Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மைத்திரி சந்திப்பு

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மைத்திரி சந்திப்பு

 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மைத்திரி சந்திப்பு
 

திடீர்ப் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு நாளை திங்கட் கிழமை வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து மிகப் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை மே மாதம் 30 ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவதாகத் தெரிவித்திருந்தார். அதற்கு அமைவாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

அரச தலைவர், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நாளை திங்கட் கிழமை திடீர் பயணமாக வருகை தரவுள்ளார். அரச தலைவரின் இந்தத் திடீர் பயணம் தொடர்பில், நேற்றுக் காலையே அலைபேசி ஊடாக, மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாவட்டச் செயலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு, மாவட்டத்தின் சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். அரச தலைவர் மைத்திரிபால கலந்து கொள்வார். இந்தக் கூட்டத்துக்காக ஒழுங்குகள் இன்றைய தினமே, மாவட்டச் செயலக அலுவலர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த மாதம் 17 ஆம் திகதி அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியபோது, சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துவதாக அரச தலைவர் தெரிவித்திருந்தார். இதற்கு அமைவாகவே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களையும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

http://uthayandaily.com/story/6038.html

  • தொடங்கியவர்

யாழுக்கு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதியின் நிகழ்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு தடை

no-media.jpg
யாழில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தமிழ் ஊடக பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்திற்கு நாளை திங்கட் கிழமை செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து மிகப் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவதாகத் தெரிவித்திருந்தார். அதற்கு அமைவாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு, யாழ். மாவட்டத்தின்  அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமான கூட்டம்  நடைபெறும்.இதில்  ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/archives/29471

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.