Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சிறையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த எம்.நடராஜன்’ - முக்கிய வாக்குறுதியால் கலக்கத்தில் முதல்வர் #VikatanExclusive

Featured Replies

‘சிறையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த எம்.நடராஜன்’ - முக்கிய வாக்குறுதியால் கலக்கத்தில் முதல்வர் #VikatanExclusive

 
 

நடராஜன்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, இருவரும் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட்டாரம் தீவிர ஆலோசனையில் இருப்பதாகத் தகவல் படபடக்கிறது.

சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஓரம்கட்ட வேண்டும் என்ற முடிவோடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதிய அணியை உருவாக்கியுள்ளார். அந்த அணியின் குறிக்கோளுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு அணிகளும் ஒன்றிணைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தார். இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா,இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்து, தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை, குறுக்கு வழியில் மீட்டெடுக்க முயற்சித்ததாக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், டெல்லி போலீஸரால் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அ.தி.மு.க-வில் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். அதுபோல ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிவருகின்றனர். இதையெல்லாம் சசிகலா குடும்பத்தினர் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர். அ.தி.மு.க-வின் கட்டுப்பாடு முழுவதும் சசிகலா குடும்பத்தினரிடமிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகுவதை அந்தக் குடும்பத்தினர் விரும்பவில்லை. இதனால், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் சிறையில் இருப்பதால், அடுத்த அதிகார மையத்தை அ.தி.மு.க-வில் ஏற்படுத்த அந்தக் குடும்பத்தினர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, திவாகரனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

டி.டி.வி.தினகரன்


இதுதொடர்பாகப் பேசுவதற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், டெல்லிச் சென்றார். அங்கு, சிறையில் உள்ள  டி.டி.வி.தினகரனைச் சந்தித்துப் பேசினாராம். திவாகரனை அ.தி.மு.க-வின் அதிகார மையத்துக்குக் கொண்டுவருவது தொடர்பாக, எம்.நடராஜன் தினகரனிடம் விவாதித்திருக்கிறார். ‘இனி, சிறையிலிருக்கும் வரை திவாகரன்மூலம் அ.தி.மு.க-வை செயல்படுத்துவோம். மற்றவற்றையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். விரைவில் உன்னை சிறையிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று ஆறுதலும் தேறுதலுமாகப் பேசியிருக்கிறார். அதற்கெல்லாம் தினகரனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

தற்போது அ.தி.மு.க-வில், திவாகரனை அதிகார மையத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாகவே, சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தொகுதிப் பிரச்னைகளைப் பேசிவருகின்றனர். இதற்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, கொங்கு மண்டலத்தில் உள்ள தன்னுடைய ஆதரவு நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். மத்திய அரசின் உறுதுணை இருந்தால் மட்டுமே சசிகலா குடும்பத்தினருக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று கருதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில், தனியாகவே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதில், சசிகலா குடும்ப விவகாரமும் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவல் பெற, எம்.நடராஜனைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் இது தொடர்பாகப் பேச ஆர்வம் காட்டவில்லை. எம்.நடராஜன் தரப்பினர் சிலரிடம் டி.டி.வி.தினகரன் சந்திப்புகுறித்து கேட்டபோது, “சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஒரங்கட்ட சில துரோகிகள் முயற்சித்துவருகின்றனர். அதை, சசிகலாவின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. டி.டி.வி.தினகரனுக்கு சிக்கலை ஏற்படுத்தியதிலும் சிலர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. டெல்லி வழக்கை சட்டப்படி சந்தித்துவருகிறோம். எங்கள் குடும்பத்தினரிடம் நிலவிய மனக்கசப்புகளைப் பயன்படுத்தி, சிலர் குளிர்காய்ந்துவிட்டனர். குடும்பத்தினரிடம் இதுதொடர்பாக விரிவாகப் பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனாலேயே, இப்படியான சில முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறோம். சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சிறையிலிருக்கும் வரை திவாகரன்மூலம் கட்சிப்பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்துள்ளோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த சந்திப்பு!’’ என்று தெரிவித்தனர்.

தமிழக அரசியலைத் தீர்மானித்த கட்சி அ.தி.மு.க. இப்போது, அதன் தலையெழுத்தைத் தீர்மானிக்க முக்கோண கோஷ்டிகள் முண்டா தட்டுகின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/90308-sasikala-husband-mnatarajan-met-ttvdinakaran-in-jail.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.