Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை! போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன்

Featured Replies

மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை! போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன்

 

congress_clase_1_15157.jpg

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகள் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதால் அந்த இடமே போர்க்களமானது.

சென்னையில் கடந்த 3 ஆம் தேதி நடந்த கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பங்கேற்றார். அடுத்தநாள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு அவர் டெல்லி சென்றுவிட்டார்.

இந்தநிலையில், சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். மகளிரணி நிர்வாகிகளுடன் உறுப்பினர்கள் அல்லாத பெண்களும் மற்றும் ஆண்களும் வந்திருந்தனர். ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது மகளிரணி நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதோடு, தகாத வார்த்தையில் திட்டிக்கொண்டனர். மகளிரணியினருடன் வந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமானது. தகவல் அறிந்து மூத்த நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகளிரணி நிர்வாகிகளை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

congress_clase_1a_15408.jpg

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு உடனடியாகத்  தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்திமூர்த்தி பவனுக்கு அவர் விரைந்து வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "காங்கிரஸில் சண்டை கிடையாது. மகளிர் அணி கூட்டம் நடைபெற்று வருகிறது. மகளிரணி நிர்வாகிகளுடன் வந்தவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் சின்னப் பிரச்னை. அதுகுறித்து விசாரித்து யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முடித்துக்கொண்டார்.

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/91602-clash-between-congress-women-representatives-at-sathyamoorthi-bhavan.html

  • தொடங்கியவர்

'திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்!'- கொதிக்கும் ஹசீனா சையத்

 
 

Hasina_16343.jpg

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கைகலப்பைத் தொடங்கியிருக்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். இந்தமுறை அடிதடியை அரங்கேற்றியிருப்பவர்கள் மகிளா காங்கிரஸ் பிரமுகர்கள். பெண் நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கைகலப்பால் அதிர்ந்து போய் இருக்கிறார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர். 'பெண் நிர்வாகியைப் பதவியில் இருந்து நீக்கிய ஆத்திரத்தில், ஒருவருக்கொருவர் பலமாகத் தாக்கிக் கொண்டனர். இதன்பின்னணியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் ஹசீனா சையத் இருக்கிறார்' எனக் கொதிக்கின்றனர் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மகிளா காங்கிரஸின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத், மாநிலத் தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த சண்டை குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், "காங்கிரஸ் கட்சியில் இணைந்ததில் இருந்தே தனக்கென ஓர் அணியை உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறார் ஹசீனா சையத். நடிகை நக்மா உள்பட அகில இந்திய நிர்வாகிகள் சிலரின் ஆதரவில் செயல்பட்டு வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூர் மகிளா காங்கிரஸ் நிர்வாகி கௌரி கோபாலை பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். இதற்குப் பரிந்துரை செய்தது ஹசீனாதான் என மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வந்தனர். இன்று நடந்த கூட்டத்துக்கு கௌரி கோபாலும் வந்திருந்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஹசீனா மீது பாய்ந்து அவரை அடித்துவிட்டார். இதை எதிர்பார்க்காத ஹசீனா, தனது கணவருக்குப் போன் செய்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த ஹசீனாவின் கணவர், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளை அடித்து நொறுக்கிவிட்டார். இதில், மாநிலத் தலைவி ஜான்சிராணியும் பாதிக்கப்பட்டார். திருநாவுக்கரசர் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்" என்றார் விரிவாக.

 

சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் தொடர்பாக, ஹசீனா சையத்திடம் பேசினோம். "எனக்கும் ஜான்சி ராணிக்கும்தான் பிரச்னை. கூட்டம் முடிந்து நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என்னுடைய பின்பக்கத்தில் வந்து தலையில் தாக்கினார் கௌரி. இந்தத் தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. ரம்ஜான் மாத நோன்பில் இருக்கிறேன். எதற்காக என்னை அடித்தார் என்று தெரியவில்லை. உடனே, தலைவரிடம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறினேன். அவரும், 'கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. முடிந்ததும் பேசிக் கொள்ளலாம்' எனக் கூறினார். அதற்குள் மீண்டும் என்னைத் தாக்குவதற்கு வந்தார் ஜான்சி ராணி. உடனே, என் கணவருக்குப் போன் செய்து வரவழைத்தேன். அதற்குள் என் சேலையைக் கிழித்துவிட்டனர். நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்ததில்லை. அரசியலுக்கு வந்தால் இப்படியெல்லாம் அடி வாங்க வேண்டுமா. இப்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்" என்றார் பெருத்த அழுகையோடு.

http://www.vikatan.com/news/tamilnadu/91612-haseena-syed-complaints-over-congress-party-fight.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.