Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகசின் படுகொலை, ரத்துபஸ்வல சம்பவங்களுக்கு கோத்தாவே காரணம்!!

Featured Replies

மகசின் படுகொலை, ரத்துபஸ்வல சம்பவங்களுக்கு கோத்தாவே காரணம்!!

குற்றஞ்சாட்டுகின்றது இடதுசாரி நிலையம்

 
 
மகசின் படுகொலை, ரத்துபஸ்வல சம்பவங்களுக்கு கோத்தாவே காரணம்!!
 

மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என்று இடதுசாரி நிலையம் குற்றம்சாட்டியுள்ளது.

மக்கள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இடதுசாரி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

அவர் தெரிவித்ததாவது-

வசிம் தாஜுடீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே உறுதியானது. அதற்கு முன்னர் அது ஒரு விபத்து என்றே கூறப்பட்டது. இது தொடர்பில் விசாரணை செய்ய அப்போதைய மகிந்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். மகசின் சிறைச்சாலையில் பெயர் குறிப்பிட்டு 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அது தொடர்பில் வழக்கு விசாரிக்கப்பட்டதா?. ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே?. கோத்தபாய ராஜபக்சவின் தேவைப்பாட்டுக்கு அமையவே படுகொலை செய்யப்பட்டார்கள். அது தொடர்பில் யாரும் பேசவில்லை.

ஒரு குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செய்த குற்றங்களை மூடிமறைக்க முயன்றனர். அது தொடர்பிலேயே முதலில் விசாரணை செய்ய வேண்டும். அரசின் வேகம் போதவில்லை. அது தொடர்பில் எமக்கு பிரச்சினை இருக்கின்றது. அதுபோல் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல்களுக்கு நான் மட்டும் பொறுப்பல்ல எனவும், முன்னாள் இராணுவத் தளபதி உள்ளிட்டவர்களையும் விசாரிக்க வேண்டும் என்றும் கோத்தபாய கூறுகின்றார். தான் குற்றவாளி என்பதை அவர் நிராகரிக்கவில்லை.

கடந்த காலத்தில் ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு தொடர்பில் கம்பஹா நீதிமன்றில் முன்னாள் பிரிகேடியர் அளித்துள்ள வாக்குமூலத்தில், இது எனது தனிப்பட்ட விருப்பத்தில் நடைபெற்ற விடயமல்ல, எனது தேவைக்காக மேற்கொண்ட விடயமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பொறுப்புக் கூற வேண்டியது நானல்ல எனக்கு கிடைத்த உத்தரவுக்கு அமைய நான் செயற்பட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த உத்தரவை பிறப்பித்தது யார்?. அப்போது பாதுகாப்பு அமைச்சில் பொறுப்பாக இருந்தது யார்?.

எமக்குத் தெரியும் மகிந்த ராஜபக்ச கோத்தபாயவிடம் கேட்காமல் எந்த காரியத்தையும் செய்யமாட்டார். கோத்தபாயவின் அறிவுறுத்தல் இல்லாமல் ரத்துபஸ்வலவில் துப்பாக்கிச் சூடு நடத்த வாய்ப்பில்லை. கோத்தபாயவுக்கு ஏன் இவ்வளவு பயம்? ஏன் அது தொடர்பில் விசாரணை செய்ய இந்த அரசு தயங்குகின்றது?“

ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸாரால் முடியாமல் போயுள்ளது. 400க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. அவரைக் கைது செய்ய முடியாது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்ய அவர்களால் முடியும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்களை 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யவும் அவர்களால் முடியும். அவரின் பின்னால் இருப்பது யார்?. பொலிஸார் என்ன செய்கின்றார்கள் என அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்கின்றோம்.”- என்றார்.

http://uthayandaily.com/story/6016.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.