Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிரட்டல்

Featured Replies

gallerye_235025936_1783878.jpg

தமிழக அமைச்சர்கள் சிலரை மாற்றும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில்
நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியை விட, கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என, அவர் கருதுவதால், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், சட்டசபையில், வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியை கவிழ்ப்போம் என, மிரட்டல் விடுத்துள்ளதாக வும், தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_178387820170604234956_318_219.jpg

இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்; 34 நாட் களுக்கு பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவரை, அ.தி.மு.க., அம்மா அணியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.பி.,க்கள், ஐந்து மாவட்ட செயலர்கள் வரவேற்றது, கட்சியில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நம்பிக்கை உள்ளது


இந்நிலையில், அமைச்சர் களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், சென்னையில் நேற்று
தினகரன் அளித்த பேட்டி:

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக் கும் முயற்சியில் ஈடுபட்ட அமைச்சர்கள் சிலர், தேவையற்ற விஷயங்களை பேசி, அம்முயற்சியை கெடுத்து விட்டனர். எனவே, கட்சி பணியில், நான் தீவிரமாக ஈடுபட வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர். ஒரு வாரத்தில், சசிகலாவை சந்தித்து, அவரது அனுமதி பெற்று அதற்கேற்ற வகையில் செயல்படுவேன்.

அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து, சசிகலா பேனர் மற்றும் படத்தை அகற்றியவர்களுக்கு,

காலம் நிச்சயம் பதில் தரும். அமைச்சர்கள் என் றாலும், அவர்கள் அ.தி.மு.க., உறுப்பினர்களே. கட்சியில், யாரும் என்னை ஏதும் செய்து விட முடியாது. கட்சியில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை. என்னை எதிரியாக நினைப் போரும், திருந்தி தங்கள் தவறை சரி செய்து கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்கள் மீது, தினகரன் தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டுகள், முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளன.இதற்கிடையில்,
தினகரனுக்கு ஆதரவானவட்டாரங்கள் கூறியதாவது:

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டு கோரும் முன், கூவத்துார் சொகுசு விடுதியில், எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, பழனி சாமி அரசு நீடித்தால், 'மாதந்தோறும், எம்.எல். ஏ.,க்கள் கவனிக்கப்படுவர்' என, உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதை, முதல்வர் பழனிசாமி நிறைவேற்றவில்லை.
 

ஆதங்கம்


இதனால், அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட, எட்டு எம்.எல்.ஏ.,க்கள், சில நாட்களுக்கு முன், முதல் வர் பழனிசாமியை சந்தித்து, தங்களின் ஆதங் கத்தை தெரிவித்ததோடு, அமைச்சர் பதவி தர வேண்டும் என, வலியுறுத்தினர். மேலும், கட்சி வளர்ச்சி நிதி, பணி நியமனம், ஒப்பந்த பணிகள் உள்ளிட்டவற்றில் வசூலாகும் பணத்தை, அமைச்சர்கள் மட்டுமே பங்கு போட்டுக் கொள்ளக்கூடாது;

எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் பிரித்து தர வேண்டும் என்றும் தெரிவித்தனர். 'அமைச்சர்கள் மட்டும் சம்பாதிப்பதற்கு, நாங்கள் தொடர்ந்து ஆதரவு தர முடியாது' என்றும் தீர்மானமாக கூறினர்.

அப்போது, குறுக்கிட்ட மூத்த அமைச்சர் ஒருவர், 'இந்த விஷயத்தை மீடியாக்களுக்கு

 

தெரிவித்துவிட வேண்டாம். முதல்வருடன் பேசி, அடுத்த சில நாட்களில், இந்த பிரச்னைக்கு தீர்வு காண்கிறேன்' என, உறுதி அளித்துள்ளார். இருந்தும், அந்த வாக்குறுதி காப்பாற்றப்பட வில்லை. அதனால், ஜாமினில் வெளிவந்த தினகரனை டில்லியிலும், அவரது வீட்டிலும் சந்தித்த சில எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மீது புகார் பட்டியல் வாசித்த தோடு, சிலரின் பதவியை பறித்து தங்களுக்கு தர வேண்டும் என்றும் கோரினர்.

ஏற்கனவே சசிகலாவின் பேனர் மற்றும் படங் கள் அகற்றப்பட்ட விஷயத்திலும், அணிகள் இணைப்பு பேச்சு விவகாரத்திலும், சில அமைச் சர்கள் மீது கோபம் அடைந்துள்ள தினகரன், முதல்வர் பழனிசாமியை தொடர்பு கொண்டு, சில அமைச்சர்களை மாற்றிவிட்டு, தான் சொல்லும் நபர்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என, நிர்ப்பந்தம் செய்துள்ளார்.

அத்துடன், தனக்கு வேண்டிய அதிகாரிகள் சிலரை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இந்த விஷயத்தில், தன் பேச்சை கேட்காமல், முதல் வர் பழனிசாமி வேறு விதமாக செயல்பட்டால், சட்டசபை கூடி, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் போது, தன் ஆதரவு எம்.எல். ஏ.,க்கள் மூலம், வெட்டுத் தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்.

அப்படி வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட் டால்,அரசு கவிழும் அபாயம் உள்ளது. அதனால், தன் உத்தரவை முதல்வர் செயல் படுத்துவார் என, தினகரன் நம்புகிறார். ஒரு வேளை, அதை மீறி முதல்வர் செயல்பட்டால், ஆட்சியை காப்பாற்றுவதை விட, கட்சியை காப்பாற்றுவதற்கே தினகரன் முக்கியத்துவம் கொடுப்பார்.

தற்போது, தினகரனை வெளிப்படையாக ஆதரிக்கும், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 12௨ ஆக உள்ளது. இவர்களில் பாதி பேர் தினகரன் உத்தரவை செயல்படுத்தினாலும், ஆட்சியின் நிலைமை சிக்கலாகி விடும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1783878

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.