Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' கருணாநிதியை ஏன் வாழ்த்தினார் திரௌபதி மர்மு?' - பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் தேர்தல் சீக்ரெட் #VikatanExclusive

Featured Replies

' கருணாநிதியை ஏன் வாழ்த்தினார் திரௌபதி மர்மு?' - பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் தேர்தல் சீக்ரெட் #VikatanExclusive

 
 

திரௌபதி மர்மு

ந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ' பா.ஜ.க வேட்பாளர் யார்? எதிர்க்கட்சிகள் யாரை முன்னிறுத்தப் போகின்றன?' என்ற கேள்விகளும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன. ' குடியரசுத் தலைவர் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கிறார் பிரதமர் மோடி. பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய சூழலுக்கு மாநிலக் கட்சிகள் தள்ளப்படலாம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் 20 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்துவிட்டார் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி. " 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, அடுத்து வந்த சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் எதிரொலித்தது. எனவே, பா.ஜ.கவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. 'மதவாதத்துக்கு எதிரான அணி' என நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஓரணியின்கீழ் திரட்டும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி. அதற்கு முன்னோட்டமாக, கருணாநிதியின் சட்டப் பேரவை வைரவிழாவை பயன்படுத்திக் கொண்டார். 

கருணாநிதிகடந்த காலங்களில் சென்னை வந்தாலும், கருணாநிதியின் வீட்டுக்கே செல்லாத ராகுல்காந்தி, இந்தமுறை ஸ்டாலின் குடும்பத்துடனும் நெருங்கிப் பழகினார். இதற்குக் காரணம், தி.மு.கவுடன் பா.ஜ.க நெருங்கிவிடக் கூடாது என்பதுதான். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால்தான், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட படுதோல்விக்கும் தி.மு.க கூட்டணியில் இல்லாததுதான் என நினைக்கிறார் ராகுல். 'அகில இந்திய அளவில் பா.ஜ.கவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், 2019 தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற முடியும்' என நினைக்கிறார் ராகுல் காந்தி. அதற்காக, வரப் போகும் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தங்களுடைய பலத்தைக் காட்ட நினைக்கிறது காங்கிரஸ். இதற்கென தனியாகக் குழுவும் அமைத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறார் மோடி. இந்த அணியைக் கலைப்பதற்கான வேலைகளையும் துரிதப்படுத்தியிருக்கிறார்" என விவரித்த பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர், 

" காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் ஒன்று சேர்வதை பா.ஜ.க விரும்பவில்லை. தனக்கு எதிராகக் கட்டப்படும் இந்த வியூகத்தை மிக எளிதாக உடைக்க முடியும் என எண்ணுகிறார் பிரதமர். அதன் முன்னோட்டமாக, கருணாநிதியின் பிறந்தநாளுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநரும் சிறந்த நாடாளுமன்றவாதி எனப் பெயர் எடுத்தவருமான பா.ஜ.கவின் திரௌபதி மர்மு வாழ்த்து தெரிவித்தார். இந்த வாழ்த்து அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் தயாரானது. அமித் ஷா உத்தரவின்பேரில் வாழ்த்து தெரிவித்தார் திரௌபதி. பா.ஜ.க சார்பில் வாழ்த்துச் சொல்ல எத்தனையோ பேர் இருக்கும்போது, திரௌபதியை முன்னிறுத்துவற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. ஒடிஷாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணான திரௌபதி மர்மு, பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

மோடிகருணாநிதியை மர்மு வாழ்த்திய செய்தி, மறுநாள் முரசொலியில் வெளியானது. அவருடைய வாழ்த்தை மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர் தி.மு.க முன்னணி நிர்வாகிகள். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும்போது, ' காங்கிரஸ் கட்சியையும் மீறி தி.மு.க உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்' எனக் கணக்குப் போடுகிறார் மோடி. ஆதரிக்காவிட்டால், 'பழங்குடியின வேட்பாளரை தி.மு.க ஆதரிக்கவில்லை' என்ற கேள்வி எழும். தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.க நான்கு துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் கை உயர்வதற்கு வாய்ப்பு அதிகம். எனவேதான், 'நீங்கள் எங்களுக்கு எதிரி அல்ல' என நேரிடையாக சுட்டிக்காட்டுகிறது பா.ஜ.க. இதுகுறித்து கனிமொழியிடம் பேசிய அருண் ஜெட்லி, ' திரௌபதி மர்முவை வேட்பாளராக நிறுத்தினால், தி.மு.க ஆதரிக்குமா?' எனக் கேட்டிருக்கிறார். அதன் நீட்சியாக, கருணாநிதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார் திரௌபதி மர்மு" என்றார் விரிவாக. 

 

" குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் மர்முவைப் போலவே, சுமித்ரா மகாஜன், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்பட சில பெயர்கள் அடிபடுகின்றன. வடஇந்தியாவில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டால், தென்னிந்தியாவுக்கும் ஒரு பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து பிரதமரிடம் விவாதித்த அரசியல் நிபுணர்கள், ' இந்தியா முழுவதும் உள்ள பிராமண ஓட்டுக்கள் முழுமையாக உங்களுக்குக் கிடைக்கும். சிறுபான்மை மக்களுக்கு உங்கள் மீதுள்ள கோபம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. மூன்றாவதாக, எஸ்.சி வேட்பாளரை நிறுத்தினால், பா.ஜ.கவின் வாக்கு வங்கி அதிகரிக்கும். இறுதியாக, பழங்குடியினரை வேட்பாளராக முன்னிறுத்தினால், அந்த மக்களின் 7.5 சதவீத வாக்குகளும் உங்களுக்கு வந்து சேரும். சோனியா காந்தியின் யு.பி.ஏ அணி சிதறிப் போகும். மாநிலக் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும். பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட பல கட்சிகள் தள்ளப்படும். உங்கள் இமேஜ் உயரும்' எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் அமித் ஷா. இப்படியொரு வேட்பாளரை முன்னிறுத்தினால், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்படக் கூடிய சாதக, பாதகங்களை அவர் விவாதித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க இருக்கிறார் பிரதமர் மோடி. ' தி.மு.கவை நோக்கி வீசப்படும் அஸ்திரங்கள் என்ன பலனைத் தரப் போகிறது?' என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது பா.ஜ.க" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/91677-theres-a-reason-behind-draupadi-murmu-wishing-dmk-chief-bjps-trump-card-for-president-election.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.