Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் ஒத்துழைப்பை பலவீனமாக கருதவேண்டாம்

Featured Replies

Page-15-3dc05b87563caeec12c5ac075a187c78

சம்பந்தனின் ஒத்துழைப்பை பலவீனமாக கருதவேண்டாம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-3

சம்பந்தன் ஒத்துழைப்பை பலவீனமானதாக கருதவேண்டாம்

 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது என்­ப­தற்­காக அந்த ஆத­ரவை பல­வீ­ன­மாக கரு­தி­வி­டக்­கூ­டாது. வேறு வழி­யின்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக எண்ணி தமி­ழர்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை புறந்தள்ளி விடு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கக்­கூ­டாது.எவ்­வ­ளவு பெரிய ஆபத்­துக்கு மத்­தியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப்பிடிக்­கின்­றது என்­பதை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அர­சியல் நகர்­வுகள் எப்­போ­துமே விசித்­தி­ர­மானதா­கவே அமைந்து விடு­வதை காண முடி­கி­றது. அர­சியல் கட்­சிகள் தேர்தல் காலத்தில் கூறு­கின்­றதை ஆட்­சிக்கு வந்­ததும் மறந்து விடு­கின்ற விசித்­தி­ர­மா­னதோர் அர­சியல் கலா­சா­ரத்­தி­லேயே நாங்கள் இருக்­கின்றோம். சில­வே­ளை­களில் காலமும் கடந்த காலங்­களில் மறக்­க­டிக்­கப்­ப­தற்­கா­கவே புதிய விட­யங்களைக் உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது.

நாட்டில் இடம்­பெறும் அர­சியல் சம்­ப­வங்­களும் நகர்­வு­களும் சுற்றி சுற்றி வந்­தாலும் ஏமாற்­றங்­களும் தோல்­வி­களும் நிரந்­த­ர­மா­ன­தா­கவே சில சம­யங்­களில் காணப்­ப­டு­கின்­றன. எமது நாட்டில் தமிழ்த் தேசியப் பிரச்­சி­னையில் அடிப்­படை விட­யமும் அவ்­வா­றா­கவே காணப்­ப­டு­கின்­றது.

 நாட்டில் தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வுத் திட்டம் என்­பது எப்­போ­துமே எட்­டாக்­க­னி­யா­கவும் கடி­ன­மா­ன­தொரு விட­யமா­க­வுமே காணப்­பட்டு வரு­கி­றது. இன­வாத சக்­தி­க­ளுக்கு மத்­தியில் இவ்­வாறு அர­சியல் அதி­கா­ரங்­களை பகிர்ந்து தீர்வைக் காண்­பது என்­பது கடி­ன­மான விட­யம்தான். அதற்­காக பிரச்­சி­னையை தீர்க்­காமல் இவ்­வாறு இழுத்­த­டித்­துக்­கொண்டு செல்­வது நல்­ல­தல்ல.

தமிழ் பேசும் மக்கள் தமது நியா­ய­மான அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­மாறே கோரி வரு­கின்ற நிலையில் பத­வியில் இருக்கும் அர­சாங்­கங்கள் அதனை உதா­சீனம் செய்து கொண்டே வரு­கின்­றன. பத­வியில் இருக்­கின்ற அர­சாங்­கங்கள் எதிர்க்­கட்­சியில் இருக்­கும்­போது தமிழ்த் தேசிய பிரச்­சினை விட­யத்தில் ஒரு நிலைப்­பாட்­டையும் ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் மாற்­று­மொரு நிலைப்­பாட்­டையும் பேணு­வதை காண முடி­கி­றது. இது எமது நாட்டின் அர­சியல் கலா­சா­ர­மா­கவே மாறி­விட்­டது.

உதா­ர­ண­மாக பிர­தான அர­சியல் கட்சி ஒன்றின் செயற்­பாட்டை குறிப்­பி­டலாம். ஒரு காலத்தில் எதிர்க்­கட்­சியில் இருக்­கும்­போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது தமிழர் பிரச்­சி­னையின் தீர்­வாக ஐக்­கிய இலங்கை என்ற கட்­ட­மைப்­புக்குள் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கலாம் என கூறி வந்­தது. ஆனால் ஆட்­சிக்கு வந்­த­ததன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியை போன்று தேசிய இனப்­பி­ரச்­சி­னை­யா­னது ஒற்­றை­யாட்சி முறை­மையின் கீழேயே தீர்க்­கப்­பட வேண்டும் என கூறி வரு­கி­றது.

அந்­த­வ­கையில் அர­சியல் கட்­சிகள் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் விட­யத்தில் எவ்­வாறு மாற்­ற­ம­டைந்து செல்­கின்றது என்­பதை எம்மால் புரிந்து கொள்ள முடி­கின்­றது. தென்­னி­லங்­கையின் அர­சியல் நாடிப்­பி­டிப்பை உணர்ந்து ஐக்­கிய தேசிய கட்சி இவ்­வாறு நிலைப்­பாட்டில் சிறிய தளர்வை செய்­தி­ருக்­கலாம். அர­சியல் ரீதியில் அந்த அணு­கு­முறை சரி­யா­ன­தாக அக்­கட்­சிக்கு தெரிந்­தி­ருக்­கலாம். ஆனால் இதனால் தமிழ் பேசும் மக்கள் நம்­பிக்­கை­யி­ழக்­கின்­றனர் என்­ப­த­னையும் மன­தில்­கொள்­ள­வேண்டும்.

 தற்­போ­தைய நிலை­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது தமிழ் பேசு­கின்ற மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்கும் என்ற நம்­பிக்­கையிலும் நியா­ய­மான தீர்வை முன்­வைக்கும் என்ற எதிர்­பார்ப்­பிலும் பிர­ தான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழை ப்பு வழங்கும் போக்கை கொண்­டுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்த போக்­கா­னது அர­சியல் ரீதியில் ஒரு ஆபத்­தான கட்­ட­மாக அமைந்­தி­ருந்த போதிலும் இரா­ஜ­தந்­திர ரீதியில் செயற்­பட்டு தீர்வைப் பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் இவ்­வாறு அர­சியல் நகர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் அர­சியல் இரா­ஜ­தந்­திர ரீதியில் அர­சாங்­கத்தை ஆத­ரிக்கும் போக்கை பின்­பற்றி வரு­கிறார். இது கூட்­ட­மைப்­புக்கு பல்­வேறு மட்­டங்­களில் விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

அது­மட்­டு­மன்றி எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் 2016 ஆம் ஆண்டில் தீர்வைப் பெற்று விட முடியும் என்ற நம்­பிக்­கையை 2015 ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டில் தமிழ் மக்­க­ளினால் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை. அதா­வது தீர்வு கிடைக்கும் என்ற முழு­மை­யான நம்­பிக்­கையை கூட அடைய முடி­யாத நிலை­மையை 2016 ஆம் ஆண்டில் காண முடிந்­தது. இந்த நிலை­மையில் தற்­போது 2017 ஆம் ஆண்டில் அரை­வா­சி காலப்பகுதி முடிந்­துள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் நம்­பிக்கை கொள்ளும் வகை­யி­லான தீர்வு திட்­டத்­திற்­கான நகர்­வுகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­ய­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது ஒரு­வி­ட­யத்தை நன்­றாக புரிந்து கொள்ள வேண்டும். அதா­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது என்­ப­தற்­காக அந்த ஆத­ரவை பல­வீ­ன­மாக கரு­தி­வி­டக்­கூ­டாது. வேறு வழி­யின்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக எண்ணி தமி­ழர்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை புறந் தள்ளி விடு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கக்­கூ­டாது. எவ்­வ­ளவு பெரிய ஆபத்­துக்கு மத்­தியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப் பிடிக்­கின்­றது என்­பதை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்­வாறு அர­சாங்­கத்­துடன் இணைந்து பய­ணிப்­பதால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வா­றான விமர்­ச­னங்­களை எதிர்­கொள்­கின்­றது என்­பதை அர­சாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் தாற்­ப­ரி­யத்தை புரிந்து விரை­வாக தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வுத் திட்­டத்­திற்கு வழி­ச­மைக்க வேண்டும். எனினும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளையும் அர­சியல் காய் நகர்த்தல் நகர்­வு­க­ளையும் பார்க்­கும்­போது தீர்வுத் திட்ட விட­ய­தா­னத்தை இழுத்­த­டித்துக் கொண்டு செல்­வதையே காண­மு­டி­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பத­விக்கு வந்து இரண்­டரை வரு­டங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் இது­வரை தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் உருப்­ப­டி­யான எதுவும் செய்­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

விசே­ட­மாக அர­சாங்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளுடன் நேருக்கு நேர் அமர்ந்து தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் தொடர்பில் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை. மாறாக அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றி­யுள்­ளது.

அந்த நிர்­ணய சபை நிய­மித்­துள்ள பிர­தான வழிநடத்தல் குழு­வா­னது அர­சியல் தீர்வு தேர்தல் முறை மாற்றம் மற்றும் ஜனா­தி­பதி முறை மாற்றம் என்­பன தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றது. இந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் இனப்­பி­ரச்­சினை தீர்வு விடயம் தொடர்­பாக ஆரா­யப்­பட்­டுள்­ளதே தவிர தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் தீர்வுத் திட்ட விட­யத்தை பெற்றுக் கொடுப்­பது தொடர்பில் எத­னையும் தீர்க்­க­மாக ஆரா­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

பிர­தான இரண்டு கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் அர­சியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இரண்டு கட்­சி­களும் கிட்­டத்­தட்ட ஒரே நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­றன. அதா­வது வடக்கு, கிழக்கை இணைக்க முடி­யா­தென்றும் சமஷ்டி முறை­மையை ஏற்றுக் கொள்ள முடி­யா­தென்றும் இரண்டு பிர­தான கட்­சி­களும் கூறி வரு­கின்­றன.

அதே­போன்று உயர்ந்த மட்ட அதி­காரப் பகிர்வு விட­யத்­திலும் இரண்டு கட்­சி­களும் ஆக்­கப்­பூர்­வ­மான நிலைப்­பாட்டில் இல்லை என்­பது தெளி­வா­கின்­றது. மறு­புறம் தமிழ் பேசும் மக்­களின் பிர­தான கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது இந்த விட­யங்­களில் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்­றது.

அதா­வது வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி முறை­மையின் கீழ் அதி­யுட்ச அதி­காரப் பகிர்­வுடன் தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தி வரு­கின்­றது ஆனால் அர­சாங்கம் இந்த விட­யத்தில் முரண்­பாட்டு நிலைப்­பாட்­டுடன் காணப்­ப­டு­கி­றது. அர­சாங்கம் என்­பதை விட ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்த நிலைப்­பாட்­டுடன் முரண்­பட்டு நிற்­பதை காண முடி­கி­றது.

இந்தக் கார­ணங்­க­ளினால் தீர்வுத் திட்­ட­மா­னது தொடர்ச்­சி­யாக இழுத்­த­டிக்­கப்­பட்டுக் கொண்டே வரு­கி­றது. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களை பொறுத்­த­வ­ரையில் காணா­மல்­போனோர் விவ­காரம், காணிப்­பி­ரச்­சினை போன்­றன தற்­போ­தைய நிலை­மையில் அவ­ச­ர­மாக தீர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன. ஆனால் அர­சியல் தீர்வு விவ­கா­ர­மா­னது மக்­களின் நீண்­ட­கால அடிப்­படை பிரச்­சி­னை­யாகும். இந்த விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காட்ட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கடந்த கால அர­சாங்­கங்­களை போலன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது வித்­தி­யா­ச­மான முறையில் இந்தப் பிரச்­சி­னையை தீர்த்து வைக்கும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே எந்­த­வி­த­மான எழுத்து மூல உடன்­ப­டிக்­கை­யு­மின்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யது.

தேர்­தலில் ஆத­ரவு வழங்­கி­ய­துடன் நின்­று­வி­டாமல் தற்­போது வரை நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பக்­க­ப­ல­மாக இருந்து வரு­கின்­றது. அர­சியல் ரீதி­யி­லான நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே கூட்­ட­மைப்பு இந்த நகர்வை முன்­னெ­டுத்­தி­ருக்­கி­றது. அந்த நம்­பி­க­கையை அர­சாங்கம் பல­வீ­ன­மாக கருதி விடக்­கூ­டாது.

தமிழ் பேசும் மக்கள் எந்த நம்­பிக்­கையில் இந்த அர­சாங்­கத்­துக்கு வாக்­கு­களை அள்ளி வழங்­கி­னார்­களோ அந்த நம்­பிக்­கையை சித­ற­டிக்கும் வகையில் அர­சாங்கம் செயற்­படக் கூடாது. தற்­போ­தைய ஆட்சிக் காலம் நிறை­வ­டை­வ­தற்கு இன்னும் மூன்று வரு­டங்­களே காணப்­ப­டு­கின்­றன. இக் காலப்­ப­கு­திக்குள் விரை­வாக இந்தப் பிரச்­சி­னையை தீர்த்து தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்ற வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

காரணம் 2020 ஆம் ஆண்டு நடை­பெ­று­வுள்ள தேர்­தலின் பின்னர் நாட்டில் எவ்­வாறு அர­சியல் சூழல் அமையும் என்­பதை தற்­போது எதிர்வு கூற முடி­யாது. எனவே அர­சாங்கம் இக் காலப்­ப­கு­திக்குள் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண்­ப­தற்­கான அர்ப்­ப­ணிப்பை வெ ளிக்­காட்ட வேண்டும். வர­லாறு முழு­வதும் தீர்வு விட­யத்தில் தமிழ் மக்­களை ஏமாற்­று­வது போன்று இம்­மு­றையும் ஏமாற்றி விடலாம் என அர­சாங்கம் எந்­த­வொரு வகை­யிலும் எண்ணி விடக்­கூ­டாது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அப்போதைய அரசாங்கத்துக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் கடந்த அரசாங்கம் அதற்கான முயற்சிகளை இதயசுத்தியுடன் முன்னெடுக்கவில்லை. மாறாக மேலும் சமூகங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் சூழலே உருவாகியது.

ஆனாலும் அதனை விட சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. அதாவது இரண்டு பிரதான கட்சிகளும் தற்போது இணைந்து ஆட்சி அமைத்துள்ளதால் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் கைகூடி வந்துள்ளது. அதுமட்டுமன்றி பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் போக்கை கடைப்பிடித்து வருகின்றது.

எனவே இவ்வாறானதொரு தீர்க்கமான சூழலில் தீர்வை கண்டு விடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். அதனை விடுத்து காலத்தை வீணடித்து தீர்வு விடயத்தில் மக்களை ஏமாற்றி இந்த அரசாங்கம் பதவிக்கு வர முழுமையான ஆதரவை வழங்கிய தமிழ் பேசும் மக்களுக்கு துரோகம் இழைக்க அரசாங்கம் எந்தவொரு வகையிலும் முயற்சிக்க கூடாது. அதுமட்டுன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை அரசாங்கம் பலவீனமானதாக கருதி விடவும்கூடாது.

ரொபட் அன்­டனி

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.