொலைகள், கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன கண்காணிப்புக்குழுவினாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடப்பட்ட மனித உரிமை மீறல்களில் சிறார் படைச் சேர்ப்பு தொடாந்து நடைபெறுகின்றது. கடந்த வருடத்தில் இது வெகுவாக அதிகரித்துள்ளது.

அனைத்துலக சுயாதீன நிபுணர் குழுக்களை இது தொடர்பாக பணியாற்றுமாறு நோர்வே கேட்டுள்ளது. அனைத்துலக மற்றும் தேசிய மனித உரிமை நடவடிக்கைகள் இன்று அவசியமானது. எல்லாத் தரப்பும் அதற்கு முழு ஆதரவைத் தர வேண்டும்.

2006 மற்றும் 2007 ஆம் வருடங்களில் இடம்பெற்ற பெருமளவிலான மோதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு நாம் சாட்சியாளர்கள். இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது.

எந்தத்தரப்பும் போர் நிறுத்தத்தில் இருந்து விலகவில்லை. எனவே அவர்கள் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த விரைவில் முயற்சி எடுப்பார்கள் என நான் வலுவாக நம்புகிறேன்.

நோர்வே அரசு விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்கும் இடையில் தொடர்ந்து சமாதான அனுசரணையாளராக தொழிற்பட விரும்புகிறது. அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உதவிகள் புரியவும் தயாராக உள்ளது. அது பயனுள்ளதாக இருக்கும் என நோர்வே உணர்கிறது. கண்காணிப்புக்குழுவும் தொடர்ந்து தனது கடமையை செய்துகொண்டு இருக்கிறது.

எல்லா இன மக்களின் ஆதரவுடனேயே சிறிலங்காவில் சமாதானத்தை கொண்டுவர முடியும் என நோர்வே வலுவாக நம்புகிறது. நோர்வே எல்லா இன மக்களின் ஆதரவு கிடைப்பதற்கு ஊக்கமளித்திருந்தது. ஆனால் அது மட்டும் உத்தரவாதம் இல்லை.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு ஒரு தீர்வைக்காண வேண்டிய பொறுப்பு அங்கு வாழும் மக்களுக்கும் அதன் தலைவர்களுக்குமே உண்டு. நோர்வே நாட்டுக்கோ அல்லது வேறு தரப்புக்கோ அல்ல. ஆனால் இதற்கு நோர்வே தனது முழு ஆதரவை தர தயாராக உள்ளது" என்றார் அவர்

http://www.eelampage.com/?cn=30869

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.