Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை, மதுரை பல்கலைகளுக்கு புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டதில், விதிமீறல் கள் நிகழ்ந்துள்ளதாக, சலசலப்பு உருவாகியுள்ளது.

Featured Replies

 
 
gallerye_010009122_1778859.jpg

சென்னை, மதுரை பல்கலைகளுக்கு புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டதில், விதிமீறல் கள் நிகழ்ந்துள்ளதாக, சலசலப்பு உருவாகியுள்ளது.

 

Tamil_News_large_177885920170528003147_318_219.jpg

நேர்காணலில் பங்கேற்காதவருக்கு, பதவி வழங்கியுள்ளதாகவும், சர்ச்சை எழுந்துள்ளது. அதனால், புதிய தேடல் குழு அமைத்து, புதிதாக துணை வேந்தர்களை தேர்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் மதுரை பல்கலைகளுக்கு, புதிய துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள், தேர்வு நடவடிக்கையை, ஒன்றரை ஆண்டுகளாக தாமதப்படுத்தின.ஆனால், பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்பதால், துணை வேந்தரை தேர்வு செய்ய, தாமதப்படுத் தக் கூடாது என, சென்னை பல்கலை பேராசி ரியர் பேரவை மற்றும் சென்னை, மதுரை பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மே, 21ல், தேடல் குழுவினர் இறுதி பட்டியலை, கவர்னர் வித்யாசாகர் ராவி டம் அளித்தனர். அதில், சென்னை பல்கலை பேராசிரியர் வேல்முருகன், யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு துணை தலைவர், தேவ ராஜ் மற்றும் சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர், தாண்டவன் இடம் பெற்றனர். அவர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ்,

நேற்றுமுன்தினம் நேர்காணல் நடத்தி னார். இந்நிலையில்,சென்னை பல்கலைதுணை வேந்தராக, துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தராக, பேராசிரியர் செல்லத்துரையும் நியமிக்கப்பட்ட தாக, நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இது, கல்வியாளர்கள் மற்றும் தேடல் குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தேடல் குழுவின் பட்டியலில், பேராசிரியர் துரைசாமி பெயர் இல்லை; அவரிடம், நேற்று முன்தினம் மாலை வரை, நேர்காணலும் நடத்தப்படவில்லை.ஆனால், அவர் நியமிக்கப் பட்டது எப்படி என, தெரியவில்லை. மேலும், துணை வேந்தர்கள் பெயரை, கவர்னர் அறிவிக்கும் முன், உயர் கல்வி அமைச்சரும், செயலரும் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்கலைகளின் வேந்தராக இருக்கும் கவர்னர் மட்டுமே, அதிகாரபூர்வ உத்தரவை வெளியிட வேண்டும்.

ஆனால், ஊடகங்களுக்கு அரசாணையை, கவர்னர் வெளியிடும் முன், அமைச்சர் அறிவித் திருப்பது, துணை வேந்தர் நியமனத்தில், அரசியல் குறுக்கீடுகள் இருப்பதை உறுதி செய்வதாக, கல்வியாளர்கள் சந்தேகம் அடைந் துள்ளனர். அதனால், அண்ணா பல்கலை போல, புதிய தேடல் குழு அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
 

ஜாதி ஆதிக்கமா


மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தராக தேர்வாகியிருக்கும் செல்லத்துரை, அந்த பல்கலையின் இளைஞர் நல படிப்பு துறை தலைவராக இருந்தார். நாடார் இனத்தைச் சேர்ந்த இவருக்கு, தேடல் குழு தலைவர் முருக தாஸ் தரப்பில், கூடுதல் சிபாரிசு செய்யப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.காமராஜர் பல்கலை

 

துணை வேந்தராக,கல்யாணி மதிவாணன் இருந்த போது எழுந்த புகாரில், பேராசிரியர் செல்லத்துரை மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும், அதையும் மீறி, அவரை துணை வேந்தராக தேர்வு செய்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மதிப்பெண் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தாக, அரசு தெரிவித்துள்ள நிலையில், இறுதி பட்டியலில் இடம் பெற்றவர்கள், ஒவ்வொரு வரும் எத்தனை மதிப்பெண் பெற்றனர். அது, எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை வெளியிட வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை பல்கலை துணை வேந்தராக அறிவிக்கப்பட்டுள்ள துரைசாமி, அதே பல் கலையில், 2004 முதல், பொருளாதார துறை தலைவராக பணியாற்றியவர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர், கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு, முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் தரப்பில் அதிக சிபாரிசு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
 

புதிய தேடுதல் குழு கவர்னர் உத்தரவு


அண்ணா பல்கலை துணை வேந்தரை தேர்வு செய்ய, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில், புதிய தேடுதல் குழு அமைத்து, கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.இக்குழு, துணை வேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பட்டியலை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும். ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தேடுதல் குழு, பரிந்துரை செய்த, மூன்று பேர் பட்டியலை நிராகரித்த கவர்னர், புதிய தேடுதல் குழுவை நியமித்து உத்தர விட்டுள்ளார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1778859

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.