Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கௌதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம்... தம்ஸ்-அப் சொல்கிறதா?- ‘ரங்கூன்’ விமர்சனம்

Featured Replies

கௌதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம்... தம்ஸ்-அப் சொல்கிறதா?- ‘ரங்கூன்’ விமர்சனம்

‘பிறப்பதும், இறப்பதும் சுலபம். இதற்கு நடுவில் வாழ்வதுதான் கஷ்டம்’ என்னும் கெளதம் கார்த்திக்கின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளும், துரோகமும்தான் ரங்கூன். 

ரங்கூன்

80-களில் பர்மாவிலிருந்து அகதிகளாக பலர் இந்தியாவிற்கு வந்து செட்டிலானார்கள். அப்படி கெளதம் கார்த்திக் குடும்பம் சிறுவயதில் சென்னை வருகிறார்கள். கெளதம் வளர்ந்ததும், செளக்கார்பேட்டையில் உள்ள 'சீயான்’ என்றழைக்கப்படும் கடத்தல் வியாபாரி  சித்திக்கிடம் வேலைக்குச் சேர்கிறார். தன்னுடைய இரண்டு நண்பர்களோடு சேர்ந்து, சித்திக்கின் கடத்தல் தொழில் தொடர்கிறார் கெளதம். இதற்கு நடுவே சனா மக்பூல் மீது காதல். காதலுக்காக கடத்தல் தொழிலைவிட நினைக்கும் கெளதமிற்கு சித்திக் கடைசியாக ஒரு அசைன்மென்ட் தருகிறார். அதில் நிகழும் பிரச்னை, அதைச் சமாளிக்க செய்யும் தவறுகள், இதற்கெல்லாம் யார் மாஸ்டர் ப்ளான் என்ற ட்விஸ்டுகள்தான் ரங்கூன்.

டல் மேக்கப்பில் பர்மா ரிட்டர்னாகவே பளிச்சிடுகிறார் கெளதம் கார்த்திக். சண்டை போடும்போதும், துரோகத்தில் கதறி அழும்போதும் என நடிப்பில் நல்ல முன்னேற்றம். ஆனாலும் ஒரு முழுமையான நடிகனுக்குத்  தேவைப்படும் ஏதோ ஒன்று குறைகிறது கெளதமிடம். இவரின் நண்பர்களாக கதை முழுவதும் டேனியல் போப், லல்லு இருவரும் பயணிக்கிறார்கள். சீரியஸான இடங்களில் காமெடியில் வெடிக்கும் டேனியல், மெட்ராஸ் கலையரசனை நினைவு படுத்தும் லல்லு என இருவருமே நல்ல காஸ்டிங்.

Rangoon Heroine


ஆங்கிலோ இந்தியன்  சனா மக்பூல் அழகிலும் நடிப்பிலும் ஒகே. பேசப்படும் அளவிற்கு ரோல் இல்லாவிட்டாலும் தமிழ் சினிமாவிற்கு க்யூட் என்ட்ரி. மலையாளத்தில் கேரக்டர் ரோலில் வெரைட்டி காட்டிய சித்திக், தமிழிலும் தேர்ந்த நடிப்பு. மலையாளச் சாரலோடு தமிழ்பேசினாலும், நடிப்பில் அதை சமன் செய்கிறார்.  

கள்ளக் கடத்தல் செய்யும் ஒருவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற ஒன்லைனுக்குள் மட்டுமே முதல் பாதி பயணிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கதை வழிமாறி மாற்றுப்பாதையில் சென்று திரும்பிவருகிறது. கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பில்டப் பெரிதாக இருந்தாலும் புத்திசாலித்தனமான நகர்வுகள் எதுவும் இல்லை. 'கேசவன்' கேரக்டர் சித்தரிப்பில் முழுமையில்லை. 

பர்மாவை காட்சிப்படுத்திய விதம், கள்ளக் கடத்தல் சீன்கள் என விறுவிறுப்பில் திரையை ஆளுகிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. காதல், காமெடிக்கென தனி ட்ராக்கு வைத்து ரசிகர்களை வதைக்காமல் எடுத்த கதையில் படத்தைச் சொன்ன விதத்தில் இயக்குநருக்கு க்ளாப்ஸ். ஆனாலும் பல தமிழ் படங்களின் காட்சிகள் ரெஃபரன்ஸாக மனதுக்குள் வந்துசெல்கிறது. காட்சிகளில் மட்டும் இன்னும் வெரைட்டி காட்டியிருக்கலாம். ஸ்கிரிப்ட்டை விட மேக்கிங்கில் கவனம் ஈர்க்கிறார்.

"பணம் நிஜமல்ல வெங்கட்... நிஜம் மாதிரி", "அப்பாவோட உண்மையான பாசத்தையும், பொய்யான கோபத்தையும் அப்புறமா நான் பாக்கல", "பெரிய முடிவெடுக்க ஒரு சின்ன நேரம் போதும்" வசனங்கள் ரொம்பவே ஷார்ப்

பறவை பார்வையில் பர்மாவை காட்சிப்படுத்தியது, எதார்த்தமான சண்டைக்காட்சிகள் என ஒளிப்பதிவில் அன்ஷ் தருண் குமார் கச்சிதம். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளிலும், கடத்தல் காட்சிகளிலும் எடிட்டிங்கில் சுவாரஸ்யப்படுத்துகிறார் பிரசன்னா ஜிகே. 

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அந்த அளவிற்கு அழுத்தமாக இல்லை. காட்சியோடு இணையாமல் தொங்குகிறது. 

 

கெளதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம் இது. இதுவரை அவர் நடித்த படங்களை விட  ரங்கூன் ஒருபடி மேலே என்பது மட்டும் உறுதி.  

http://www.vikatan.com/cinema/movie-review/91890-rangoon-movie-review.html

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: ரங்கூன்

 
 
rangoon_3174455f.jpg
 
 
 

பர்மாவிலிருந்து (மியான் மர்) புலம்பெயர்ந்து வரும் தமிழ் குடும்பத்தில் எட்டு வயதுச் சிறுவன் வெங்கட் (கௌதம் கார்த்திக்). வட சென்னையின் சவுகார்பேட்டை யில் குடியேறும் அந்தக் குடும்பம் எதிர்பாராமல் குடும் பத் தலைவரை இழக்கிறது. தாயின் அரவணைப்பில் வளர்ந்து ஆளாகும் வெங்கட், நகைக்கடை வைத்திருக்கும் குணசீலனிடம் (சித்திக்) வேலைக்குச் சேர்கிறான். அவரோ முறைகேடான வழி யில் வெளிநாட்டிலிருந்து தங்க பிஸ்கெட்டுகளை வரவழைத் துக் கறுப்புச் சந்தையில் விற்று வந்த வியாபாரி. வெங்கட்டின் துறுதுறுப்பைப் பார்க்கும் அவர், தனது தவறான தொழிலை மீண்டும் கையில் எடுக்கிறார்.

தங்கக் கடத்தல்காரர் களைப் பிடிக்கப் போலீஸ் வலை விரிக்கிறது. கடைசியாக ஒருமுறை சென்னையிலிருந்து ரங்கூனுக்குத் தங்கத்தைக் கடத்தி, கிடைக்கும் பெரிய தொகையோடு தொழிலை விட்டுவிட முடிவெடுக்கிறார் கள் வெங்கட்டும் முதலாளி குணசீலனும்.

ரங்கூன் செல்ல அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, அங்கே நடக்கும் சம்பவங்கள், சென்னை திரும்பியதும் காத்திருக்கும் திருப்பம் எனப் போகிறது கதை.

திறமை, உழைப்பு இருந் தாலும் தப்பு வழி பல இழப்பு களை உண்டாக்கும் என்று கூற வருகிறது கதை. கேமராவைப் பார்த்து வசனமாக அதை வகுப்பு எடுக்காமல், கதா பாத்திரங்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் வழி யாகச் சொல்லி முதல் முயற்சியிலேயே கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. விறு விறுப்பாகவே விரிகிறது திரைக்கதை.

கைது செய்யப்படும் கதா நாயகன், “பிறக்குறது ஈசி, சாகு றது அதை விட ஈசி, வாழறது தான் கஷ்டம்” என்று பேசும் வசனத்திலிருந்து பின்னோக்கி விரிகிறது படம்.

பர்மாவிலிருந்து சென்னை வரும்போது “யாத்ரிகா நீ போய் வா மகனே…!” என்று பிரிவின் துயரைக் கூறும் மறைந்த பாடலாசிரியர் நா.முத் துக்குமாரின் வரிகளுக்கு வலிமிகுந்த கவிதையாய் காட்சியை நிறுத்துகிறது படப் பிடிப்பு. மொழியும் மண்ணும் தாய்வீடாக இருந்தாலும் புது ஊர், புது மக்கள் என்ற மலைப்பு அடங்குவதற்குள், ஓடிவந்து சிறுவன் வெங் கட்டை விளையாட அழைக் கும் சிறுவன் குமாரும் நண்பர் களாகி உறவுகளாகவும் மாறும் கட்டம் ‘பொற்காலம்’ படக் காட்சியை நினைவூட்டினாலும் நெகிழ்வு.

விஜய், அஜித் ரசிகர் குழுக் களைக் காட்சிப்படுத்திய விதமும், ரஜினி பட சுவரொட்டி, செய்யது பீடி விளம்பரம் கொண்டு 1990-களின் கால கட்டத்தை நினைவூட்டும் கலை இயக்கமும் நேர்த்தி.

வெங்கட், குமார் கூட்டணி யில் மற்றொரு நண்பனாக இடம்பிடிக்கும் ‘டிப்டாப்’பின் (டேனியல் பாப்) நகைச்சுவை உணர்வை மீறி, அவரது கதா பாத்திரம் வார்க்கப்பட்டிருக் கும் விதம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. இரண்டாம் பாதியில் மூன்று நண்பர்களை மட்டுமே வைத்து அடுத்தடுத்து திருப்பங்களைக் கொடுத் திருக்கிறார் இயக்குநர்.

வெங்கட்டாக வரும் கௌதம் கார்த்தி முதல்முறை யாக அர்ப்பணிப்புடன் நடித் திருக்கிறார். சண்டைக்காட்சி களில் வேகம், சாதுர்யம் என ஈர்க்கிறார். இவர் தவறான பாதையில் பயணிப்பதை அறிந் தும் கோபப்படாத(!) காதலி யாக, ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்தில் கவ ரும் அறிமுகம் சானா.

கதையுடன் ஒட்டி நிகழக் கூடிய இயல்பான நகைச் சுவைக்கு நல்ல வாய்ப்பிருந் தும் அதில் கோட்டை விட் டிருக்கிறார் இயக்குநர்.

பாசம், நட்பு, காதல், பொறாமை, துரோகம், இழப்பு எனக் கதாபாத்திரங்கள் எதிர் கொள்ளும் பல உணர்வுகளை முடிந்தமட்டும் வலுவான காட்சி கள், வேகமான திரைக்கதை பின்னலுடன் விரிந்து நம்மை ஈர்க்கிறது ரங்கூன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-ரங்கூன்/article9725785.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.