Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எடப்பாடி - 99, தி.மு.க. கூட்டணி - 98, தினகரன் - 25, ஓ.பி.எஸ்-12... தள்ளாடும் தமிழ்நாடு !

Featured Replies

எடப்பாடி - 99, தி.மு.க. கூட்டணி - 98, தினகரன் - 25, ஓ.பி.எஸ்-12... தள்ளாடும் தமிழ்நாடு !

 

மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டத்துக்கு ஆளும் அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அரசியல் பிரவேச அறிவிப்பால் எடப்பாடி அரசு தள்ளாடத் தொடங்கியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரையில் 25 எம்.எல்.ஏ.க்கள் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். 

                                   எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்



ஆக, இந்த நிமிடக் கணக்குப்படி 97 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஆட்சியாக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இருக்கிறது. அடுத்தடுத்த  அரசியல் வானிலை மாற்றங்களைப் பொறுத்து  97-ல் கொஞ்சம் கூடலாம், குறையலாம். எதிர்க்கட்சியான தி.மு.க. 89 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள  எம்.எல்.ஏ.க்களையும்  கணக்கிட்டால் தி.மு.க. 98 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துள்ளது. முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, 98-க்கு  கீழே போகாமல் தக்க வைத்துக்கொள்ளக் கூடிய கட்டாயத்துக்கு ஆளும் அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்  ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள 12 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிதான் எடப்பாடி அரசுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.  

                                                      ஆதரவாளர்களுடன் டி.டி.வி. தினகரன்


கையிருப்பு எம்.எல்.ஏ.க்கள் இதே  ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவி விடாமல் இருக்கத்தான்   கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி சென்னையில் இருந்து  காஞ்சிபுரம் கொண்டு  போகப்பட்டு கூவத்தூர்  சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு 'சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்' என்ற பயிற்சியை அவர்களுக்கு சசிகலாவே நேரில் எடுத்தார். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேரே கையில் இருந்ததால் சட்டசபையில்  ஓ.பன்னீர்செல்வம் தோல்வியைத் தழுவினார். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் முதலமைச்சராக நாற்காலியில் அமர்ந்தார். இவர்கள் நடத்திய பலபிரயோகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் சட்டைதான் கிழிந்தது.

இன்று அதே எடப்பாடி அரசு கவிழாமல் இருக்க ஓ.பி.எஸ். ஆதரவு தேவைப்பட்டாலும் அதில் வியப்பில்லை. பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், மூன்று நாள்களுக்கு  கூவத்தூரின் 'கோல்டன் பே ரிசார்ட்'  மூடப்படுவதாக அதன் முகப்பிலேயே எழுதி ஒட்டி வைத்து விட்டார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் அதே விடுதி மீண்டும் தேவைப்படலாம். அல்லது அதே வசதிகளுடன் கூடிய வேறொரு விடுதி தேவைப்படலாம். அதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரனை ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பார்த்து வரும் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 19 மாவட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கியிருக்கிறார். மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் ஆளும் கட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரேநாளில் ஓராயிரம் பிரேக்கிங் கொடுத்த நாளாக 6.6.2017 அமையவுள்ளது!
 

http://www.vikatan.com/news/tamilnadu/91492-tamilnadu-politics-is-in-unstable-situation.html

  • தொடங்கியவர்

தினகரனின்  அடுத்தடுத்த விக்கெட்டுகள்!  - அமைச்சர்களுக்கு எம்.எல்.ஏக்களின் அதிர்ச்சி

 

தினகரன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரளும் எம்.எல்.ஏக்களால் அமைச்சர்கள் திணறி வருகின்றனர். ' சட்டமன்றத் தேர்தலில் மாவட்ட அமைச்சர்களின் உதவியோடு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை எல்லாம் தினகரன் வளைத்து வருகிறார். அமைச்சர்களின் சமாதானத்தையும் எம்.எல்.ஏக்களில் பலர் ஏற்கவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டுத் தினகரன் திரும்பிய அதே வேளையில், ' கட்சியில் இருந்து அவர் ஒதுங்கியிருக்க வேண்டும்' என அறிவித்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார். ' என்னைக் கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. ஜெயக்குமாருக்கு வானளாவிய அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை' எனப் பதில் கொடுத்தார் தினகரன். இந்நிலையில், இன்று காலை தினகரன் வசிக்கும் அடையாறு வீட்டுக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து வருகை தந்தனர். இதுவரையில் 24 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தினகரன் அணியின் தங்க.தமிழ்ச்செல்வன் பேசும்போதும், ' சிலரை அடையாளம் காட்டவே எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து வருகின்றனர். ஜெயக்குமார் எந்த அடிப்படையில் அறிக்கை வெளியிடுகிறார் என்று தெரியவில்லை' எனக் கொதித்தார். 

எடப்பாடி பழனிசாமி" நேற்றைய கணக்கின்படி தினகரனுக்கு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாகத் தெரிவித்தனர். 'பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத் தீர்மானித்துவிட்டால், அவர் அணியில் உள்ள 12 எம்.எல்.ஏக்களும் நம்மை ஆதரிப்பார்கள்' என முதலமைச்சருக்கு, சக அமைச்சர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். ' உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்' என சிக்னல் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்று காலை முதல் நடக்கும் சம்பவங்களால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார் பழனிசாமி. ' நம்மைப் புறக்கணித்துவிட்டு பன்னீர்செல்வம் போல துரோகம் செய்கின்றவர்களுக்கு, நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும்' என்பதில் தினகரன் அணியினர் உறுதியாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவைக்கு எதிராக உள்ள எம்.எல்.ஏக்களை அணி திரட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் வெற்றிவேலும் தங்க.தமிழ்ச்செல்வனும். சில நாட்களுக்கு முன்பு ரகசியக் கூட்டம் போட்ட செந்தில்பாலாஜி தரப்பினரும் அட்டவணை சமூகத்து எம்.எல்.ஏக்களும் தினகரன் வளையத்துக்குள் வந்துவிட்டனர். 'நாற்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை தினகரன் அணிக்குக் கொண்டு வந்து வலுவைக் காட்ட வேண்டும்' எனத் திட்டம் போட்டுச் செயல்படுகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

" தினகரன் பக்கம் எம்.எல்.ஏக்கள் செல்லும் தகவல் கேள்விப்பட்டவுடன், நேற்று இரவே அமைச்சர்கள் பலரும் எச்சரிக்கையுடன் இருந்தனர். தங்கள் மாவட்டத்து எம்.எல்.ஏக்களைத் தீவிரமாகக் கண்காணித்தனர். சிலரைத் தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை. அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்குத் தேவையானதைக் கொடுத்து அமைதிப்படுத்தும்படி அறிவுறுத்தியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதற்குள் தினகரன் அணியினர் முந்திக் கொண்டனர். இன்று காலை சோளிங்கர் எம்.எல்.ஏ பார்த்திபன், குடியாத்தம் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் எம்.எல்.ஏ பாலு உள்ளிட்டோர் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து மூன்று விக்கெட்டுகள் பறிபோனதை, மாவட்ட அமைச்சர் வீரமணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே இந்த எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

இதற்குப் பதில் அளித்த அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவர், ' தினகரனை சந்திப்போம் என நினைத்து நான் இங்கு வரவில்லை. சசிகலாவை சந்திக்க தினகரன் மூலம் அப்பாயிண்மென்ட் கேட்டிருந்தோம். சசிகலாவை சந்திக்க முடியாததால் தினகரனை சந்தித்தோம்' எனப் பதில் சொல்ல, ' மன்னார்குடி சொந்தங்களையே சசிகலா சந்திப்பதில்லை. உனக்கு அனுமதி கொடுப்பாரா? என்ன பேரம் பேசினார்கள்?' என அமைச்சரின் ஆதரவாளர்கள் கிடுக்கிப்பிடி போட, ' என்ன பண்ணச் சொல்றீங்க. சட்டமன்றத் தேர்தலில் அம்மா பணம் கொடுத்ததால் ஜெயிக்க முடிஞ்சுது. இந்தமுறை தேர்தல் வந்தால் செலவுக்கு யார் பணம் கொடுப்பாங்க? அமைச்சர்கிட்ட நிறைய பணம் இருக்கு. எங்ககிட்ட என்ன இருக்கு?' என எதிர்க்கேள்வி கேட்டுள்ளனர். இதனால் அதிர்ந்து போன அமைச்சரின் ஆதரவாளர்கள், ' தேர்தலில் உங்களுக்கு சீட் வாங்கிக் கொடுக்க அமைச்சர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்னு தெரிஞ்சும் இப்படித் துரோகம் பண்றீங்களே. இது சரியா?' எனக் கேட்டபோது, எதிர்முனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதேநிலைதான், மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவுகிறது. 'நேரம் கிடைக்கும்போதே சம்பாதித்துக் கொள்ள வேண்டும்' என்பதில் எம்.எல்.ஏக்கள் பலர் தெளிவாக உள்ளனர். ஆட்சி நீடிப்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இந்த மனநிலையை தினகரன் ஆட்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்" என்கிறார் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆதரவாளர் ஒருவர். 

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபனை தொடர்பு கொண்டோம். " இதைப் பற்றி பேசும் நிலையில் நான் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டார். 

http://www.vikatan.com/news/tamilnadu/91495-why-are-mlas-meeting-ttv-dhinakaran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.