Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் 3-வது அணி: முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழக்கிறதா?

Featured Replies

தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் 3-வது அணி: முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழக்கிறதா?

 

 
 
 
சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டுத் திரும்பும் தினகரன்.
சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டுத் திரும்பும் தினகரன்.
 
 

அதிமுகவில் தற்போது தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. இந்த அணிகளால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசு பெரும்பான்மை பலத்தை இழக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால், அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி னார். இதனால் ஓபிஎஸ், சசிகலா தலைமை யில் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. சசிகலா அணிக்கு எம்எல்ஏக்கள் பலம் அதிகமிருந்ததால் அவரது ஆதரவுடன் கே.பழனிசாமி முதல்வரானார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா, கட்சியை கவனிக்க டிடிவி தினகரனை துணைப் பொதுச்செய லாளராக நியமித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணிகளும் சொந்தம் கொண்டாடின. அதனால், அதிமுக கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற் காலிகமாக முடக்கி வைத்தது. ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின், இரட்டை இலை சின் னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க திட்டமிட்டனர். சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கூடி ஆலோசித்து, தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக தினகர னும் தெரிவித்தார். அதன்பிறகும் இணைப் புக்கான பேச்சுவார்த்தை தொடங்கப் படவில்லை.

இந்நிலையில், இரட்டை இலை சின் னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். கடந்த 2-ம் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான டிடிவி தினகரன், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என அறிவித்தார்.

மேலும், 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக் கள் டெல்லி சென்று தினகரனை வர வேற்று அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் சென்னையில் தினகரனுடன் ஆலோசனை நடத்தியதுடன், பெங்க ளூரு சென்று சசிகலாவையும் சந்தித் தனர்.

இதற்கிடையே, தலைமைச் செயலகத் தில் நேற்று ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘தினகரனை ஒதுக்கி வைத்த முடிவில் உறுதியாக இருக் கிறோம். யாரும் தினகரனை சென்று பார்க்க மாட்டோம்’’ என தெரிவித்தார். அதேபோல, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்எல்ஏக்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்த நிகழ்வுகள், அதிமுகவில் ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி அணிகள் தவிர தினகரன் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளதை உறுதிப் படுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். இப்போது தினகரனுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி அதிமுக எம்எல்ஏக் கள் 3 அணிகளாக பிரிந்து இருப்பதால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந் தனர். அதில் தற்போது தினகரனுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருவதால் பழனிசாமியின் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திவாகரன் ஆதரவாளர்கள்

மேலும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களில் சிலர், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஒருவேளை முதல்வர் பழனிசாமி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கினால், திவாகரன் ஆதர வாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலும் உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடுகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம், பேரவை கூட்டத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஒரு வேளை, மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது, சட்டங்களை நிறை வேற்றுவதில் 3 அணிகளும் தனித்தனி யாக செயல்பட்டால், முதல்வர் கே.பழனி சாமி அமைச்சரவைக்கு சிக்கல் ஏற்படும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத் தாக உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/தினகரனுக்கு-ஆதரவாக-அதிமுகவில்-3வது-அணி-முதல்வர்-பழனிசாமி-அரசு-பெரும்பான்மையை-இழக்கிறதா/article9720902.ece?homepage=true

  • தொடங்கியவர்

டி.டி.வி.தினகரனிடம் படையெடுக்கும் எம்.எல்.ஏ.க்கள்! அதிர்ச்சியில் பழனிசாமி அணி

ttv_dinakaran_intervier_1a_12276.jpg

டி.டி.வி.தினகரனை நேற்று 11 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மேலும் ஏழு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்திருப்பது முதல்வர் பழனிசாமி அணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானத்தைத் தொடர்ந்து தினகரனுக்கு எதிராக காய் நகர்த்தியது முதல்வர் பழனிசாமி அணி. இரண்டாக பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்று சேர்க்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் செயல்பட்டனர். முதல்கட்டமாக சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து தள்ளிவைப்பதாக அறிவித்தனர். இதையடுத்து, கட்சியிலிருந்து விலகியிருப்பதாக தினகரன் அறிவித்தார். இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைதுசெய்யப்பட்டார். ஒரு மாத சிறைக்கு பின்னர் ஜாமீனில் வந்த தினகரன் நேற்று பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கட்சியிலிருந்து தினகரன் தள்ளிவைக்கப்பட்டுள்ளார். அவரது தலையீடு இல்லாமல் ஜெயலலிதா ஆட்சி நடைபெறுகிறது என்று தெரிவித்தார். "இன்னும் 60 நாள்கள் பொறுத்திருப்பேன். கட்சி வளர்ச்சியடைய வில்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று தினகரன் கூறியிருந்தார். இதனிடையே, அனைத்து முதல்வர் அறையிலும் முதல்வர் பழனிசாமி படங்கள் இன்று வைக்கப்பட்டது.

senthil_balaji_meets_ttv_1_12411.jpg

இந்தநிலையில், தினகரனுக்கு ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல், ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன், சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் உள்ளிட்ட 11 எம்எல்ஏகள் நேற்று தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இன்று பரமக்குடி எம்எல்ஏ முத்தையா,  மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு மோகன், அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன் ஆகியோர் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

 

எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது முதல்வர் பழனிசாமி அணியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/91479-edappadi-palaniswami-supporters-shifting-to-ttv-dinakarans-camp.html

  • தொடங்கியவர்

தினகரனுடன் அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு: அதிமுகவில் அடுத்தது என்ன?

 

 
DHINAKARAN_3172215f.jpg
 
 
 

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.

தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், கதிர்காமு, ஜக்கையன், ராஜன்செல்லப்பா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று அவரை சந்தித்தனர்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள தினகரனின் வீட்டுக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சென்று அவரை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் அதிமுகவை பரபரப்பு சூழ்ந்துள்ளது. இரு அணிகளாக இருந்த அதிமுக மூன்று அணிகளாக பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் அறையிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் மாட்டப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி Vs தினகரன்:

அதிமுகவில் ஏற்கெனவே எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரு அணிகள் இருக்கும் சூழலில் தினகரன் அணியை நோக்கி கட்சி சென்று கொண்டிருக்கிறது எனக் கூறலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

காரணம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதில் தற்போது தினகரனுக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் செயல்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதே. தற்போதைய சூழலில் பழனிசாமியின் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், டி.டி.வி.தினகரன் அணியினருக்கும் இடையேயான மோதல் முற்றிவரும் சூழலில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். நாளை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் - சபாநாயகர் இன்று திடீரென சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

8 மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை..

தினகரனை அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துவரும் நிலையில் முதல்வர் பழனிசாமி 8 மாவட்ட எம்.எல்.ஏக்களுடனான ஆலோசனை நடத்திவருகிறார்.

அதிமுக அதிர்வுகள்.. இதுவரை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால், அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி னார். இதனால் ஓபிஎஸ், சசிகலா தலைமை யில் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. சசிகலா அணிக்கு எம்எல்ஏக்கள் பலம் அதிகமிருந்ததால் அவரது ஆதரவுடன் கே.பழனிசாமி முதல்வரானார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா, கட்சியை கவனிக்க டிடிவி தினகரனை துணைப் பொதுச்செய லாளராக நியமித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணிகளும் சொந்தம் கொண்டாடின. அதனால், அதிமுக கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற் காலிகமாக முடக்கி வைத்தது. ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க திட்டமிட்டனர். சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கூடி ஆலோசித்து, தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக தினகர னும் தெரிவித்தார். அதன்பிறகும் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், இரட்டை இலை சின் னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். கடந்த 2-ம் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான டிடிவி தினகரன், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என அறிவித்தார்.

மேலும், 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக் கள் டெல்லி சென்று தினகரனை வர வேற்று அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் சென்னையில் தினகரனுடன் ஆலோசனை நடத்தியதுடன், பெங்க ளூரு சென்று சசிகலாவையும் சந்தித்தனர்.

இதற்கிடையே, தலைமைச் செயலகத் தில் நேற்று ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, "தினகரனை ஒதுக்கி வைத்த முடிவில் உறுதியாக இருக் கிறோம். யாரும் தினகரனை சென்று பார்க்க மாட்டோம்" என தெரிவித்தார். அதேபோல, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்எல்ஏக்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்த நிகழ்வுகள், அதிமுகவில் ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி அணிகள் தவிர தினகரன் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளதை உறுதிப் படுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். இப்போது தினகரனுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி அதிமுக எம்எல்ஏக்கள் 3 அணிகளாக பிரிந்து இருப்பதால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மானிய கோரிக்கைகளை நிறைவேறுமா?

இந்த பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடுகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம், பேரவை கூட்டத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஒரு வேளை, மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது, சட்டங்களை நிறைவேற்றுவதில் 3 அணிகளும் தனித்தனியாக செயல்பட்டால், முதல்வர் கே.பழனிசாமி அமைச்சரவைக்கு சிக்கல் ஏற்படும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/தினகரனுடன்-அடுத்தடுத்து-எம்எல்ஏக்கள்-சந்திப்பு-அதிமுகவில்-அடுத்தது-என்ன/article9721210.ece?homepage=true

  • தொடங்கியவர்

தினகரனின் அக்டோபர் அதிரடி!

 

தினகரன்

“அறுபது நாட்கள் வரை பொறுத்திருப்போம். அப்புறம் நடக்க போவதைப் பாருங்கள்” என்று தன்னைச் சந்திக்க வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம்  அனலாகப் பேசியுள்ளார் தினகரன். ஆளும்கட்சி ஆட்சிக்கு எந்நேரத்திலும் சிக்கல் வரலாம் என்கிற சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அமைச்சர்கள் தங்கள் அறையில் மாட்டியுள்ளார்கள். இன்னொருபுறம் அவர் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா  என்று தினகரன் வீட்டில் எம்.எல்.ஏ-க்கள்  ஆலோசனை நடந்திருக்கிறது. “அ.தி.மு.க ஆட்சி அடுத்த நான்கு ஆண்டுகள் நீடிக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்”என்கிறார் தினகரன் வீட்டில் ஆலோசனையில்  கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர்.

60 நாள் கவுண்டவுன்!


சிறையில் இருந்து தினகரன் வெளியே வந்தபோதே எடப்பாடி அமைச்சர்கள் மீது கடும் கோபத்தில்தான் இருந்தார். “இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்றுதான் நான் ஒதுங்கிப்போனேன். 45 நாட்களாக என்ன செய்தார்கள்” என்று வெளியே வந்தவுடன் தன்னுடைய ஆதரவாளர்களிடம் கேட்டபோதே, எடப்பாடிக்கு சிக்கல் என்பதை தினகரன் ஆதரவாளர்கள் உணரத் தொடங்கி விட்டனர்.  
பெங்களுரில் சசிகலாவை பார்க்க தினகரன் செல்லும் முன்பே எடப்பாடி தரப்பிடம் தினகரன் பேசியுள்ளார். “பதினைந்து நாட்களுக்குள் நான் சொல்வது மாதிரி நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், அறுபது நாட்கள் கழித்து நீங்கள் யாருமே அ.தி.மு.க கரைவேட்டியை கட்டமுடியாது. அதிகாரம் இருக்கிறது என்று ஆடுகின்றீர்களா? நாங்கள் நினைத்தால் அதிகாரமே இல்லாமல் செய்துவிடுவோம்” என்று சொல்லியுள்ளார். அறுபது நாள் என்பது சசிகலாவை சந்திப்பதற்கு முன்பே தினகரன் குறித்த கணக்கு தானாம். ஆனால் அதற்கு முன்பே எடப்பாடி பதவிக்கு கடும் நெருக்கடி வந்துவிடும் என்கின்கின்றனர் தினகரன் அணியினர்.

தினகரன் வீட்டில் ஆலோசனை

காவு கொடுக்கிறார்கள் கட்சியை!

அமைச்சர்கள் அனைவரும் சம்பாதிக்கும் நோக்கில்தான் இருக்கிறார்கள். ஆட்சி இல்லை என்றால் இவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். கட்சியை வைத்து கரன்சி பார்க்கும் வேலைதான் இப்போது நடக்கிறது என்று தினரகன் கோபப்பட்டுள்ளார். ஜெயக்குமாரின் கருத்துக்களை பார்த்து ஏகத்துக்கும் டென்சனாகி விட்டாராம். மூன்று பேரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.  ஆட்சியில் நமக்கு பங்கில்லை என்றால் எதற்கு ஆட்சி என்று அமைச்சர்களிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அலறவிட்டுள்ளார்கள் .


எங்கள் பக்கம் 43 பேர்!

தினகரன் வீட்டில் 26 எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைநடத்தியிருந்தாலும், தங்கள் பக்கம் 43 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக தினகரன் தரப்பினர் கூறுகின்றனர். பன்னீர்செல்வம் தரப்புடனும் பேசுவதற்குத் தயாராகி விட்டார்கள் தினகரன் அணியினர். பிரிந்து இருந்து நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என்ற ரீதியில் பன்னீரை தங்கள் பக்கம் கொண்டுவர முக்கிய புள்ளி ஒருவர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்கள். முதல்வர் எடப்பாடி, தலைமைச் செயலகத்தில் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தியதே தினகரன் தரப்பின் அதிரடியைச் சமாளிக்கதான் என்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் “நீங்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் அடுத்த நான்கு ஆண்டுகள் இந்த அரசைச் சிக்கல் இல்லாமல் ஓட்டமுடியும்” என்று எடப்பாடி பேச, எம்.எல்.ஏ ஒருவர் “ தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவை அமைச்சர்கள் யாரைக்கேட்டு எடுத்தார்கள்?" என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துள்ளார் முதல்வர்.,தினகரனுக்கு ஆதரவாக முதல்வரிடமே இப்படி சிலர் பேசியிருக்கிறார்கள். ஒருவேளை எடப்பாடி அணிக்கு சிக்கல் வந்தால்,அவரை  ஆதரிக்கலாமா என  பன்னீர் தரப்பு  யோசித்துவருகிறது. 

தினகரன்


ஆட்சிக்குச் சிக்கலா?

 தினகரனுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே நடக்கும் இந்தப் பனிப்போர் பத்து நாட்களுக்குள் முடிவுக்கு வராவிட்டால் ஆட்சி நீடிப்பது சிக்கல் என்கிறார்கள். இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தினகரன் பின்னால் அணிவகுத்தாலும், மன்னார்குடியை சேர்ந்த சசிகலா உறவுகள் சிலரே தினகரனுக்கு எதிராக இருப்பதால் தைரியமாக இருக்கிறார் எடப்பாடி. ஆனாலும் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் அனைத்து வேலைகளையும் தினகரன் தரப்பினர் ஆரம்பிக்கப் போகிறார்கள். ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்க தமிழ்செல்வன் அறிவித்தன் பின்னணியும் அதுதான் என்கிறார்கள்.நம்மால் ஆட்சிக்குச் சிக்கல் வரக்கூடாது என்று தினகரன் சொல்லியிருந்தாலும், தினகரனை தொடர்ந்து அவர்கள் புறக்கணித்தால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு  ஆட்சி நீடிப்பது கடினம் என்ற நிலைதான் உள்ளது. அமைச்சர் பதவியில் தனக்கு வேண்டியவர்களுக்கு இடம் கொடுப்பது, தன் கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்துவது என்ற நிபந்தனைகளை எடப்பாடி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அக்டோபர் மாதம் வேறு ஒரு திட்டத்தைக் களம் இறக்க தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். அந்தப் பயம், எடப்பாடியின் அமைச்சர்கள் அனைவருக்கும் இருப்பதால், இன்னும் சில நாட்களில் தினகரன் வசம் அவர்கள் வந்து விடுவார்கள் என்று தினகரன் தரப்பினர் நம்பிக்கையோடு உள்ளார்கள். அவ்வாறு வழிக்கு வராமல் போனால்,  அக்டோபருக்குப் பிறகு ஆட்சிச் சக்கரத்தில் மாற்றங்கள் நிகழும் என்பது உண்மை.

http://www.vikatan.com/news/tamilnadu/91525-this-is-dhinakarans-political-plan.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.