Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டி உறவாடுவதா; ஒதுக்கி வைப்பதா? குழப்பத்தில் தவிக்கும் தமிழக மந்திரிகள்

Featured Replies

ஒட்டி உறவாடுவதா; ஒதுக்கி வைப்பதா?
குழப்பத்தில் தவிக்கும் தமிழக மந்திரிகள்
 
 
 

சசிகலா குடும்பத்தை விரட்டவும் முடியாமல், ஒட்டி உறவாடவும் முடியாமல், அமைச்சர்கள் தடுமாறி வருகின்றனர்.

 

Tamil_News_large_178777320170610233459_318_219.jpg

ஜெ., இருந்த வரை, அமைச்சர்கள், அவர் சொல்லுக்கு மறு சொல் கூறாமல், அடக்கமாக இருந்தனர். அவர் மறைவுக்கு பின், சசிகலா சொல்லுக்கு கட்டுப்பட்டனர். அவர் சிறைக்கு சென்றதும், தினகரன் சொல்லுக்கு கட்டுப்பட்டனர். தினகரன் சிறைக்கு சென்றதும், சுதந்திரமாக செயல்படத் துவங்கினர்.

கடும் அதிர்ச்சிஅதே நிலையை தற்போதும் தொடர விரும்புகின்றனர். எனவே, சசிகலா மற்றும் தினகரனை சந்திக்க, யாரும் செல்ல வில்லை. இது, சசிகலா குடும்பத்தின ருக்கு, கடும் அதிர்ச்சியை அளித்தது. ஜாமினில் வந்த தினகரன், இதே நிலை தொடர்ந்தால், கட்சியும், ஆட்சியும், தங்கள் கையை விட்டு போய்விடும் என்பதை உணர்ந்தார்.

பெங்களூரு சிறைக்கு சென்று, சசிகலாவிடம் நிலைமையை தெரிவித்தார். 'கட்சி மற்றும்

ஆட்சியை, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, முயற்சி செய்' என, அவரும் ஆலோசனை கூறினார். அதைத் தொடர்ந்து, தினகரன், தன் ஆதரவு எம்.எல் ஏ.,க்களை, சந்திக்க துவங்கினார். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், தன்னிடம் வருவர் என, எதிர் பார்த்த நிலையில், 32 பேர் மட்டுமே, அவரை சந்தித்தனர்; மற்றவர்கள் வரவில்லை.இதனால், தினகரன் அதிர்ச்சி அடைந்தார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூடி ஆலோசித்த னர். ஆலோசனைக் கூட்டத்தில், 'தினகரன், ஆட்சியை கலைத்தால், ஜெ., ஆட்சியை கலைத்து விட்டார் என்ற அவப்பெயர், சசிகலா குடும்பத்திற்கு ஏற்படும். அதை, அவர்கள் விரும்ப மாட்டார்கள்' என, மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார்.
 

'துரோகம்'


நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், சசிகலா குடும்பத்தினர் தலையீடு இன்றி, இன்னும் நான்கு ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய லாம்' என, முதல்வர் கூறியுள்ளார்; அதை, அமைச் சர்கள் அனைவரும் ஏற்றனர். இதை யடுத்தே, அமைச்சர்கள் யாரும், தினகரனை சந்திக்க செல்ல வில்லை. அவர்களை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு, மத்திய அரசுஆதரவுடன், ஆட்சியை தொடர முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் கள், முதல்வர் மற்றும் அமைச்சர்களை, தினமும் சந்தித்து வருகின்றனர். அப்போது அவர்களிடம், 'உங்களுக்கு நன்றி இல்லையா; கூவத்துாரில் தங்க வைத்து, ஆட்சியை உங்க ளிடம் கொடுத்தது,

 

சசிகலா மற்றும் தினகரன் தானே... அவர்களுக்கு துரோகம் செய்கிறீர்களா?' என, கேள்விகளால் துளைத்து எடுக்கின்றனர்.

'அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால், ஆட்சியை கலைத்து விடுவோம்' என்றும், மிரட்டி வருகின்றனர். இதனால், அமைச்சர்கள், செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தினருடன், ஒட்டி உறவாடி னால், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அதிருப்தியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சுதந்திரமாக செயல்பட முடியாமல், அடிமை கள் போல், அவர்கள் சொல்வதை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.சசிகலா குடும் பத்தை ஒதுக்கி தள்ளினால், அவர்கள் மிரட் டலை சந்திக்க வேண்டி வரும்; ஆட்சி கவிழ வும் வாய்ப்புள்ளது. எனவே, என்ன செய்வது என, தெரியாமல், அமைச்சர்கள் தவித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1787773

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.