Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மூடப்பட்டது.

Featured Replies

வவுனியா போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மூடப்பட்டது.

வவுனியாவில் உள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகத்தை திடீரென மூடிவிடும்படி அறிவுறுத்தல் விடுத்துள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கொழும்பு தலைமைச் செயலகம், அங்கு கடமையிலிருந்த ஊழியர்கள் அனைவரையும், வேறு பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளது.

இத்திடீர் அறிவிப்பு குறித்து வவுனியா சிறிலங்கா காவல்துறையினரிடம் வினவியபோது, தமக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் இது தொடர்பாகக் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்ததுடன், இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறு திடீரென அலுவலகத்தை மூடிவிட்டுச் சென்ற கண்காணிப்புக் குழுவினர், பின்னர் தாங்களாகவே வந்து பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினர் தங்களது தாக்குதல் முன்னேற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளதுடன், இராணுவ முன்னரண்களில் தாக்குதலுக்குத் தயார்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், சிறிலங்கா வான் படையினரின் வான் தாக்குதல்களும், முகாம்களிலில் இருந்து எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இவை தவிர, வவுனியா பிரதேசமே தங்களது அடுத்தகட்ட இலக்கு என்று சிறிலங்காப் படை அதிகாரிகளும் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வவுனியாவிலிருந்து ஏனைய அனைத்துலக தொண்டர் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை மூடி வருவதுடன், பணியாளர்களையும் மீள அழைத்து வருவதாக வவுனியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

-Puthinam-

நல்ல விடையம் தான் என்று கருதத்்தோன்றுகின்றது இப்போதுதான் போர் நிறுத்த கண்காணிப்பு காரர்கள் சரியாக புரிந்து இருக்கின்றாங்கள் காரணம் அவங்கள் ( அரசு) சொல்லி இருப்பினம் நாங்கள் வவுனியாவில் படை நடவடிக்கை செய்யப்போறம் அப்படி செய்தால் புலிகளின் அடிகளின் இருந்து நாங்கள் தப்பி ஓடிவிடுவம் ஆனால் நீங்கள் (போநிக) தப்ப இயலாது அதனால எங்கடி மாத்தையா மார் உங்களை காப்பாற்ற மாட்டாங்கள் அதனால் உடனடியாக மாற்றீடாக ஏதாவது செய்யுங்கோ என்று அதனால் தான் போலும் இவங்கள் மூடிவிட்டு செல்றாங்கள்.

இனி கொஞ்சம் கொஞ்சமாய் முடிப்போட்டு விடுமுறை காலம் முடிச்சிட்டு வீட்ட போ ஓய்வெடுக்க வேண்டியது தானே வன்முறைகளை உலகத்துக்கு சொல்லாத கண்காணிப்பு குழு என்னத்துக்கு

  • தொடங்கியவர்

வவுனியாவில் பதற்றம்! எல்லையோர மக்கள் அச்சத்தால் இடம்பெயர்வு கண்காணிப்புக் குழுவின் பிரசன்னமும் இல்லை.

தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக வவுனியாவில் கடந்த சில தினங்களாக ஒருவித பதற்றநிலை தோன்றியுள்ளது. அங்கு இரு தரப்பு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் எல்லையில் வசிக்கும் மக்கள் இதனால் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

வவுனியாவில் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னமும் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

அரசுப் படைகளினதும் விடுதலைப் புலிகளினதும் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் எல்லைப் பகுதியை அண்டியிருக்கும் கிராமங்களில் வசிக்கும் மக்களே தமது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்புக் கருதி இடம்பெயரத் தொடங்கியிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காட்டுப் பாதைகள் வழியே அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரத்தொடங்கியுள்ளனர் என்று இராணு வத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஓமந்தை முன்னரங்கை அண்டி பெரும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் எல்லைப் பகுதி மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கை ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்வதை ஒட்டி பெருந் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனப் பரவிய தகவல்களை அடுத்தே வவுனியாவில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.

இதேசமயம் வவுனியாவில் பணியில் ஈடுபட்டிருந்த போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பிரசன்னம் நேற்றுமுதல் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் கடந்த ஒரு வார காலமாகவே அங்குள்ள அலுவலகத்தில் பிரசன்னமாகி இருக்கவில்லை. கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் பணிபுரிந்த உள்ளூர் பணியாளர்களும் நேற்றுமுன்தினம் முதல் கடமைக்குச் சமுகமளிக்கவில்லை.

பாதுகாப்பு விடயங்களுக்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் வவுனியாவில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பதாக ஏ.ஏவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை கோரக்கொலைகள், கடத்தல்கள் காரணமாக பெரும் பீதி உருவாகியிருக்கும் சூழலில் வெடிகுண்டுப் புரளிகளும் வவுனியா மக்களை பீதிகொள்ள வைத்துள்ளன. இரம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் நண்பகல்வேளை வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலால் அங்கு மாணவர்கள் பெரும் அல்லோல கல்லோலப்பட நேர்ந்தது. இவ்வாறு வெடிகுண்டுப் புரளி விடுக்கப்பட்ட அதே தினத்தன்று நேற்று முன்தினம் வவுனியா நகரப் பகுதியில் உள்ள இரண்டு பிரபல இரும்பு விற்பனை நிலையங்களில் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.

இரண்டு வர்த்தக நிலையங்களுக்குள்ளும் ஒரே சமயத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட செய்தி வவுனியா நகரை ஒரு கலக்குக் கலக்கியது. பீதியடைந்த நகர வாசிகள் வீதிகளில் ஓட்டம் எடுத்தனர். இந்த இரு குண்டுகளும் பின்னர் படையினரால் பாதுகாப்பாகக் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

இதனிடையே வவுனியாவில் செயற்படும் வெளி நாட்டு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் சர்வதேச பிரதிநிதிகள் சிலர் பதற்றம் காரணமாக அங்கிருந்து கொழும்பு திருப்பியுள்ளனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது.

-Uthayan-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

வவுனியாவில் கண்காணிப்புக் குழுவின் அலுவலகம் மூடப்படவில்லை: தொபினுர் ஒமர்சன்.

வவுனியாவில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாகப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தமது அலுவலகத்தை மூடிவிட்டுக் கொழும்புக்குப் புறப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், தமது உறுப்பினர்கள் அலுவலகத்தை மூடிவிட்டு வரவில்லையெனத் தெரிவித்திருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினர் ஒமர்சன், வவுனியாவின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலைகள் குறித்து ஆராய்வதற்காகவே அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகக் கூறினார்.

உரிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இன்னமும் ஓரிரு தினங்களில் அவர்கள் வவுனியா அலுவலகத்துக்குத் திரும்பி விடுவார்கள் எனவும் தொபினுர் ஒமர்சன் தெரிவித்துள்ளார்.

-Sankathi-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடையம் தான் என்று கருதத்்தோன்றுகின்றது இப்போதுதான் போர் நிறுத்த கண்காணிப்பு காரர்கள் சரியாக புரிந்து இருக்கின்றாங்கள் காரணம் அவங்கள் ( அரசு) சொல்லி இருப்பினம் நாங்கள் வவுனியாவில் படை நடவடிக்கை செய்யப்போறம் அப்படி செய்தால் புலிகளின் அடிகளின் இருந்து நாங்கள் தப்பி ஓடிவிடுவம் ஆனால் நீங்கள் (போநிக) தப்ப இயலாது அதனால எங்கடி மாத்தையா மார் உங்களை காப்பாற்ற மாட்டாங்கள் அதனால் உடனடியாக மாற்றீடாக ஏதாவது செய்யுங்கோ என்று அதனால் தான் போலும் இவங்கள் மூடிவிட்டு செல்றாங்கள்.

இருந்து என்னத்தை சாதித்தார்கள்.. இனியாவது வீட்டுக்கு சென்று ஓய்வெடுக்கட்டுமே...

போர் நிறுத்த கண்காணிப்பு குழுவா? இல்லை போர் கண்காணிப்பு குழுவா??

??

Edited by Minor Kunju

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.