Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்!

Featured Replies

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்!

 
 

jail-_ttv_16012.jpg

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார்.

இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத சிறைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் தினகரன். நேற்று முன்தினம் சென்னை வந்த தினகரனை அவரது ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ளது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை என்றும், கட்சிப் பணியை தொடரப்போவதாகவும் அதிரடியாக அறிவித்தார்.

இந்தநிலையில், சிறையில் உள்ள சசிகலாவை பார்ப்பதற்காக இன்று காலை பெங்களூரு புறப்பட்டார் தினகரன். இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

 

இதனிடையே, மூன்று எம்.பி.க்கள் மற்றும் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன், கதிர்காமு உள்ளிட்ட 10  கர்நாடக அதிமுக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோருடன் தினகரன் தனது மனைவி அனுராதா ஆகியோருடன் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர். அங்கு சசிகலாவை தினகரன் தனது மனைவியுடன் சென்று சந்தித்தார். மற்றவர்கள் சிறை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/91404-ttv-dinakaran-meets-sasikala.html

  • தொடங்கியவர்

இரு அணிகள் இணைய சசிகலா 60 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார்: தினகரன் தகவல்

 

 
சசிகலா (இடது), டி.டி.வி. தினகரன் (வலது)
சசிகலா (இடது), டி.டி.வி. தினகரன் (வலது)
 
 

இரு அணிகள் இணைவதற்கு மேலும் 60 நாட்களுக்கு அவகாசம் வழங்கலாம் என்று அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருப்பதாகவும், அதனால் தானும் 60 நாட்கள் காத்திருக்கப் போவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,

” ஏப்ரல் மாதம் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதன்படி நான் கட்சி பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தேன். ஆனால் 45 நாட்கள் கழித்து எந்த பலனும் ஏற்படவில்லை. ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் உண்டாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் இரு அணிகள் இணைவதற்கு இன்னும் 60 நாட்கள் அவகாசம் தரலாம் என்று பொதுச் செயலாளர் சசிகலா என்னிடம் தெரிவித்தார். வானளாவிய அதிகாரம் படைத்தது போல் அமைச்சர் ஜெயக்குமார் பொதுச் செயலாளருக்கான அதிகாரத்தோடு பேசுகிறார்.

ஒருவரை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து பொதுச் செயலாளர் தான் முடிவு செய்ய முடியும். அவர் தற்போது செயல்பட முடியாத நிலையில் இருப்பதால் துணை பொதுச் செயலாளராகிய எனக்கு தான் அதிகாரம் உள்ளது.

60 நாட்கள் காத்திருப்போம் அதற்குள் அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள பயம் நீங்கி அவர்கள் சொன்னது போல் இணைகிறார்களா என்று பார்ப்போம் இல்லையேல் என்ன செய்ய வேண்டும் என்றும் சசிகலா எனக்கு அறிவுறுத்தியுள்ளார் அதன்படி செய்வேன்.

அதுவரை என்னை சந்திக்க வரும் தொண்டர்களை நான் சந்திப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றார்

முன்னதாக சசிகலாவிடம் அனுமதி பெற்றுவிட்டு வந்த பிறகு கட்சி பணிகளை தொடர இருப்பதாக தினகரன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/இரு-அணிகள்-இணைய-சசிகலா-60-நாட்கள்-அவகாசம்-வழங்கியுள்ளார்-தினகரன்-தகவல்/article9720548.ece?homepage=true

  • தொடங்கியவர்

அ.தி.மு.க.,வில் இருந்து, தன்னை ஒதுக்கிய, முதல்வர் பழனிசாமி அணியினருக்கு, துணை பொதுச் செயலராக தன்னை நியமிக்க வைத்த தினகரன், திடீர் கெடு விதித்துள்ளார். சசிகலா அறிவுரையை ஏற்று, 60 நாட்கள் ஒதுங்கியிருந்து, கட்சியை கண்காணிக்கப் போவதாகவும், 'அதற்குள் ஒன்றுபடாவிட்டால், எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வேன்' என்றும், அவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தன்னுடைய பதவியை, யாராலும் பறிக்க முடியாது என்றும் கொக்கரித்து உள்ளார்.

 

Tamil_News_large_1784472_318_219.jpg


அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வீரமணி உள்ளிட்ட சிலரை நீக்கும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதை நிறைவேற்ற மறுத்தால், ஆட்சியை கலைக்க, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களால், சட்டசபையில் வெட்டு தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், தினகரன் தரப்பில் மிரட்டல் விடப்பட்டது.
 

அமைச்சர்கள் கூட்டம்


இது குறித்து விவாதிக்க, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க, நேற்று காலை, தினகரன் புறப்பட்டுச் சென்றார்.அப்போது, நிருபர்களை சந்தித்த தினகரன், 'எதிர்கால செயல்பாடு குறித்து, அறிவுரை பெற, சசிகலாவை சந்திக்க செல்கிறேன். கட்சி, ஆட்சியை பாதுகாக்குமாறு, என்னிடம் தொண்டர்கள் கோரிக்கை வைக்கின்றனர்' என்றார்.
தினகரன் பெங்களூரு சென்ற நேரத்தில், சென்னை, தலைமை செயலகத்தில், நிதியமைச்சர் ஜெயகுமார் தலைமையில், அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. செங்கோட்டையன், சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உட்பட, 19 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், அமைச்சர்கள்

பேசியதாவது:யாருடைய தலையீடும் இல்லாமல், அச்சுறுத்தல் இல்லாமல், சுதந்திரமான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், தினகரன், தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சர் பதவி கேட்டு மிரட்டுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது.
ஏப்., மாதத்தில், இரு அணிகளும் இணைய இடையூறாக இருக்கும் தினகரனையும், அவரை சார்ந்தவர்களையும் ஒதுக்கி வைப்பது என, முடிவெடுத்தோம்; அதில்,எந்த மாற்றமும் வேண்டாம். அந்த முடிவில், நாம் தொடர வேண்டும்.
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களால், ஆட்சிக்கு ஆபத்து வரும் நிலை ஏற்பட்டால், பன்னீர்செல்வம் அணி ஆதரவு கிடைக்கும்; ஆட்சி கவிழ வாய்ப்பில்லை. இரு அணிகளும் ஒருங்கிணைந்து செயல்படும் போது, இரட்டை இலை சின்னமும் கிடைத்துவிடும்.
இவ்வாறு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.
 

காத்திருந்த தினகரன்


இந்த முடிவை, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அமைச்சர்கள் தெரிவித்தனர். அவரும் ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, அதை, பத்திரிகையாளர்களிடம், அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.
ஜெயகுமார் தலைமையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டவர்கள் கூட்டாக வெளியிட்ட, இந்த அறிவிப்பு பற்றிய தகவல், பெங்களூரு சிறை வாசலில் காத்திருந்த தினகரனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, எந்த பதிலும் அளிக்க, அவர் மறுத்துவிட்டார்.
சிறையில் சசிகலாவை சந்தித்து, ஒரு மணி நேரம், 20 நிமிடம், இதுபற்றி தினகரன் பேசினார். வெளியே வந்த பின், இது குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம், பழனிசாமி அணியினருக்கு இல்லை. பொதுச் செயலருக்கு தான், அந்த

 

அதிகாரம் உள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து, சசிகலாவிடம் பேசினேன்.அவர், 'இரண்டு மாதம் காத்திருக்கலாம்' என, அறிவுரை கூறினார். அதன்படி, 60 நாட்கள் காத்திருந்து, கட்சியை கண்காணிக்க முடிவு செய்துள்ளேன்.அதற்குள், கட்சியை ஒன்று சேர்க்கின்றனரா என, பார்ப்போம். 60 நாட்களுக்குள், கட்சியை சரி செய்தால் வரவேற்போம். இல்லையென்றால், என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
 

விபரீத விளைவுகள்...!


தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறியதாவது:சசிகலா, தினகரன் பற்றி பேசுவதற்கு, கட்சியில் யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. கூவத்துாரில், 122 எம்.எல்.ஏ.,க்களை ஒருங்கிணைத்து, பழனிசாமியை முதல்வராக்கி, ஜெயகுமாருக்கு நிதி பொறுப்பை கூடுதலாக கொடுத்த சசிகலா, தினகரனை, யாரும் பார்க்கக் கூடாது என, சொல்வதற்கு, ஜெயகுமாருக்கு யோக்கியதை இல்லை.
கட்சியில், 10 அமைச்சர்கள் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவை, ஏற்க முடியாது. முதல்வர் பழனிசாமி, எந்த கருத்தையும் தெரிவிக்காதது ஏன்?தினகரன், சிறை சென்று, 42 நாள் கழித்து வெளியே வந்தார். இரு அணிகளும் இணைந்திருக்கும் என, நினைத்தார். இரட்டை இலையை மீட்பதற்கான பணிகளை செய்திருப்பர் என்றும் நினைத்தார்; ஆனால், செய்யவில்லை.
ஒன்றரை கோடி தொண்டர்கள் எடுக்க வேண்டிய முடிவை, சில அமைச்சர்கள் எடுப்பதை ஏற்க முடியாது. இந்த நிலை தொடருமானால், விபரீத விளைவுகள் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

தினகரனுடன் வந்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் விபரம்:



இன்பதுரை, தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், தங்கதுரை, ஏழுமலை, ஜக்கைய்யன், கதிர்காமு, ஜெயந்தி.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1784472

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.