Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘குடும்பச் சண்டையில் அவர்களே அழிவார்கள்!’ - எம்எல்ஏ-க்களிடம் சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

Featured Replies

‘குடும்பச் சண்டையில் அவர்களே அழிவார்கள்!’ - எம்எல்ஏ-க்களிடம் சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

 
 

எடப்பாடி பழனிசாமி

சிகலா குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள சண்டையை மௌனமாக கவனித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘தினகரன் தரப்பினர் அளிக்கும் பரிந்துரைகளை முதல்வர் அலுவலகம் ஏற்பதில்லை.' குடும்பச் சண்டையில் அவர்களே அழிந்து போவார்கள். நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை' என்பதுதான் முதல்வரின் மனநிலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

திகார் சிறையில் இருந்து வெளிவந்த அன்று, 'கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன்' என தினகரன் அறிவித்த தினத்தில் இருந்தே, மன்னார்குடி குடும்ப உறவுகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டுவிட்டது. திவாகரனும் நடராசனும் தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருக்க, ஆட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு கடுமையாக முயற்சி செய்தார் தினகரன். இதன் ஒருபகுதியாக, அ.தி.மு.க எம்எல்ஏ-க்களை சந்தித்து வந்தார். அவருக்கு 33 எம்.எல்.ஏக்கள் வரையில் ஆதரவு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ந்துபோன அமைச்சர்கள் சிலர், திவாகரன் தரப்புக்குத் தகவலைக் கொண்டு சென்றனர். அவரோ, 'நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். தினகரனை தினகரன்சந்தித்த எம்எல்ஏ-க்கள், எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து ஆதரவு கொடுப்பார்கள். ஆட்சி அதிகாரத்தை மிரட்டிப் பார்க்க வேண்டும் என நினைக்கிறார். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்’ எனக் கூறிவிட்டு, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களிடம் ஆட்களை அனுப்பி பேச வைத்தார். அவர்களும், தற்போது தினகரன் வீட்டுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டனர். தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட விரல் விட்டு எண்ணக் கூடிய எம்எல்ஏ-க்களே தினகரன் புகழ் பாடுகின்றனர். அவர்களும், 'என்றைக்காவது அமைச்சர் பதவி வந்து சேரும்' என்ற மனநிலையில் இருக்கின்றனர். 

“சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நாளில் இருந்தே, திவாகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் வேலைகளைத் தீவிரப்படுத்தினார் தினகரன். ‘சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் இடமில்லை' என அவர் அறிவித்தபோது,  ‘இவர் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?' எனக் கொதித்தார் திவாகரன். திகார் சிறையில் தினகரன் இருந்த நாள்களில், சசிகலாவை நேரில் சந்தித்து அடுத்துச் செய்ய வேண்டிய காரியங்களை விவாதித்தார் திவாகரன். 'கட்சியில் இருந்து தினகரனை ஒதுங்கி இருக்கச் சொல்லுங்கள். இல்லாவிட்டால், நம் கையைவிட்டு அனைத்தும் நழுவிவிடும்' எனவும் எச்சரித்தார். சிறையில் இருந்து வந்த பின்னர் சசிகலாவை சந்தித்தார் தினகரன். '60 நாள்களுக்கு அமைதியாக இரு' என உறுதியாகக் கூறினார்.

திவாகரன்ஆனாலும், குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, அரசியல் காய் நகர்த்தல்களைத் தொடங்கினார். எம்எல்ஏ-க்கள் பலத்தைக் காட்டி பா.ஜ.கவை வழிக்குக் கொண்டு வர நினைத்தார். இதை அறிந்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை எடப்பாடி பழனிசாமி பக்கம் கொண்டு வந்தார் திவாகரன். இந்த நடவடிக்கையை தினகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'இரண்டு அணிகளும் இணைய வேண்டும்' என்ற கருத்தை நடராசன் கூறியபோதும், 'தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற அடிப்படைகூட நடராசனுக்குத் தெரியவில்லை' எனக் கொதித்தார் தினகரன். குடும்ப சண்டை உச்சத்தில் இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் வீதிக்கு வரலாம்" என விவரித்தார் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். 

கொங்கு மண்டல எம்எல்ஏ ஒருவரிடம் பேசினோம். "ஆட்சி மற்றும் கட்சியில் எடப்பாடி பழனிசாமியே கோலோச்ச வேண்டும் என்பதுதான் கொங்கு மண்டல அ.தி.மு.கவினரின் எண்ணமாக இருக்கிறது. 'சசிகலா குடும்பத்தால் ஆட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் வரப் போவதில்லை' என்பதில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஆட்சிக்கு எதிராக தினகரன் செயல்பட்டபோது, ' அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என எம்எல்ஏ-க்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர். அப்போது அவர் எதுவும் பேசவில்லை.

 

இதுகுறித்து சில நாள்களுக்கு முன்பு முதல்வரிடம் பேசியபோது, 'அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தினகரன் ஆதரவாளர்கள் கொடுக்கும் எந்தப் பணியையும் நாம் செய்து தருவதில்லை. அந்தக் கோபத்தில்தான் எம்எல்ஏ-க்களைத் திரட்டும் வேலைகளைச் செய்தார். அவர்களை நாம் அழிக்க வேண்டியதில்லை. குடும்பச் சண்டையில் அவர்களே முடிவைத் தேடிக் கொள்வார்கள். நமக்குக் காலமும் நேரமும் இருக்கிறது. நாம் அமைதியாக இருந்து நடப்பதைக் கவனித்தால் போதும். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல ஆரம்பித்தால், நம் மீதே விமர்சனங்கள் திரும்பும்' என உறுதியாகக் கூறிவிட்டார். அதனால்தான், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களைப் பேச வைத்தார். தினகரனுக்கும் திவாகரனுக்கும் நடக்கும் பனிப்போர் அவ்வளவு எளிதில் முடிவுக்கு வரப் போவதில்லை. இந்த சண்டை நீடிக்கும் வரையில் ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் இருக்கப் போவதில்லை" என்றார் உறுதியாக. 

http://www.vikatan.com/news/tamilnadu/92249-they-will-destroy-themselves-in-their-family-feud---edappadi-palanisamy-tells-mlas.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.