Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'யாரும் நீக்கவில்லை... கட்சிப் பணியைத் தொடர்வேன்' : திகாரில் இருந்து வெளிவந்த தினகரன் அதிரடி!

Featured Replies

'யாரும் நீக்கவில்லை... கட்சிப் பணியைத் தொடர்வேன்' : திகாரில் இருந்து வெளிவந்த தினகரன் அதிரடி!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு கைதுசெய்யப்பட்டார், டி.டி.வி.தினகரன். விசாரணைக்குப் பின்னர், அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்த மனு மீது, கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை நடந்தது.  அதைத் தொடர்ந்து, தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது.

TTV Dinakaran


இதையடுத்து, நேற்று டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது, டெல்லி நீதிமன்றம். அவருடன் கைதான மல்லிகார்ஜுனாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜுனா இருவரும், ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

Dinakaran


இதைத் தொடர்ந்து, திகார் சிறையிலிருந்து இன்று காலை டி.டி.வி.தினகரன் வெளியில் வந்துள்ளார். பிறகு சென்னை புறப்பட்ட அவர், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "சிறையில் இருந்தபோது தமிழகத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மத்திய அரசுக்குப் பணிந்து தமிழக அரசு செயல்படவில்லை.


சென்னை சென்று, மீண்டும் எனது கட்சிப் பணியைத் தொடர்வேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியதாக யாரும் அறிவிக்கவில்லை. கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு, பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்று கூறினார்.

 


கைதுசெய்யப்படுவதற்கு முன், கட்சியிலிருந்து விலகிவிட்டதாக தினகரன் கூறியிருந்தார். மேலும், சசிகலா, தினகரன் ஆகியோரை விலக்கிவைத்துவிட்டு ஆட்சியை நடத்துவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, கட்சிப் பணியைத் தொடர்வேன் என்று தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

http://www.vikatan.com/news/india/91204-will-continue-party-work-says-ttv-dinakaran.html

  • தொடங்கியவர்

டி.டி.வி. தினகரன் வருகை... அமைச்சர்கள், நிர்வாகிகளுக்குப் பறந்த முக்கிய உத்தரவு!

 
 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரனை டெல்லி போலீஸார்,  ஏப்ரல் மாதம் கைதுசெய்தனர். இதையடுத்து மே 1ஆம் தேதி, திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்டார்.

TTV Dinkaran

ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் இருந்த தினகரனுக்கு, கடந்த 1ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்றிரவு சிறையிலிருந்து தினகரன் வெளியேவந்தார். இன்று காலை, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "மீண்டும் எனது கட்சிப் பணியைத் தொடர்வேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியதாக யாரும் அறிவிக்கவில்லை. கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு, பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்று கூறினார்.

கைதுசெய்வதற்கு முன், கட்சியை விட்டு விலகிவிட்டேன் என்று கூறியிருந்த நிலையில், தினகரனின் இந்த அதிரடி அறிவிப்பு, முதல்வர் பழனிசாமி அணியை அதிரவைத்துள்ளது. இதைத் தொடர்ந்து,"தினகரனை அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டோம்" என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.  "தினகரன் கட்சியில் நீடிப்பதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்" என்று அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தனர்.

ஆனால், அமைச்சர் சீனிவாசன், "கட்சிப் பணியைத் தொடர டி.டி.வி-க்கு உரிமை உள்ளது" என்று கூறினார். இப்படி பல்வேறு கருத்துகள் உலாவிவரும் நிலையில், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அ.தி.மு.க அம்மா அணி தலைமையிடத்திலிருந்து ஒரு முக்கிய உத்தரவு சென்றுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

ADMK Head

 


சென்னை வரும் தினகரனை, யாரும் சென்று சந்திக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாம். ஆனாலும், தினகரனின் தீவிர விசுவாசிகள் பலரும், அவரை வரவேற்கத் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/91218-important-announcement-from-admk-amma-faction-headquarters.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.