Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ - எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் #VikatanExclusive

Featured Replies

‘இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ - எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் #VikatanExclusive

 
 

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். "இன்று காலை வரையில் 29 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களுக்கும் இருந்த மோதல்தான் வேறு வழிகளில் வெளிப்படுகிறது. இதைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை' என்கின்றனர் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள். 

'அ.தி.மு.கவில் எத்தனை அணிகள் உள்ளன?' என்ற கேள்விக்கு விடை தெரியாத அளவுக்கு பல துண்டுகளாக சிதறியுள்ளனர் நிர்வாகிகளும் எம்.எல்.ஏக்களும். சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் 14 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதால், ஒவ்வொரு மாவட்ட எம்.எல்.ஏக்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சி நீடிப்பதற்குத் தேவையான எம்.எல்.ஏக்களை பன்னீர்செல்வம் கொடுத்தாலும் தினகரன் கை ஓங்கியிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். இதையடுத்து, இன்று மதியம் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார் பன்னீர்செல்வம்." ஆட்சி நிர்வாகத்துக்குள் தினகரன் தலையீடு இருப்பதைத் தொடக்கம் முதலே பேசிவந்தோம். எங்கள் பேச்சை அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது தினகரனை சந்திக்கச் செல்லும் எம்.எல்.ஏக்களைப் பார்த்தால், நாங்கள் சொன்னதுதான் உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது. தொடக்கம் முதலே மௌனமாக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்" என விவரித்த அ.தி.மு.க அம்மா அணியின் நிர்வாகி ஒருவர், 

"எடப்பாடி பழனிசாமியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறார் தினகரன். கூவத்தூரில் முகாமில் பேசப்பட்ட விஷயங்களில் பலவற்றை நிறைவேற்றவில்லை. தவிர, எம்.எம்.ஏக்களில் பலரும் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ, எவ்வளவு கிடைத்தாலும் லாபம் என்ற எண்ணத்தில் தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டனர். நேற்று தினகரனை சந்திக்க வந்த எம்.எல்.ஏக்களில் சிலர், 'பன்னீர்செல்வம் போலவே, எடப்பாடி பழனிசாமியும் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார். 'சிறையில் இருந்து நீங்கள் வந்துவிடக் கூடாது' என்பதில் கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர் உறுதியாக இருந்தனர். இது தமிழக அரசா? கொங்கு மண்டல அரசா? என்பதைப் போல, தனி லாபியை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். ஜெயக்குமார், வேலுமணி, வீரமணி, தங்கமணி உள்பட சிலரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியாக வேண்டும். அதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிறோம்' எனக் கூறியுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த தினகரனோ, 'எடப்பாடி பழனிசாமி நமக்கு எதிராகப் போக மாட்டார் என்றுதான் உறுதியாக நம்பினோம். பொறுமையாகவே அனைத்தையும் கவனிப்போம். நம்முடைய பலத்தை அவர் உணர்வார்' என விளக்கியிருக்கிறார். ஆளும்கட்சி தொலைக்காட்சியிலும் முதலமைச்சர் நடத்தும் ஆய்வுப் பணிகள் குறித்த செய்திகளும் தினகரன் குறித்த செய்திகளும் வழக்கம்போல வரத் தொடங்கியுள்ளன. பன்னீர்செல்வத்தை முழுவதுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார் தினகரன்" என்றார் விரிவாக. 

தினகரன்"ஆனால், இந்த விவகாரத்தை வேறு மாதிரி கையாண்டு வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி" என விவரித்த கொங்கு மண்டல எம்.எல்.ஏ ஒருவர், " இதுவரையில் பரவலாக எம்.பிக்கள் யாரும் தினகரனை நேரில் சென்று சந்திக்க வரவில்லை. எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் அவரை நோக்கிச் செல்கின்றனர். இதற்கு முழுக் காரணம், அமைச்சர்கள் மீதுள்ள அதிருப்திதான். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் இடையில் ஈகோ உருவாகிவிட்டது. இதில் சமரசம் ஏற்படும் என உறுதியாகக் கூற முடியாது. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் அமைச்சர் கனவில் இருக்கிறார்கள். அதனால்தான் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பன்னீர்செல்வம்போல முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை இறக்கிவிட்டால், மாற்று அரசு அமைவதற்கு வாய்ப்பில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, தினகரன் பக்கம் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆட்சிக்கு எதிராகக் கையெழுத்து போட வேண்டும். அப்படி ஒரு சூழல் வரும்போது, ஸ்டாலின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். இவர்கள் அப்படி ஒரு காரியத்தில் இறங்கினால், 'ஆட்சியைக் கவிழ்த்த துரோகி தினகரன்' என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வோம். இவர்களால், இன்னும் இரண்டரை மாதங்களுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. 

 

எனவே, தினகரனை எம்.எல்.ஏக்கள் சந்திப்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ‘தினகரனை நாம் நேரடியாகக் கையாள வேண்டியதில்லை. எம்.எல்.ஏக்களை சரி செய்தால் போதும்' என்ற மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் யாரும் அவரைச் சென்று சந்திக்கவில்லையே? நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துவிட்டால், ஸ்டாலினா? எடப்பாடியா? என்ற அரசியல் உருவாகும் எனவும் கணக்குப் போடுகிறார். நேற்று இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நம்மை நோக்கி எதுவும் வராது. நம்மிடம் பந்து வரும்போது அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை எல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. கற்பனைக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. நம்மைப் பற்றி பேசுகின்றவர்கள் பேசிப் பேசியே ஓய்ந்து போவார்கள். 28 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய வைத்து, என்னைப் பதவியில் இருந்து யாரும் நீக்கப் போவதில்லை. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் யாரும் கையெழுத்துப் போடப் போவதில்லை. அதுவரையில் தினகரனை எத்தனை பேர் சந்தித்தால் நமக்கென்ன?' எனப் பேசினார். அதனால்தான், எந்தக் கேள்விகளுக்கும் நேரடி விளக்கம் அளிக்காமல், அமைச்சர் ஜெயக்குமாரை பேச வைக்கிறார்" என்றார் விரிவாக. 

http://www.vikatan.com/news/tamilnadu/91575-mlas-are-the-target-not-ttv-dinakaran.html

  • தொடங்கியவர்

‘டாஸ் போட்டுப் பார்த்து அமைச்சர் பதவி கொடுங்கள்!’ - எடப்பாடி பழனிசாமியை திகைக்க வைத்த 2 எம்.எல்.ஏக்கள் #VikatanExclusive

 
 
 

எடப்பாடி பழனிசாமி

எம்.எல்.ஏக்கள் சந்திப்பு; அறிக்கைகள் வெளியிடுவது என அண்ணா தி.மு.கவின் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார் டி.டி.வி.தினகரன். இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளனர். இந்தக் காட்சிகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் அமைச்சர்கள். 'தினகரனை சந்தித்துவிட்டு வந்த எம்.எல்.ஏக்கள் பலரும், எடப்பாடி பழனிசாமியுடனும் நல்ல நட்புறவில் உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

திகார் சிறையில் இருந்து வெளியே வந்த நாளில் இருந்து, தன்னுடைய செல்வாக்கைக் காட்டும் வகையில் வலம் வருகிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். அவர் சிறை சென்ற காலத்தில், நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி ஆகியோர் மட்டுமே, சில மாவட்டங்களில் கண்டனக் கூட்டம் நடத்தி கவனத்தை ஈர்த்தனர். தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட எம்.எல்.ஏக்கள் பலரும் சசிகலா ஆதரவு முழக்கத்தை முன்வைக்கின்றனர். ‘தினகரனை எத்தனை எம்.எல்.ஏக்கள் சந்தித்தாலும், என்னுடைய ஆட்சிக்கு எந்த இடையூறும் வரப் போவதில்லை. இந்த ஆட்சிக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் செயல்பட மாட்டார்கள்' என நம்பிக்கையோடு பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்களால் கொதிப்பில் உள்ளனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள். 'இந்தளவுக்கு அவர் பேச யார் காரணம்? அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வருக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள், தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தனர். 

இந்த சந்திப்பின்போது பேசிய எம்.எல்.ஏ ஒருவர், 'எங்கள் இருவரில் ஒருவரை அமைச்சர் ஆக்குங்கள் அல்லது பன்னீர்செல்வம் பக்கம் இருந்து வரும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பதவி கொடுங்கள். அம்பா சங்கர் கமிஷன் அறிக்கையில், உங்கள் சமூகத்துக்கு இணையாக நாடார் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரவையில் அதற்கேற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 'யாருக்குப் பதவி கொடுப்பது?' என்ற குழப்பம் ஏற்பட்டால், டாஸ் போட்டுப் பார்த்துப் பதவி கொடுங்கள். தலை விழுந்தால் எனக்கும் பூ விழுந்தால் 'செல்வ'மானவருக்கும் பதவி கொடுங்கள். ஒருவேளை எங்களுக்குப் பதவி கொடுக்க முடியவில்லை என்றால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வேறு யாரையாவது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என விவரிக்க, இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'நான் கட்டாயம் செய்கிறேன். உங்கள் சமூகத்தினர் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பவர்கள். அம்மா இருந்தவரையில், உங்களை மிகவும் கௌரவமாக வைத்திருந்தார். அமைச்சரவையில் நீங்கள் இணைவது எனக்கும் நல்லதுதான். தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை நீங்களும் பார்த்துக் கொண்டுதானே வருகிறீர்கள்' எனக் கூறியிருக்கிறார்.

இதன்பிறகு எம்.எல்.ஏக்கள் இருவரும் ராக்கெட் ராஜா விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ளனர். 'ராக்கெட் ராஜாவை என்கவுண்ட்டர் செய்வதற்கான வேலைகளில் போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே, வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்ட்டர், 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.கவின் படுதோல்விக்குக் காரணமாக அமைந்தது. 'ராதிகா செல்வியின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்' என்று தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்னையாக்கியது தி.மு.க. அதிலிருந்து ஓரளவு மீண்டு வந்துவிட்டோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு போகும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராக்கெட் ராஜாவை என்கவுண்ட்டர் செய்யத் துடிக்கும் அதிகாரியிடம் பேசுங்கள்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர். சந்திப்பின் இறுதியில், 'அரசு ஒப்பந்தங்களிலும் எங்கள் சமூகத்து ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' எனக் கூறியுள்ளனர்.

“எம்.எல்.ஏக்களில் பலரும் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். 'ஒருநாளாவது அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும்' என்பதற்காகத்தான் தினகரனை சந்திக்கின்றனர். 'ஆட்சிக்கு எந்த இடையூறும் வரப் போவதில்லை' என்பதை அறிந்தவுடன், எடப்பாடி பழனிசாமியுடனும் நட்பு பாராட்டுகின்றனர். அதற்கேற்ப, எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 'எந்தவித சிரமம் இல்லாமல் சட்டசபைக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும்' என விரும்புகிறார். 'பன்னீர்செல்வமும் கைகோத்துவிட்டால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை நகர்த்தலாம்' எனக் கணக்குப் போடுகிறார். ‘அமைச்சர் பதவிக்குப் பூவா? தலையா? போடுவாரா’ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/91709-these-two-mlas-provide-a-different-option-to-edappadi-to-choose-them-as-minister.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.