Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழனிசாமி பின்னணியில் சசி குடும்பம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம்

Featured Replies

பழனிசாமி பின்னணியில் சசி குடும்பம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம்

 

முதல்வர் பழனிசாமி தரப்பினர், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக, பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருவது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில், பன்னீர் அணி சார்பில், மனு அளிக்கப்பட்டு
உள்ளது; இம்மனு, விசாரணையில் உள்ளது.இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறுகிய காலத்திற்குள், முடிவெடுக்க முடியாததால், இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கியது.ஒத்திவைப்புஇடைத்தேர்தலில், சசிகலா அணி சார்பில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் வெடித்தது; அதனால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அ.தி.மு.க.,
தொண்டர்கள், தங்கள் பக்கம் உள்ளதாகக் கூறி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, சசிகலா அணியினர், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய, அவகாசம் கேட்டனர். ஜூன், 16 வரை, தேர்தல் கமிஷன் அவகாசம் வழங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சு எழுந்தது.
அப்போது, பன்னீர் அணியினர், 'சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இருந்து விலக்கினால் மட்டுமே பேச்சு' என, அறிவித்தனர். அதை ஏற்று, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தினகரன்
குடும்பத்தை விலக்கி வைப்பதாக அறிவித்தனர். தினகரனும், கட்சிப் பணிகளில் இருந்து, ஒதுங்கிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.ஆனால், தினகரன், கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய வில்லை. அதேநேரத்தில், சசிகலாவை பற்றி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எதுவும் பேசவில்லை. இதன் காரணமாக, பழனிசாமி தரப்பினர் மீது, பன்னீர் அணியினருக்கு, சந்தேகம் ஏற்பட்டது.
பேச்சும் துவங்காமலேயே நின்று போனது. பன்னீர் அணி சார்பில், 54 லட்சம் பிரமாண பத்திரங்கள், தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பழனிசாமி தரப்பினரும், கட்சி நிர்வாகிகளிடம், பிரமாண பத்திரத்தில், கையெழுத்து பெற்று வருகின்றனர். பிரமாண பத்திரத்தில், பொதுச்செயலர் சசிகலா, துணை பொதுச்செயலர் தினகரன், தலைமை நிலைய செயலரான, முதல்வர்
பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவு தெரிவிப்பதாக, கையெழுத்து பெற்று வருகின்றனர்.
அதிருப்திஇதன்மூலம், 'சசிகலா குடும்பத்தினரை விலக்கி வைப்பதாக, பழனிசாமி தரப்பினர் கூறுவது நாடகம்' என, பன்னீர் அணியினரின்
குற்றச்சாட்டு உண்மை என்பது தெரிய வந்துள்ளது. சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்க நினைத்தால், அவர்கள் பெயரை விடுத்து, பிரமாண பத்திரத்தில்,
கையெழுத்து பெறலாம்; அதை அவர்கள் செய்யவில்லை.
இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன், ஜாமினில் வெளியே வந்து உள்ளார். எனவே, மீண்டும் பழனிசாமி அணி, தினகரன் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா குடும்பத்தினரை விலக்க, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், முழு மனதுடன் நடவடிக்கை எடுக்காதது, அ.தி.மு.க., தொண்டர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1783312

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.