Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.கவுக்கும்தான் லாபம்!’ - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive

Featured Replies

‘எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.கவுக்கும்தான் லாபம்!’ - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive

 
 

சசிகலா

சிகலா குடும்பத்துக்குள் தினகரனுக்கும் திவாகரனுக்கும் நீடித்து வந்த மோதல், தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. 'சசிகலாவை சந்திக்க தினகரன் முயற்சி செய்தபோதும், திவாகரன் அதற்கு இடையூறாக இருந்தார். 'குடும்பம் மற்றும் கட்சியைக் காப்பாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என சசிகலா வைத்த உருக்கமான வேண்டுகோளை இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள். இந்த சந்திப்பில், 'கட்சிப் பொறுப்பில் தினகரன் தொடர்வார். 'சசிகலா பொதுச் செயலாளர்; டி.டி.வி.தினகரன் துணைப் பொதுச் செயலாளர்' என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக எடுத்துக் கொண்டாடும்போது, தினகரன் தலைமை ஏற்க வேண்டும். அவருக்கு ஆதரவாக நாங்கள் அனைவரும் இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னிச்சையாக செயல்படுவோம்' எனப் பேசியுள்ளனர். இதன்பின்னர், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்தக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தபோதே, பெங்களூரு சிறையில் இரண்டாவது முறையாக சசிகலாவை சந்தித்தார் தினகரன். 

தினகரன்மன்னார்குடி அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த நாள்களில், சசிகலாவை சந்திக்க விரும்பினார் தினகரன். இந்த சந்திப்பை திவாகரன் ரசிக்கவில்லை. 'நமது குடும்பத்துக்கு ஏற்பட்ட கெட்ட பெயருக்கு அவர்தான் காரணம். எந்த இடத்திலும் அவர் உங்களை முன்னிறுத்தவில்லை. குடும்ப உறவுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மத்திய அரசின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறார். எந்தநேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் எடுத்த அவசர முடிவுகளால்தான் இப்படியொரு நிலை ஏற்பட்டது' என சசிகலாவிடம் கொதித்தார் திவாகரன். தன்னை சந்திப்பதை சசிகலா தவிர்ப்பதை அறிந்து, இளவரசி மூலமாக அழுத்தம் கொடுத்தார் தினகரன். இதன்பிறகு, குடும்ப ஒற்றுமைக்காக தினகரனை சந்தித்தவர், அவருடைய செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். 'திவாகரன் சொல்வதைக் கேட்டுச் செயல்பட வேண்டும்' என்பதை ஒரு ஆலோசனையாகக் கூறியிருந்தார்.

இதன்பின்னர், சென்னை வந்த தினகரன், திவாகரனை நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில், அடுத்துச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் தற்காலிக இணக்கம் ஏற்படுவதற்குக் காரணம், சசிகலா பேசிய சில வார்த்தைகள்தான். குடும்ப உறவுகளுக்கு அவர் கொடுத்த தகவலில்,  ‘உங்களுக்குள் நடக்கும் சண்டையால், எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.கவுக்கும்தான் லாபம். நம்மை அரசியலில் இருந்து முழுவதுமாக ஒதுக்கி வைக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஒற்றுமையாக இருந்தால், நம் அனைவருக்கும் வாழ்வு உண்டு' என உருக்கமாகக் கூறியிருக்கிறார். ‘ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியும் கட்சியில் தினகரனும் தொடரட்டும்' என்ற சசிகலாவின் அறிவுறுத்தலை, நேற்று முதல்வர் பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள்" என்றார் விரிவாக. 

திவாகரன்"ஜெயலலிதா அதிகாரத்தில் இருந்த நாள்களிலேயே, திரைமறைவு அரசியலில் கோலோச்சி வந்தார் திவாகரன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, டெல்லி தொடர்புகளில் தீவிர கவனம் செலுத்தினார். புனேவைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவரின் ஆலோசனையோடு, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் நெருங்கினார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றபோது, தனிப்பட்ட முறையில் ஆளுநரை சந்தித்தார் திவாகரன். பா.ஜ.க தலைமையோடு நெருக்கம் காட்டும் வேலைகளில் ஈடுபட்டார். இந்தநேரத்தில், மத்திய அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு பிரமுகர்கள் பேச ஆரம்பித்தனர். இதனை ரசிக்காத பா.ஜ.க நிர்வாகிகள், 'எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் நம்முடன் நெருக்கமாக உள்ளனர். திவாகரன் தரப்பினரும் நம்மிடம் பேசி வருகின்றனர். இவர் ஏன் தேவையில்லாமல் ஆட்களைத் தூண்டிவிடுகிறார்? எம்எல்ஏ-க்களை வளைக்க நினைக்கிறார்?' என சசிகலா குடும்பத்து ஆட்களில் பேசியுள்ளனர். இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்குத் தகவல் அனுப்பிய திவாகரன் தரப்பினர், 'தினகரனைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆட்சி அதிகாரத்துக்குள் எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் தலையை நீட்ட மாட்டார்கள். நல்ல நிர்வாகத்தைக் கொடுங்கள்' எனக் கூறியுள்ளனர். தற்போது தினகரனும் திவாகரனும் கைகோத்திருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அமைச்சர்கள் சிலர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

 

"தினகரன்-திவாகரன்-எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரும் கருத்து ஒற்றுமைக்கு வந்துவிட்டார்கள். தினகரனை எதிர்த்துப் பேசிய அமைச்சர்களும் மௌனநிலையில் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தையும் தங்களுடன் இணைப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு, கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும்' என்பதுதான் மன்னார்குடி உறவுகளின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் வேலையை முன்னின்று செய்கிறார் திவாகரன். 'குடியரசுத் தலைவர் தேர்தலுக்குள் இதனை செய்து முடிக்க வேண்டும்' என்பதுதான் குடும்ப உறவுகளின் வேண்டுகோளாக இருக்கிறது" என்ற தகவல்களும் அரசியல் மட்டத்தில் வலம் வருகின்றன. 

http://www.vikatan.com/news/tamilnadu/92471-this-will-benefit-eps-and-bjp-only-fumes-sasikala.html

  • தொடங்கியவர்

தினகரன் - திவாகரன் மோதல்... வீதிக்கு வந்த குடும்பச் சண்டை

 

 

சிகலா குடும்பத்தினருக்கு எதிராக அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் அணி, தீபா அணி, ஜெயகுமார் அணி எனப் பிரிந்து கிடப்பது மட்டுமல்ல... சசிகலா குடும்பத்துக்குள்ளேயே எதிர்ப்பு அணிகள் உருவாகிவிட்டன. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் உச்சகட்ட யுத்தம் நடக்கிறது. சசிகலா குடும்பத்தின் தாய் பூமியான மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் நடத்த இருந்த பொதுக்கூட்டத்தை, திவாகரன் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்புக்குரலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

‘கழகம் காக்கவும் இரட்டை இலையை மீட்கவும் சின்னம்மா, டி.டி.வி.தினகரன் தலைமையேற்க வேண்டும்’ என வலியுறுத்தி, கடந்த 11-ம் தேதி மன்னார்குடியில் கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையினரிடம் தினகரன் ஆதரவாளர்கள் கேட்டிருந்தனர். கூட்டத்துக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், திடீரென 11-ம் தேதி கூட்டத்தை ரத்துசெய்ய உத்தரவிட்ட போலீஸ், மேடை மற்றும் ஃபிளெக்ஸ்களை அகற்றிவிட்டார்கள். தினகரன் ஆதரவாளர்களுக்கும் திவாகரன் ஆதரவாளர்களுக்கும் எந்த நேரத்திலும் மோதல் ஏற்படலாம் எனத் தகவல் கிடைக்க, பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டதால் பதற்றப் பூமியாக மாறிப் போனது மன்னார்குடி.

2p1.jpg

கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தினகரன் ஆதரவாளர்களிடம் பேசினோம். ‘‘கடந்த 2-ம் தேதி மன்னார்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தித்தான் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். ‘லோக்கல் வி.ஐ.பி-யைத் திட்டக்கூடாது, மத்திய அரசைத் திட்டக்கூடாது’ என இரண்டு நிபந்தனைகளோடு போலீஸ் அனுமதி அளித்தது. அண்ணன் டி.டி.வி.தினகரன் மற்றும் சிறப்புரையாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி, குண்டு கல்யாணம் ஆகியோரிடம் இந்த நிபந்தனைகளைச் சொன்னோம். அவர்கள் ஓகே சொன்ன பிறகுதான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். மேடை அமைக்கும்போது தொடங்கி எங்களுக்கு மிரட்டல் விடுத்தபடி இருந்தார்கள் திவாகரன் ஆதரவாளர்கள். போனில் கொலை மிரட்டலும் விடுத்தார்கள். மைக் விளம்பரம் செய்யும்போது குறிப்பிட்ட ஏரியாவுக்குப் போக விடாமல் தடுத்தார்கள்.

இந்த நிலையில்தான் மன்னார்குடி நகர     அ.தி.மு.க செயலாளர் மாதவன், ‘எங்கள் கட்சியின் சின்னத்தையும், முதல்வர் படத்தையும் போட்டு, எங்களிடம் ஆலோசிக்காமல் கூட்டத்தை நடத்துகிறார்கள், மீறி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்’ என மன்னார்குடி காவல்நிலையத்தில் கடிதம் கொடுத்திருக்கிறார். அதன்பிறகுதான் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே மேடையை அகற்றிவிட்டார்கள். மீறிக் கூட்டம் நடத்தினால், நாஞ்சில் சம்பத்தைத் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். நூற்றுக்கு மேற்பட்ட அடியாட்களைக் கற்கள், உருட்டுக்கட்டைகளுடன் மன்னார்குடியில் இறக்கி இருந்தார்கள்’’ என்றனர். 

கூட்டம் ரத்தானதும் ‘‘அ.தி.மு.க விதிகளின்படி அடிப்படை உறுப்பினர்கூட பொதுக்கூட்டத்தை நடத்தலாம். நீதிமன்ற அனுமதி பெற்றுக் கூட்டத்தை நடத்துவோம்’’ என்றனர் சிலர். ‘‘இது குடும்பத்தினருக்குள் நடக்கும் பனிப்போர், நான் ஏதாவது பேசி சின்னம்மாவுக்குப் பிரச்னையாகிவிடக் கூடாது’’ என்றாராம் நாஞ்சில் சம்பத். கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியும், நாஞ்சில் சம்பத்தும், நீதிமன்ற அனுமதியோடு ஒரு லட்சம் தொண்டர்களோடு மீண்டும் கூட்டத்தை நடத்துவோம் என்று முடிவெடுத்தனர். பின்னர், புகழேந்தி உள்ளிட்டவர்களை வாகனத்தில் ஏறிக் கிளம்பிச் செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். ‘‘என்னை யாரு வந்து என்ன செய்யப் போறான்? எங்க கட்சி ஆட்சி நடக்குது. எனக்கு என்ன பயம்? யாராக இருந்தாலும் எங்க கட்சிக்காரர்கள்தான், விடுங்க நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ஆவேசமாகச் சொன்னார் அவர். கட்டாயப்படுத்தி வாகனத்தில் ஏற்றி திருவாரூர் மாவட்ட எல்லைவரை சென்று வழியனுப்பி வைத்த பிறகே காவல்துறையினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

2p3.jpg

பிறகு திருவாரூர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘‘எனக்கு எதுவும் தெரியாது. கூட்டம் நடந்தா என்ன...நடக்காவிட்டால் என்ன?’’ என்று விரக்தியோடு சொன்னாராம் அவர். திவாகரன் சென்னையில் இருக்கிறார். திவாகரன் மகன் ஜெயானந்த்தான் இந்தக் கூட்டத்தை ரத்து செய்வதற்காக காய் நகர்த்தினார் என்கிறார்கள் மன்னார்குடியைச் சேர்ந்த சிலர்.

திவாகரனின் ஆதரவாளரும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான எஸ்.காமராஜிடம் பேசினோம். ‘‘எங்கள் கட்சி கூட்டம்தான், நடத்தட்டும். ஆனால், இந்த நேரத்தில் இது தேவையில்லை. சின்னம்மாவைச் சிறையிலிருந்து மீட்டு வரவேண்டும். இன்னும் நான்கு ஆண்டுகள் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த வேண்டும். இப்போதைய தேவை இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதே தவிர, பொதுக்கூட்டம் நடத்துவது அல்ல’’ என்றார் பொதுவாக.

கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தினகரன் ஆதரவாளர் வழக்கறிஞர் அகரம் சுரேஷிடம் பேசினோம். ‘‘காவல்துறையினர் யாருடைய தூண்டுதலில் இப்படிச் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. நீதிமன்ற அனுமதி பெற்று விரைவில் மன்னார்குடியில் கூட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டுவோம்’’ என்றார் தடாலடியாக.

‘அ.தி.மு.க ஆட்சி என்றால் சென்னையும் மன்னையும் ஒன்றுதான்’ என்பார்கள். ஆனால், மன்னையிலேயே அ.தி.மு.க கூட்டம் ரத்து செய்யப்பட்டது, திவாகரனுக்கும், தினகரனுக்குமிடையே உஷ்ணம் கூடியிருக்கிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம்! 

http://www.vikatan.com/juniorvikatan/2017-jun-18/politics/131966-conflict-between-dinakaran-and-divakaran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.