Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடுபிடிக்கிறது ! விஜயபாஸ்கர் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த சென்னைக்கு மாற்றம்

Featured Replies

சூடுபிடிக்கிறது !
விஜயபாஸ்கர் வழக்கு விசாரணையை
துரிதப்படுத்த சென்னைக்கு மாற்றம்
 
 
 

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான, வருமான வரி வழக்கு விசாரணை, சென்னைக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கை, சென்னை யில் உள்ள தலைமை ஆணையர் தலைமையிலான குழு, விசாரிக்க உள்ளது.

 

Tamil_News_large_1787321_318_219.jpg

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில், விஜயபாஸ்கர் வீடுகளில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அவரது நண்பர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, அமைச்சர்கள் மூலம், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின; தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின், அமைச்சர் விஜய பாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, ஏழு கோடி ரூபாய் பணம் பெற்ற புகாரில், நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடந்தது.

அதன்பின், இந்த சோதனைகள் தொடர்பான விசாரணை தகவல்கள் வெளியாகவில்லை. இதில், திடீர் தொய்வு அடைந்துள்ளதாக, விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து, தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை, தொய்வின்றி சென்று கொண்டிருக்கிறது. விஜயபாஸ்கரின் முக்கிய தொழிலான குவாரி மற்றும் அதை சார்ந்த தொழில்கள், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட

தென் மாவட்டங்களில் உள்ளன. அதனால், அவர் தொடர்பான விசாரணையை, கோவை, மதுரை வருமான வரித்துறை அதிகாரிகளே மேற்கொண்டு வந்தனர்.

தற்போது, விஜய பாஸ்கர் தொடர்பான விசாரணையை, ஒரே இடத்திற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில், வருமான வரி புலனாய்வு பிரிவில், சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில், மூன்று தனி மதிப்பீட்டு பிரிவுகள் இயங்குகின்றன. அவற்றில், தலா மூன்றுஅல்லது நான்கு உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இதில், சென்னையில் மட்டும், மூன்று பிரிவு கள் உள்ளன. அவை, புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், முதன்மை தலைமை ஆணையர் தலைமையில் இயங்குகின்றன. அதில், மத்திய பிரிவுக்கு, விஜய பாஸ்கர் வழக்கு மாற்றப்படுகிறது. அவர் தொடர் பான அனைத்து ஆவணங்கள்,
இனி அப்பிரிவில்மதிப்பீடு செய்யப்படும்.

வழக்கு விசாரணை தொடர்பாக, நாங்கள்,மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஒரு வழக்கை, 21 மாதங்களுக்குள் முடிக்க, எங்களுக்கு அவகாசம் உள்ளது. வழக்கு, சீரான திசையில் சென்று கொண்டிருக்கிறது. உரிய காலத்திற்குள், விசாரணை முடிக்கப்படும். அவரது ஏழு ஆண்டு கால வருமானத்தை, ஆய்வு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

ரூ.21 கோடி வரி ஏய்ப்பு: அமைச்சர் மனைவி ஒப்புதல்


சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி, அவரது தந்தை ஆகியோரிடம் நடத்திய விசாரணை யில், 21 கோடி ரூபாய் அளவுக்கு, வருமான வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புக் கொண்டு உள்ளனர். வருமான வரித்துறைஅதிகாரிகள் கூறியதாவது:

விஜயபாஸ்கருக்கு, புதுக்கோட்டை மாவட்டத் தில், மணல் குவாரி, கல்வி நிறுவனங்கள், நிலம் என, ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றில் சில வற்றை, விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, தந்தை சின்னதம்பி ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

 

திருச்சியில் நடந்த விசாரணையில், அவரது தந்தை, சில வகைகளில் வருமான வரி ஏய்ப்புசெய்ததை ஒப்புக் கொண்டார். சென்னை யில், மே, 4ல் நடந்த பல மணி நேர விசாரணை யில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப் பட்டதை, மனைவிரம்யாவும் உறுதி செய்தார். இதன் மூலம், 21 கோடி ரூபாய் அளவிற்கு, அவர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்து இருப்பது,விசாரணையில் தெரிய வந்தது. அதற்கு, வரி செலுத்தவும் சம்மதித்து உள்ளனர்.
 

ஏன் தாமதமாகிறது?


புஹாரியா, கோகுலம் சிட் பண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் சோதனை முடிந்து, சில வாரங்களுக்குள், அவர்கள் செய்த வரி ஏய்ப்பை, உடனடியாக மதிப்பிட முடிந்தது. அவர்களது அன்றாட பணிகள் பாதிக்கக் கூடாது என்பதால், அவர்கள் முழு ஒத்துழைப்பு தந்ததும், அதற்கு முக்கிய காரணம். இதே போல, விசார ணைக்கு, நடிகை ராதிகாவும் நன்கு ஒத்துழைத் தார். ஆனால், சரத்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் சரியாகஒத்துழைக்கவில்லை.

விஜயபாஸ்கர், அமைச்சராக உள்ளார். சரத்குமார், நடிகராக உள்ளார். அதனால், 'இமேஜ்' பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். எனவே, அவர்களிடம் நிதானமாக தான் விஷயங்களை பெற வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1787321

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.