Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன்

Featured Replies

Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன்

 

 

Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன்
 

Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது.

அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இன்றைய தினம் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளையும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள முரளிதரன்
2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடருடன் ஓய்வு பெற்றார்.

http://newsfirst.lk/tamil/2017/06/hall-fame-விருதைப்-பெற்று-வரலாற்/

https://www.facebook.com/icc/videos/1624800717539018/?pnref=story

  • தொடங்கியவர்

 

Hall of Fame விருது பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன்

  • தொடங்கியவர்

முரளிக்கு ஐ.சி.சி.யின் அதி உச்ச கௌரவம்

ஐ.சி.சி.யின் ஹோல் ஒவ் பேம் விருது இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

DB0wRvLXgAQD-4_.jpg

ஐ.சி.சி.யின்  அதியுச்ச கௌரவமான வாழ்நாள் சாதனையாளர் விருதான ஹோல் ஒவ் பேம் விருது இம்முறை நான்கு பேருக்கு வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் இந்த விருதை பெறும் முதல் இலங்கையர் முத்தையா முரளிதரன் என்பது விசேட அம்சமாகும்.

DB2SxWRUIAA4gOg.jpg 

லண்டனில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியின் இடைவேளையின் போது இந்ந விருது முரளிக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவை வீழ்த்தி வெற்றிக்களிப்பில் உள்ள இலங்கையர்களுக்கு ஐ.சி.சி. அதியுச்ச கௌரவம் இலங்கை வீரருக்கு கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே.

http://www.virakesari.lk/article/20746

  • தொடங்கியவர்

முரளிதரனுக்கு ஐ.சி.சி. இன் அதி உயரிய கௌரவ விருது

 
700057900CL00051_India_v_Sr-696x469.jpg
icc-clips-728-90-newest.jpg

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில், பல சாதனைகளைப் புரிந்து கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த முத்தையா முரளிதரனுக்கு ஐ.சி.சி. இனால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கான ஹோல் ஒப் பேம் (hall of fame) எனப்படும் அதி உயரிய விருது வழங்கப்பட்டது.

நேற்றைய தினம் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் இடைவேளை நேரத்தின் போது இந்த விருது முரளிதரனுக்கு ஐ.சி.சி. இன் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்ஸனினால் வழங்கப்பட்டது.

குறித்த கௌரவ விருதானது, கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகள் படைத்த  ஆர்தர் மோரிஸ், ஜோர்ஜ் லொஹ்மான் மற்றும் க்ரேன் ரோல்டன்  ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கும் ஐ.சி.சி.  மற்றும் கிரிக்கெட் ஹோல் ஒப் பேம் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் மத்தியில் இவ்விருது வழங்கப்பட்டது. உலகளவில் இந்த விருதைப்பெற்ற 83ஆவது வீரராகவும் அதேநேரம் இலங்கை சார்பாக இந்த விருதைப் பெற்ற முதல் கிரிக்கெட் வீரராகவும் வரலாற்றில் பதிவானார்.

இந்நிகழ்வின் போது பேசிய முத்தையா முரளிதரன், ”இந்த விருதைப் பெறுவது எனக்கு பெருமையும் மரியாதையும் கிடைத்த ஒரு தருணமாக கருதுகின்றேன். அத்துடன், முக்கியமாக ஐ.சி.சி கிரிக்கெட்  விருதினை பெறுவதே கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருக்கின்றது. அந்த வகையில், புகழ்மிக்க இந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் போது இதனை பெற்றுக்கொள்வது மேலும் பெருமை சேர்க்கின்றது” என்று கூறினார்.  

இந்த விருதை ஐ.சி.சி எனக்கு வழங்கியமைக்காக நன்றி கூறுகின்றேன். ஏனென்றால் இது வாழ்க்கை முழுவதும் மிகப்பெரிய கௌவரவத்தை எனக்கு வழங்கியுள்ளது.

இந்த விருது குறித்து பேசிய ஐ.சி.சி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்ஸன், ”இந்த விருது முரளிதரனுடைய சாதனைகளைப்பற்றி எடுத்துக் கூறுகின்றன. அவருடைய சிறப்பான பந்து வீச்சு, வேகம் மற்றும் பந்தைக் கட்டுப்படுத்தும் விதம் சிறப்பாக அமைந்திருந்தது. அத்துடன் அவருடைய தூஸ்ரா பந்தின் அறிமுகத்தின் பின்னர் உலகிலுள்ள துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொள்ள கடினமான பந்து வீச்சளராக மாறினார்” என்று தெரிவித்தார்.   

சக வீரர்கள் மற்றும்  ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமான ஒரு வீரராக இருந்தார். இலங்கை கிரிக்கெட்டை மட்டும் அவர் பிரபலப்படுத்தவில்லை, உலகெங்கிலுமுள்ள கிரிக்கட் ரசிகர்கள் அவருடைய பந்து வீச்சை பார்த்து ரசிக்க திரண்டிருந்தார்கள். அந்த வகையில் இந்த விருதை பெற்றுக்கொண்ட முத்தையா முரளிதரனுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று டேவிட் ரிச்சர்ட்ஸன் மேலும் தெரிவித்தார்  

முரளிதரனின் கிரிக்கெட் சாதனைகள்

  • கிரிக்கெட் வரலாற்றில் 133 டெஸ்ட் போட்டிகளில், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய வெற்றிகரமான ஒரே ஒரு வீரர் முரளிதரன்.  
  • மேலும் 67 இன்னிங்சுகளில் 5 இற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் 22 இன்னிங்சுகளில் 10 இற்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
  • அத்துடன், 350 ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
  • 1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளராகவும் 2002ஆம் ஆண்டு உலக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவுடன் கூட்டு சம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்ட அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

http://www.thepapare.com/

 இவ்விருது கிடைத்ததன் மூலம் முரளிக்கு  கெளரவமாக இருக்கலாம் , ஆனால் களங்கம் "Hall of Fame" விருதுக்குத்தான்.....,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.