Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிடிவி. தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவு வியாழக்கிழமையன்று அறிவிக்கப்படும்: டெல்லி நீதிமன்றம்

Featured Replies

டிடிவி. தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவு வியாழக்கிழமையன்று அறிவிக்கப்படும்: டெல்லி நீதிமன்றம்

 

 
டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
 
 

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி நீதிமன்றம் நாளை (வியாழன்) வெளியிடுகிறது.

சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி இன்று தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பிக்கவிருந்தார். ஆனால் ஸ்டெனோகிராபர்கள் விடுப்பில் சென்றுள்ளதால் உத்தரவை இன்று பூர்த்தி செய்ய முடியாமல் போனது, எனவே உத்தரவு வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

டெல்லி போலீஸாரால் ஏப்ரல் 25-ம் தேதி கைது செய்யப்பட்ட டிடிவி. தினகரன், எந்த ஒரு அரசு ஊழியரும் இதில் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை எனும்போது தன்னை சிறையில் வைப்பதற்கான காரணம் ஏதுமில்லை. எனவே, ஜாமீன் வேண்டும் என்று தன் மனுவில் கோரியிருந்தார். கைது செய்யப்பட்ட இவரது கூட்டாளியான் மல்லிகார்ஜுனாவும் ஜாமீன் கோரியுள்ளார்.

தினகரன், மல்லிகார்ஜுனா, தரகர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஹவாலா நடவடிக்கை நாத்து சிங் ஆகியோர் ஜூன் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட லலித் குமார் என்பவர் ஜூன் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 22-ம் தேதி இடைத்தரகர் சுகேஷின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக தினகரன், சுகேஷ் குரல் மாதிரிகளை பரிசோதனை செய்ய டெல்லி போலீஸ் கோரியது, ஆனால் இருவரும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது வியாழனன்று தெரியவரும்

http://tamil.thehindu.com/tamilnadu/டிடிவி-தினகரன்-ஜாமீன்-மனு-மீதான-உத்தரவு-வியாழக்கிழமையன்று-அறிவிக்கப்படும்-டெல்லி-நீதிமன்றம்/article9716933.ece?homepage=true

  • தொடங்கியவர்

டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

 
 

ttv dinakaran

டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது டெல்லி நீதிமன்றம். தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு கைதுசெய்யப்பட்டார் டி.டி.வி.தினகரன். விசாரணைக்குப் பின்னர் ,அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்த மனு மீது, இரு தினங்களுக்கு முன் விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து, தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவரது ஜாமீன் மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் விடுமுறையில் சென்றுவிட்டதாகக் கூறி, தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது டெல்லி நீதிமன்றம். அவருடன் கைதான மல்லிகார்ஜுனாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா இருவரும், ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

http://www.vikatan.com/news/india/91005-delhi-court-grants-bail-to-ttv-dinakaran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.