Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம்

Featured Replies

திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம்

 

மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த பேய்ப் படம். ஆனால், பேய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாகச படங்களுக்கான பாணியில் தன் முதல் படத்தை அளித்திருக்கிறார் சரவன்.

   
திரைப்படம் மரகத நாணயம்
 
நடிகர்கள் ஆதி, மைம் கோபி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், ஆனந்த் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், கோட்ட சீனிவாசராவ்
 
இசை திபி நினன் தாமஸ்
 
ஒளிப்பதிவு,இயக்கம் ஏ.ஆர்.கே. சரவண்.
 

கடன் பிரச்சனையின் காரணமாக, பெரிதாக சம்பாதிப்பதற்காக சென்னைக்கு வரும் செங்குட்டுவன் (ஆதி) சிறிய அளவில் கடத்தலில் ஈடுபடும் ராமதாஸிடம் (முனீஸ்காந்த்) வேலைக்குச் சேர்கிறான்.

அந்த நேரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரும்பொறை என்ற மன்னனுக்குச் சொந்தமான மரகத நாணயம் என்ற ஒரு சக்தி வாய்ந்த பொருளை எடுத்துத் தந்தால் 10 கோடி கொடுப்பதாக ஒரு கும்பல் சொல்கிறது.

திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம்

ஆனால், அந்த நாணயத்தை தொட்டாலே இறந்துவிடுவார்கள் என்பதால் எல்லோரும் பின்வாங்கிவிட, நண்பன் (மைம் கோபி) உதவியுடன் களத்தில் இறங்குகிறான் செங்குட்டுவன். அவனுக்கு உதவியாக சிதம்பரம் (முனீஸ்காந்த்) என்ற பேய் வருகிறது. ஒரு கட்டத்தில் மரகத நாணயத்தை எடுத்துவிடும் செங்குட்டுவனை, மரணம் ஒருபக்கம் துரத்த, மற்றொரு பக்கம் அதைக் கைப்பற்ற ட்விங்கிள் ராமநாதன் என்ற தாதாவும் (ஆனந்த்ராஜ்) துரத்துகிறான்.

திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம்

தமிழில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு பேய்ப் படமாவது வெளியாவதால் (இந்த வாரம் இரண்டு!) சற்று வித்தியாசமாக முயற்சிசெய்திருக்கிறார் சரவன். நாயகனுக்கு உதவுவதற்காக சிதம்பரம் என்ற பேயை உசுப்ப, அது செத்துப்போன ராமதாஸ் வடிவில் வருகிறது.

அந்தப் பேய் மேலும் மூன்று பேரை உசுப்ப, அவர்கள் வெவ்வேறு குரல்களில் பேசுகிறார்கள்.

அதில் ஒருவருக்கு பருத்திவீரன் 'பொணந்தின்னி'யின் குரல். கதாநாயகிக்கு ஆண் குரல்!! படத்தின் முதல் சில காட்சிகளில் மட்டும், உயிரோடு வரும் கதாநாயகி (நிக்கி கல்ராணி) பிறகு ஆண்குரலில் பேசும் பேயாகத்தான் படம் முழுக்க வருகிறார்.

கதாநாயகி பாத்திரத்தில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். இப்படி ஒரு பாத்திரத்தை ஒப்புக்கொண்டு, அதை ரசிக்கும்படியும் செய்திருக்கிறார் நிக்கி.

திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம்

படத்தின் மற்றொரு பலம், தாதாவாக வரும் ஆனந்த்ராஜ். வசனத்திலும் உடல்மொழியிலும் பிரமாதப்படுத்துகிறார்.

அவருக்கான காட்சியமைப்புகளும் அட்டகாசம். தான் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஒரு ஸ்பீக்கரையும் தன்னுடைய கோமாளி அடியாள்களையும் அனுப்பி டிவிங்கிள் ராமநாதன் செய்யும் அட்டகாசம் ரசிக்கவைக்கிறது.

திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம்

உயிரோடு ராமதாஸ் என்ற கடத்தல்காரன், இறந்த பிறகு சிதம்பரம் என்பவரின் பேய் என இரண்டு பாத்திரங்களில் வரும் முனீஸ்காந்த், நிறைவாகச் செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வரும் எம்.எஸ். பாஸ்கர், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் ஆகியோரும் படம் முழுக்க வரும் மைம் கோபியும் அவ்வப்போது நிமிர்ந்து உட்காரவைக்கிறார்கள்.

ஆனால், தொலைக்காட்சி நாடக பாணியில் அமைக்கப்பட்ட காட்சிகள், துவக்கத்தில் ரொம்பவும் வேகவேகமாக முன்கதையைச் சொல்வது, பிறகு மிக மிக மெதுவாக நகரும் திரைக்கதை என படம் பார்ப்பவர்களை சோதனைக்குள்ளாக்கும் அம்சங்களும் படத்தில் உண்டு.

http://www.bbc.com/tamil/arts-and-culture-40311388

  • தொடங்கியவர்

இரும்பொறை மன்னன் இலக்கு தப்பாமல் பாய்கிறாரா? - `மரகத நாணயம்' விமர்சனம்

யார் எடுக்கச் சென்றாலும் அவர்களைக் கொன்று, இரும்பொறை என்ற மன்னரின் ஆவியால் பாதுகாக்கப்படும் அரிய பொருளே `மரகத நாணயம்'.

மரகத நாணயம்

கடன் தொல்லையால் திருப்பூரிலிருந்து சென்னைக்கு வரும் ஆதி, குட்டிக் கடத்தல்காரரான ‘முனீஸ்காந்த்’ ராமதாஸிடம் வேலைக்குச் சேர்கிறார். சின்னச் சின்னக் கடத்தல்களால் அலுத்துப்போகும் ஆதி, `ஏதாவது பெருசா செய்யணும் பாஸ்!' என்ற முடிவுக்கு வருகிறார். அதனால் மைம் கோபி மூலம், `மரகத நாணயத்தை எடுத்து வந்தால் கோடிக்கணக்கில் பணம்' என்ற சீனாக்காரர் ஒருவரின் டீலுக்குச் சம்மதம் சொல்கிறார். ஆனால், அதற்கு முன்பு மரகத நாணயத்தை எடுக்க முயன்ற 132 பேர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். மரகத நாணயத்தை ஆதி எடுத்தாரா, 133-வது ஆளாக மரணப் பட்டியலில் இணைந்தாரா என்பதை காமெடி கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள். 

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்-க்கு முதல் படம். ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ்காந்த், டேனியல் என முதல் படத்திலேயே நிறைவான காஸ்டிங். ‘அட’ போடவைக்கும் ஒன்லைன். இத்தனையையும் வைத்துக்கொண்டு `மரகத நாணயம்' ஒளிர்கிறதா என்றால், பெருமூச்சுவிடத்தான் தோன்றுகிறது. 

விமர்சனம்

ஆதிக்கு, ஹீரோக்களுக்கு உண்டான  வழக்கமான வேலையைவிட குறைவான வேலைதான். அதில் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்திருக்கிறார். காமெடி சீன்களில் ஜொலிக்க, இன்னும் நிறைய உழைக்க வேண்டும் ஆதி.  நிக்கி கல்ராணிக்கு எந்த ஹீரோயினுக்கும் கிடைக்காத வித்தியாசமான ரோல். ஆனால், அதில் பெரும்பகுதி அவர் `குரலுக்கு'ப் போய்விடுவதால், நிக்கி சாதித்துவிட்டார் எனச் சொல்ல முடியவில்லை. டேனியல், எம்.எஸ்.பாஸ்கர், ராமதாஸ், ஆனந்தராஜ், அருண்ராஜா காமராஜ் ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார்கள். 

படத்தில், பெரும் ஆறுதலான காட்சிகள் ஆனந்தராஜ் வரும் காட்சிகள்தான். பாடிலாங்வேஜ், வாய்ஸ் மாடுலேஷன் இரண்டிலும் அசால்ட் காட்டியிருக்கிறார் மனுஷன். எல்லா இடங்களுக்கும் நேரடியாகப் போகாமல் ரேடியோவிலேயே டீல் பேசும் ஐடியாவும் ஆசம்!   ‘அவன் மேட் இன் சைனா எப்பவாச்சும் வெடிப்பான்; நான் மேட் இன் இண்டியா. எப்ப வேணா வெடிப்பேன்’, ‘நான் சீரியஸாவே சீரியஸ்டா’, ‘காமெடி ட்ரெண்டுன்னுதான் உங்களைக் கூட வெச்சிருக்கேன். உங்ககூட இருக்கிறதால என்னையும் காமெடியா பார்க்கிறானுங்கடா’ என்று அவரது வசனங்களில் மட்டும் எக்ஸ்ட்ரா உழைப்பு தெரிகிறது. அதேபோல் இக்கட்டான நேரங்களில் எதேச்சையாக காமெடி செய்யும் அவரது அடியாளும் கோட்டுக்கேற்ற பட்டன்போல கச்சிதம்.

நிக்கி

திபி நினன் தாமஸின் பாடல்களுக்குப் பெரிய வேலையில்லை. ஆனந்தராஜுக்கு வரும் பிஜிஎம் வாவ்! அதிலும், தீம் மியூசிக்கிலும் பிஜிஎம்-மில் வரும் புல்லாங்குழல் அசத்தல். ஆனால், கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதும் பின்னால் கிடாரை வாசித்து சோதித்ததைக் குறைத்திருக்கலாம். பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவில் இரும்பொறை மன்னனின் கல்லறை, சேஸிங் காட்சிகளில் டாப் வியூ கவனிக்கவைக்கிறது. 

காமெடி, சென்டிமென்ட், காதல், சீரியஸ், சீரியஸாக இருக்கும்போதே காமெடி, காமெடிக்குச் சிரிப்பதற்கு முன்பே சென்டிமென்ட் என திரைக்கதையின் போக்கு பிரேக் பிடிக்காத வண்டியைப்போல் பல திசைகளிலும் தறிகெட்டு ஓடி, தடுமாறவைக்கிறது. அதுவும் முதல் பாதியில் காட்சிக்குக் காட்சி கதை சொல்லி, அதை உள்வாங்குவதற்குள் அடுத்தடுத்து சம்பவங்களைத் திணிப்பதால் திணறிப்போகிறோம். `132 பேர் இறந்துவிட்டார்கள்' என்று படத்தில் கணக்கு சொன்னதுபோக, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை யாராவது செத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.  மரணத்தை வைத்து காமெடி பண்ணுவதா, சீரியஸாக அழுவதா என்பதிலும் இயக்குநருக்கு ஏராளமான குழப்பம்.

 

ஆனால் இரும்பொறை மன்னனின் பழிவாங்கும் பழைய வண்டியைப்போல், திரைப்படமும் திணறித் திணறி ஓடுவதால், பளிச் வெளிச்சம் பாய்ச்சவில்லை இந்த `மரகத நாணயம்’!

http://www.vikatan.com/cinema/movie-review/92541-maragadha-naanayam-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.