Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி

Featured Replies

தண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி

 

 

 

யாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் எனக் கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

fsfsff.JPG

“அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாகக் கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.

அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன் சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை எனக்கூறி நுகர்வோர் அதிகாரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.

fsfas.JPG

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பணத்தை இழந்த பலர் அமைதியாக இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் ஒன்று கூடி எடுக்கப்பட்ட தீர்மானித்திற்கு அமைவாக மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவத்தை சேர்ந்தவர்களை யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து ஒருவருக்கு புதிதாக வியோகஸ்த்தர் உரிமம் பெறுவது போல் பாவனை செய்து மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்கள் இருவரை பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

fsfs.JPG

நேற்று மாலை 7 மணிக்கு குறித்த நிறுவனத்தை சார்ந்தவர்களை மடக்கிப் பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நையப்புடைத்ததன் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தியமைக்கான சான்றுகள் மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் அனைத்தையும் வைத்திருக்கின்றனர். அதேபோல் யாழ்.மாவட்டத்தில் மட்டும் அண்ணளவாக சுமார் 3 தொடக்கம் 4 கோடி ரூபா பணத்தை மேற்படி தண்ணீர் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் யாழ் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20629

  • தொடங்கியவர்

யாழில்.தண்ணீர் போத்தல் விநியோக உரிமம் தருவதாக கூறி 4 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தவர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு

 

unnamed.jpg

போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தல் விநியோக உரிமம் தருகின்றோம் என கூறி யாழில் 4கோடிக்கும் அதிகமான பணத்தினை மோசடி செய்த கும்பலை சேர்ந்த இருவரை பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட கும்பல் ஒன்று யாழ்.மாவட்டத்தின் பல இடங்களை சேர்ந்த வர்த்தகர்கள் 30க்கும் அதிகமானவர்களிடம் யாழ்.மாவட்ட விநியோக உரிமம் தருகின்றோம் என கூறி பல இலட்ச ரூபாய்களை பெற்று மோசடி செய்து வந்துள்ளனர்.

குறித்த நபர்கள் காசுகளை பெற்றுக்கொண்ட பின்னர் தண்ணீர் போத்தல்களை வர்த்தகர்களுக்கு கொடுக்காது ஏமாற்றி வந்துள்ளதுடன் சிலருக்கு கொடுத்த தண்ணீர் போத்தல்கள் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை என கூறி நுகர்வோர் அதிகார சபையால் விற்பனைக்கு தடை செய்யப்பட்டது.

அது தொடர்பில் குறித்த நபர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கேட்ட போது பலர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். சிலரை வீடுகளுக்கு சென்றும் அக்கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டி உள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி மோசடி கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க முடிவெடுத்ததன் பிரகாரம், புதிதாக ஒருவர் குறித்த நிறுவனத்தின் தண்ணீர் போத்தல் விநியோக உரிமையை பெற விரும்புவதாகவும் , அதற்கான பணத்தை தாம் கைவசம் வைத்துள்ளதாகவும் , அதனை வந்து பெற்றுக்கொள்ளும் படி கூறி மோசடி கும்பலை யாழ்.புறநகர் பகுதிக்கு அழைத்துள்ளனர்.

அதனை நம்பி வந்த மோசடி கும்பலை சேர்ந்த இருவரை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி வளைத்து பிடித்து நயப்புடைத்த பின்னர் யாழ்ப்பாண பொலிசாரிடம் கையளித்தனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிக்கையில் , இந்த கும்பல் யாழ். மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் இவ்வாறாக மோசடிகளை மேற்கொண்டு வருகின்றது. என்னை ஏமாற்றியது தொடர்பில் இந்த கும்பலுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது என்னை மிரட்டி இருந்தனர். அதே போன்று மற்றுமொரு நபர் இவர்கள் கொடுத்த விலாசத்திற்கு தேடி சென்ற போது அவரை இவர்கள் கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதுடன் , குடும்பமாக கொலை செய்வோம் எனவும் அச்சுறுத்தினர் என தெரிவித்தார்.

unnamed-1.jpg

https://globaltamilnews.net/archives/29010

  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாணத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை முகவர்களாக தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி செய்த இருவர் கைது

பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து குறித்த நபர்களை பிடித்த போது பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இவை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.