Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன, மத வாதத்திற்கு இடமளிக்கக்கூடாது

Featured Replies

இன, மத­ வா­தத்­திற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது

 

பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கையில் பொலிஸார் இறங்­கி­யுள்ள நிலையில் இந்த கைது நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து தப்­பிப்­ப­தற்­கான செயற்­பா­டு­களில் பொது­ப­ல­சேனா அமைப்­பினர் ஈடு­பட்டு வரு­கின்­றனர். ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு முன்னர் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன், ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன், தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோரை கைது செய்­ய­வேண்டும் என்றும் அதன் பின்னர் ஞான­சார தேரர் பொலி­ஸா­ரிடம் சர­ண­டைவார் என்றும் பொது­ப­ல­சேனா உள்­ளிட்ட பௌத்த அமைப்­பினர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

ராஜ­கி­ரியவில் உள்ள விகா­ரையில் பொது­ப­ல­சேனா அமைப்­பி­னரின் செய்­தி­யாளர் மாநாடு நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இந்த செய்­தி­யாளர் மாநாட்டில் பொது­ப­ல­சேனா அமைப்­பி­ன­ருடன் இணைந்து செயற்­படும் சிங்­கள ராவய, சிங்­கள அபி ஆகிய அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் பங்­கேற்­றனர். சிங்­கள ராவய அமைப்பின் பொதுச் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் இங்கே கருத்து தெரி­விக்­கையில் கடந்த சில கால­மாக நாட்டில் பெளத்த சிங்­களம் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. நாட்டின் புரா­தன தன்­மைகள், தொல்­பொ­ருட்கள், தேசிய வனம், பௌத்த கொள்கை என அனைத்தும் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது அடை­யாளம் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவற்றை நாம் தட்­டிக்­கேட்டால் எம்மை பௌத்த இன­வாதிகள் என விமர்­சித்து அடக்க முற்­ப­டு­கின்­றனர். ஞான­சார தேரரை இந்த நாட்டின் மிகப் பெரிய பயங்­க­ர­வா­தி­யாக சித்­தி­ரித்­துள்­ளனர். அவரை கைது­செய்ய மிகப்­பெ­ரிய திட்டம் தீட்­டி­யுள்­ளனர். இதனால் அவ­ரது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு முன்னர் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன், விக்­கி­னேஸ்­வரன், விஜ­ய­கலா, சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோரை கைது செய்­ய­வேண்டும். அதன் பின் ஞான­சார தேரர் தானாக சர­ண­டைவார் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

நாட்டில் தமிழ், முஸ்லிம் இன­வா­தி­கள் கருத்­துக்­களை முன்­வைக்­கும்­போது வேடிக்கை பார்க்கும் அர­சாங்கம் எம்மை மாத்­திரம் தடுக்க முயற்­சிக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்தில் அனை­வரும் முஸ்­லிம்­களின் நியா­யத்தை மாத்­திரம் கருத்தில் கொண்டு செயற்­ப­டு­கின்­றனர் என்றும் அவர் குற்­றம் ­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

இதே செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் டிலந்த விதா­னகே ஞான­சார தேரரை கைது செய்து சிறையில் கொலை செய்யும் திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ளது. அவரை கொலை செய்து­ வி­டு­வார்கள் என்ற அச்­சத்­தி­னா­லேயே அவர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். தேரரை கொலை செய்ய ஒரு­புறம் பொலி­ஸாரும் மறு­புறம் பாதாள உலக கோஷ்­டி­யி­னரும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். ஞான­சார தேரரை நீதி­மன்­றுக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் சுக­வீனம் கார­ண­மாக சமு­க­ம­ளிக்­க­வில்­லை­யென தெரி­வித்த போதிலும் உண்­மையில் அவர் உயிர் அச்சு­றுத்தல் கார­ண­மா­கவே அன்று சமு­க­ம­ளிக்­க­வில்லை. அவரை கொலை செய்ய சதி முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என்றும் அவர் கருத்து கூறி­யுள்ளார்.

இவர்­க­ளது கருத்­துக்கள் பொது­ப­ல­சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரரை கைது செய்யும் முயற்­சி­யி­லி­ருந்து காப்­பாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. தமிழ், முஸ்லிம் மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும், அவர்கள் மீது சிங்­கள பௌத்த இன­வா­திகள் மேற்­கொள்ளும் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­க­வுமே அந்த மக்­களின் பிர­தி­நி­திகள் குரல்­கொடுத்து வரு­கின்­றனர். அத்­துடன் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கவே அவர்கள் போராடி வரு­கின்­றனர்.

அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் முஸ்லிம் மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் அவர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் இன­வாத சக்­தி­களின் அநீ­தி­க­ளுக்கு எதி­ரா­கவும் குரல்­கொ­டுத்து வரு­கின்­றனர். முஸ்லிம் மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட தலை­வர்­க­ளான இவர்கள் அந்த மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் குரல் எழுப்பி வரு­கின்­றனர். கடந்­த­வாரம் பொது­ப­ல­சே­ன­வி­ன­ரது இன­வாத செயற்­பாட்­டுக்கு எதி­ராக அமைச்­ச­ர­வையில் கூட இவர்கள் குரல் எழுப்­பி­யி­ருந்­தனர். இவ்­வாறு அமைச்­ச­ர­வையில் அழுத்தம் கொடுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டும் இருக்­கின்­றது.

இதே­போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் உரி­மைக்­கா­கவும் அவர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வேண்­டு­மென்ற நோக்­கி­லே­யுமே வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன், இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் மற்றும் மாகா­ண­சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் ஆகியோர் குரல்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

இவ்­வாறு சிறு­பான்மை மக்­க­ளுக்­காக குரல் எழுப்­பு­ப­வர்­களை இன­வாதம் பேசு­வ­தாக கூறி அவர்­க­ளையும் கைது செய்­யு­மாறு பொது­ப­ல­சேனா அமைப்­பினர் கூறு­வது வேடிக்­கை­யான விட­ய­மாக அமைந்­தி­ருக்­கி­றது. பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சிங்­கள பௌத்த மக்­களின் உரி­மைக்­காக பேசினால் அதனை வர­வேற்­கலாம், ஆனால் அவர் சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் இன­வா­தத்தை தூண்­டி­விட்டு சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக அவர்­களை செயற்­பட வைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­கின்­றமை நிரூ­ப­ண­மா­கின்­றது.

கடந்த ஆட்­சி­கா­லத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு விதங்­களில் செயற்­பட்டு வந்த பொது­ப­ல­சேனா அமைப்­பினர் தற்­போது மீண்டும் அதே பல்­ல­வியை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர். கடந்த ஆட்­சியில் முஸ்­லிம்­களின் ஹலால் சான்­றிதழ் விவ­கா­ரத்தை பூதா­க­ர­மாக்­கிய இந்த அமைப்­பினர் முஸ்லிம் மக்கள் மீது வன்­மு­றை­க­ளையும் கட்­ட­விழ்த்­து­விட்­டனர். அதே­பா­ணி­யி­லேயே தற்­போதும் அவர்கள் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளனர். இவர்­களின் செயற்­பாடு கார­ண­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான 19 தாக்­குதல் சம்­ப­வங்­களும் இது­வ­ரையில் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. எனவே இத்­த­கைய அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கு இனியும் இட­ம­ளிக்க முடி­யாது என்­ப­த­னா­லேயே ஞான­சார தேரரை கைது­செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

தமது அடா­வ­டித்­த­னத்தை நியா­யப்­ப­டுத்தும் வகையில் அவர்கள் இந்­தி­யா­விற்கு ஆத­ர­வா­கவும் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். இந்­தி­யாவை பல­வீ­னப்­ப­டுத்தும் நோக்கில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­த­மொன்றை தலை­தூக்க வைக்கும் வகையில் இலங்­கையில் பிராந்­தி­யத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அந்த அமைப்­பினர் குற்­றம்­சாட்­டி­யுள்­ளனர். இந்­தி­யாவின் ஆத­ரவைப் பெறும் வகை­யி­லேயே அவர்­களின் இந்த முயற்சி அமைந்­தி­ருக்­கின்­றது. ஆனால் பொது­ப­ல­சே­னா­வி­னரின் இத்தகைய செயற்­பா­டுகள் தம்மைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­கான வியூ­கங்­க­ளா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன.

கடந்த சில மாதங்­க­ளா­கவே பொது­ப­ல­சேனா அமைப்­பி­னரின் செயற்­பா­டுகள் மெல்ல மெல்ல அதி­க­ரித்து வந்­தன. சில மாதத்­திற்கு முன்னர் மட்­டக்­க­ளப்பு மங்­களராமய சும­ண­ரத்ன தேரர் விவ­கா­ரத்தில் பொது­ப­ல­சே­னா­வினர் தலை­யிட்­டி­ருந்­தனர். அவ­ருக்கு ஆத­ர­வாக கொழும்­பி­லி­ருந்து வாக­னப்­பே­ர­ணி­யாக இவர்கள் சென்றிருந்தனர். இடைநடுவில் பொலிஸார் வழிமறித்து நீதிமன்ற உத்தரவை ஞானசார தேரரிடம் வழங்கியபோது அதனை அவர் கிழித்தும் எறிந்திருந்தார். இதனையடுத்து பௌத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் இவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.

இத்தகைய சந்திப்புக்கள் தான் அவர்களின் செயற்பாட்டிற்கு ஊக்கமளித்ததாகவே கருதவேண்டியுள்ளது. ஆனாலும் தற்போதைய நிலையில் அரசாங்கத் தரப்பானது ஞானசார தேரரின் இனவாத செயற்பாடுகளை நன்கு உணர்ந்துள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளது. நாட்டில் இன, மதவாதத்தை தூண்டுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது இன்றியமையாததாகும். இவ்வாறான கடுமையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டால்தான் இன, மதவாதமற்ற நாடாக இலங்கை மாறுவதற்கான சூழல் ஏற்படும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-27#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.