Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களே அவதானம் ! பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி : வர்த்தக, கைத்தொழில் அமைச்சு

Featured Replies

மக்களே அவதானம் ! பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி : வர்த்தக, கைத்தொழில் அமைச்சு

 

 

 

நாட்டிலுள்ள விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட  அரிசி விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

rice.jpg

நாட்டில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது.

 

கொழும்பு புறக்கோட்டையில் விற்பனை செய்யப்பட்ட அரிசி வகை ஒன்று தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் வெளியாகியதையடுத்து இது பரவலாக பேச்பட்டு வருகின்றது.

 

பாஸ்மதி அரிசி கொள்வனவு செய்த பெண்ணொருவர் அதனை சமைத்த பின்னர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சோறு சமைத்து 24 மணித்தியாலங்கள் கடந்த பின்னரும் கெட்டு போகாமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த அரிசியில் சமைத்த சோற்று உருண்டைகளை தரையில் அடித்த போதும் சிதறாமல் பந்து போன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பிலான காணொளி ஒன்றையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதேவேளை மாகும்புரவில் அரிசி கொள்வனவு செய்த நபர் ஒருவரும் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பான செய்திகள் அனைத்தும் பொய்யான வதந்திகள் என்பதாக வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன வலியுறுத்தியுள்ளன.

 

அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான ஒரு செய்தி பரப்பப்பட்டிருந்தது.

 

எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன, உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளன.

 

அத்துடன் இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கியதன் பின்னர் மீண்டுமொரு முறை குறித்த அரிசியை பரிசோதனைக் கூடமொன்றில் சமைத்து பரிசோதனைக்குட்படுத்தியபோதிலும் எதுவித பிளாஸ்டிக் கலவைகளும் அடங்கியிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

 

எனவே பொதுமக்களின் நன்மை கருதி குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்கப்படும் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியை பொதுமக்கள் எதுவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என்றும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன உறுதிப்படுத்தியுள்ளன.

http://www.virakesari.lk/article/20640

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

"இறப்பர் பாஸ்­மதி வெறும் நாட­கமே"

 

 

லங்கா ச.தொ.­ச வில் இறப்பர் அரிசி விற்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­டு­வரும் கதையை ஏற்க முடி­யாது என ச.தொ.ச தலைவர் டி.எம்.பி.தென்­னகோன் தெரி­வித்தார்.

rice.jpg

கொழும்பு வொக் ஷல் வீதியில் உள்ள ச.தொ.ச. நிறு­வ­னத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் மாநாட்டில் ச.தொ.ச. தலைவர் தெரி­விக்­கையில்

பாகிஸ்­தானில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பாஸ்­மதி அரி­சி பூரண பரி­சோ­த­னை­களின் பின்­னரே எடுக்­கப்­பட்­ட­தா­கும். குறித்த அரிசி 2019.03.17 ஆம் திகதி வரை பாவ­னைக்­குட்­ப­டுத்­த­ப்ப­டக்­கூ­டிய நிலையில் உள்­ளது. சமூக வலைத்­த­ளங்­களில் ச.தொ.ச. ஊடாக இறப்பர் அரிசி விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக வதந்­திகள் பரப்­பப்­படத் தொடங்­கி­யதன் பின்னர் உட­ன­டி­யாக நான் புறக்­கோட்­டை­யி­லுள்ள ச.தொ.ச. நிறு­வ­னத்­துக்குச் சென்று குறித்த பாஸ்­மதி அரி­சியை வாங்கி உண­வுக்­காக பயன்­ப­டுத்­தினேன். எந்­த­ வி­த­மான இறப்­பரும் அதில் இல்லை  இது திட்­ட­மி­டப்­பட்ட ஒரு சதி­யாக இருக்­கலாம் என நம்­பு­கின்றேன்  ச.தொ.ச. தொடர்பில் திட்­ட­மிட்ட சதிகள் அரங்­கேற்­றப்­பட்டு வரு­கின்­றன. 

வெள்ள அனர்த்த காலங்­களில் 70 மில்­லி­ய­னுக்கு அதி­க­மான பொருட்­களை ச.தொ.ச. நிறு­வனம் மக்­க­ளுக்கு அரச அதிபர் மற்றும் பிர­தேச செய­லாளர் ஊடாக பகிர்ந்­த­ளித்து உதவி வரு­கின்­றது. இந்­நி­று­வனம் எப்­பொ­ழுதும் மக்கள் நலனை அடிப்­ப­டை­யாக வைத்தே வியா­பா­ரத்தில் ஈடு­ப­டு­கின்­றது.  சந்­தையில் உள்ள சில சுப்பர் மார்­கட்­க­ளை­விட ச.தொ­.ச.வில் விலை குறை­வாக இருப்­பதும் தற்­போது 375 ஆக இருக்கும் சதொச 500 ஆக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­மை­யா­னது ச.தொ.ச. நிறு­வ­னத்­துக்கு ஏற்­பட்­டுள்ள சவா­லாகும். இதுவும் இப்­பி­ரச்­சி­னைக்கு கார­ண­மாக அமை­யலாம்.

குறித்த பாஸ்­மதி அரி­சி­யை பொரளை மருத்­துவ ஆராய்ச்சி நிறு­வ­னத்­துக்கு அனுப்பி அதனை பாவ­னைக்­கு­கந்­ததா? என பரீட்­சித்­ததன் பின்னர் இது தொடர்பில்   குறித்த நாடகத்தை அரங்கேற்றியவர்களுக்கு  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் குறித்த பாஸ்மதி அரிசியை  தற் காலிகமாக விற்பனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/20647

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.