Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா!

Featured Replies

இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கும்ப்ளே

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றது. ஆனால் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்பட்டது. மேலும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், கும்ப்ளேவின் பயிற்சி மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக கும்ப்ளே அறிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி  பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அனில் கும்ப்ளே அவர்களோடு செல்லவில்லை. ஐசிசி மீட்டிங்கில் அவர் கலந்து கொள்வதாக காரணம் சொல்லப்பட்டது.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் வரை அவரை பயிற்சியாளாராக இருக்க, பி.சி.சி.ஐ  வேண்டுகோள் விடுத்திருந்தது.

 

 ஆனால் ஒப்பந்தத்தின்படி தனது பதவிக்காலம் முடிவதால் அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். 

http://www.vikatan.com/news/sports/92927-anil-kumble-resigns-his-post-as-team-india-head-couch.html

  • தொடங்கியவர்

போராட்ட குணம் நிறைந்த கும்ப்ளே, அதில் உறுதியாக நிற்கவில்லை: கவாஸ்கர்

போராட்ட குணம் நிறைந்த கும்ப்ளே, தனது நிலையில் உறுதியாக இல்லாததை முதன்முதலாக பார்க்கிறேன் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

 
போராட்ட குணம் நிறைந்த கும்ப்ளே, அதில் உறுதியாக நிற்கவில்லை: கவாஸ்கர்
 
இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேயின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை நீடிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

ஆனால் கும்ப்ளே நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். எனக்கும், விராட் கோலிக்கும் இடையிலும் சுமுகமான நிலை இல்லை என்று கூறியிருந்தார்.

தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகியது குறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே போன்ற போராட்டக்காரர்கள் தங்களது நிலையில் உறுதியாக இல்லாமல் இருப்பதை முதன்முறையாக பார்க்கிறேன்’’ என்றார்.

அனில் கும்ப்ளே விவகாரம் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கு இடையிலான மோதல் குறித்து எனக்கு சிறிய அளவிலேயே தெரியும். ஆனால், இந்திய அணிக்கு இது மிகப்பெரிய சோகம். அனில் குமப்ளே தலைமை பயிற்சியாளரானதில் இருந்து இந்தியா அனைத்தையும் வென்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் கும்ப்ளே அதிக அளவில் தவறு செய்தார் என்று என்னால் பார்க்க முடியவில்லை.

201706211812199439_Kumble001-s._L_styvpf

எல்லா அணிகளிலும் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், இந்த முடிவை நாம் பார்க்கிறோம். அனில் கும்ப்ளே விலக காரணம் இருந்திருக்கும். கும்ப்ளே பதவியை தொடர்வார் என்றுதான் நான் நினைத்தேன். கிரிக்கெட் ஆலோசனைக் குழு அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. மீண்டும் அவர் வலுவான நிலையுடன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், முதல் முறையாக கும்ப்ளே போன்ற போராட்ட குணம் படைத்தவர்கள், அந்த நிலையில் உறுதியாக இல்லாமல் உள்ளனர்’’ என்றார்.

 

 

 

 

விராட் கோலியின் ‘ஈகோ’ வெற்றி பெற்றது: கும்ப்ளே விலகல் குறித்து மதன் லால் கருத்து

இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததன் மூலம் கோலியின் ஈகோ வெற்றி பெற்றது என மதன் லால் கூறியுள்ளார்.

 
விராட் கோலியின் ‘ஈகோ’ வெற்றி பெற்றது: கும்ப்ளே விலகல் குறித்து மதன் லால் கருத்து
 
இந்திய அணி கேப்டன் விராட் கோலி - தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோருக்கு இடையிலான கருத்து வேறுபாட்டின் காரணமாக, கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

கும்ப்ளே பதவி விலகியது குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மதன் லால் விராட் கோலியின் ஈகோ வெற்றி பெற்றுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதன் லால் கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் அணியில் இதுபோன்ற ஈகோ பிரச்சினை டிரெண்டாக இருக்கிறது. இந்திய அணியில் உள்ள வீரர்கள் தங்களை சுற்றி எப்போதும் ‘ஆமாம் சாமி’ என்று கூறுபவர்கள்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுக்கு பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பொறுத்தமானவர். அப்படி இருப்பதால் இந்திய வீரர்கள் சந்தோசமாக இருப்பார்கள்.

யாராக இருந்தாலும் இந்திய வீரர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால் அவர்கள் வெளியே சென்று விட வேண்டியதுதான். அது எப்போதும் இந்திய அணியில் இருந்த டிரெண்ட். நான் 1996 முதல் 1997 வரை பயிற்சியாளராக இருந்தபோதும் இது நடந்தது. நான் 45 சதவீதம் வெற்றி சராசரி வைத்திருந்தேன். இருந்தாலும் நான் வெளியேற்றப்பட்டடேன். அதற்கு காரணம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருந்ததுதான். வீரர்களை நிர்வகிக்கும் பெரிய நபர் கிடையாது என்பதால்தான். ஈகோவை நிர்வகிக்கத் தெரிந்த இந்திய அணி பயிற்சியாளர்களால் மட்டுவே முடிவை எதிர்பார்க்க முடியும்.

ஜான் ரைட், கேரி கிர்ஸ்டன் மற்றும் டங்கன் பிளெட்சர் போன்ற வெளிநாட்டு பயிற்சியாளர்கள் வெற்றிகரமாக நீண்ட நாட்கள் தங்களது பயிற்சியாளர் பதவியை பூர்த்தி செய்திருப்பார்கள். அவர்கள் எந்தவொரு கேள்வியையும் கேட்கமாட்டார்கள். அதேபோல் மூத்த வீரர்களுக்கு எதிராக சவால் விடும் தோணியில் இருக்க மாட்டார்கள். அதற்கு மாறாக கேள்வி கேட்ட ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் என்ன ஆனார் என்பது நமக்குத் தெரியும்.

201706212003268498_Kohli001-s._L_styvpf.

அனுபவ வீரர்களை நீங்கள் பயிற்சிக்கு உட்படுத்தும்போது, பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். அது மிகவும் எளிதான காரியம் அல்ல.

அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையிலான மோதல் எப்போதும் உள்ளது போன்ற டிரெண்ட்தான். வீரர்கள் முதலாளிகள் போல் செயல்படுவார்கள். கடந்த பல வருடங்களாக இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தற்போதும் நிகழ்ந்துள்ளது. கேப்டன் எதை வேண்டுமென்றாலும் முடிவு செய்யலாம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்று இந்திய கிரிக்கெட்டில் கிடையாது. அங்கோ சூப்பர் ஸ்டார் என்ற கலாச்சாரம் கிடையாது. இந்திய அணியில் கேப்டன் உடன் முறைத்துக் கொண்டார். அத்துடன் உங்களுடைய கேரியம் முடிவுக்கு வந்து விடும். விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கும் இடையில் என்ன நடந்தது என்று தெரியாது. சிறந்த முறையில் நடத்தப்படுவதற்கு கும்ப்ளே தகுதியானவர்’’ என்றார்.

 

 

வீரர்களை நிர்வகிப்பதில் கும்ப்ளே தவறிவிட்டார்: பல்விந்தர் சிங் சந்து சொல்கிறார்

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த வீரர்களை நிர்வகிப்பதில் தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளே தவறிவிட்டார் என்று பல்விந்தர் சிங் சந்து கூறியுள்ளார்.

 
 
 
 
வீரர்களை நிர்வகிப்பதில் கும்ப்ளே தவறிவிட்டார்: பல்விந்தர் சிங் சந்து சொல்கிறார்
 
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குச் செல்லும் முன்பு கும்ப்ளேவிற்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது தலைமை பயிற்சியாளர் பதவியை நீட்டிப்பதில் சறுக்கல் ஏற்பட்டது. சச்சின் தெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை கும்ப்ளேவை பதவில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில் நேற்று அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகினார். 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்படித்திருந்தவர் பல்விந்தர் சிங் சந்து. இவர் கும்ப்ளே விவகாரம் குறித்து கூறுகையில் ‘‘கும்ப்ளே வீரர்களை நிர்வகிப்பதில் தவறிவிட்டா்’’ என்று கூறியுள்ளார்.

201706211622599430_Kumble-s._L_styvpf.gi

இதுகுறித்து பல்விந்தர் சிங் சந்து கூறுகையில் ‘‘பெரும்பாலான வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமி மூலம் மாநில பயிற்சியாளர்கள் முன்னிலையில் வளர்ச்சி பெறுகிறார்கள். தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் ரஞ்சி டிராபியில் இடம்பிடித்த பின்னர் இந்திய அணிக்கு திரும்புகிறார்கள். ஆகவே, மாநில பயிற்சியாளர்கள் மூலம் கடுமையான பயிற்சிகளை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.

யுக்தி, ஆட்டத்தை எப்படி கையாள்வதை என்பதை தவிர அணியின் வீரர்களை திறமையாக நிர்வகிப்பதுதான் தலைமை பயிற்சியாளரின் முக்கிய வேலை. இதில் கும்ப்ளே தவறிவிட்டார்.

கும்ப்ளே தலைமையில் ஏராளமான தொடர்களை வென்றுள்ளோம் என்று கூறுகிறோம். திறமையான வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் ரஞ்சி டிராபி தொடரில் இருந்து வரும்போது, அவரது திறமையை வீரர்களை நிர்வகிப்பதை வைத்துதான் எடைபோட வேண்டும்’’ என்றார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

'கடந்த ஆறு மாதங்களாக கோலி, கும்ப்ளே இடையே பேச்சுவார்த்தைகூட சரியில்லை' - வெளிவந்த உண்மை

 
 

anil

கடந்த ஆறு மாதங்களாக, இந்தியக் கிரிக்கெட் கேப்டன் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தை கூட இல்லை எனத் தகவல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையிலான கருத்து வேறுபாட்டின் உச்சமாக, அனில் கும்ப்ளே தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நேற்றைய முன்தினம் விலகியுள்ளார்.

இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் சூழலில், சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கேப்டன் கோலியும் கும்ப்ளேவும் கடந்த ஆறு மாதங்களாக முறையாகப் பேசிக்கொள்வதுகூட இல்லையாம். கடந்த டிசம்பரில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பின்னர், இவர்கள் இருவருக்குள்ளேயும் கருத்துப் பரிமாற்றம்கூட முறையாக இல்லாமல் போய்விட்டது எனத் தகவல் கூறப்பட்டது. மேலும், தலைமை ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகியோர் கும்ப்ளேவின் ராஜினாமாவுக்கு இன்னும் முழுமனதாகத் தங்கள் ஒப்புதலைக் கொடுக்கவில்லையாம். 

பிசிசிஐ நிர்வாகிகளுடன் நேரில் பேசிய கும்ப்ளே, 'விராட்டிடம் எந்தப் பிரச்னையும் இல்லை', எனக் கூறியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலி, கும்ப்ளே இருவரையும் ஒரேநேரத்தில் அழைத்துப்பேசியபோதும்கூட சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதே கடைசிகட்டத் தகவலாக உள்ளது .

http://www.vikatan.com/news/sports/93035-anil-kumble-virat-kohli-were-not-on-talking-terms-for-last-six-months.html

  • தொடங்கியவர்

'இப்படி இருந்தால் பயிற்சியாளரே தேவையில்லை'... கோலியை விளாசும் முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே ராஜினாமா செய்தார். குறிப்பாக, கேப்டன் கோலி - கும்ப்ளே இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகப் போட்டித்தொடர் தொடங்குவதற்கு முன்பே கூறப்பட்டது. அதேபோல், தனது ராஜினாமா கடிதத்திலும், தன்னுடைய கருத்தில் கேப்டனுக்கு வேறுபாடு இருந்ததாக அணி நிர்வாகம் கூறியது என்று கும்ப்ளே குறிப்பிட்டிருந்தார்.

Kohli


இதனிடையே, கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்தபோது, கடந்த ஆண்டு போட்டிருந்த ட்வீட்டை கோலி நீக்கினார். இதனால், கோலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். இந்நிலையில், கோலியின் செயலை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எரப்பள்ளி பிரசன்னா விமர்சித்துள்ளார்.


இது குறித்து எரப்பள்ளி பிரசன்னா, "கோலி தன்னை பாஸ் என்று நினைத்துக் கொண்டால் அணிக்கு பயிற்சியாளரே தேவையில்லை. எதற்காக வீணாக பயிற்சியாளரை நியமிக்க வேண்டும். இதே மனநிலையில் இருந்தால், இந்திய அணிக்கு பௌலிங் மற்றும் ஃபீல்டிங்கிற்குகூட பயிற்சியாளர் தேவையில்லை.

 

Erapalli Prasanna

கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் நல்ல கேப்டனா? என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. அனில் கும்ப்ளேவுக்கே இந்த நிலை என்றால், சஞ்சை பங்கார் மற்றும் ஶ்ரீதர் போன்றோர் கோலியிடம் எப்படி உறுதியாக பேசுவார்கள்? கும்ப்ளே அளவுக்கு அனுபவம் பெற்றவர்கள் யாரும் கிடையாது. ஒரு கேப்டனின் மனநிலை இப்படி இருந்தால் அணிக்கு பயிற்சியாளரே தேவையில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல, அணிக்கு மேலாளரை மட்டுமே நியமித்தால் போதும்.

 

தோனி, யுவராஜ் போன்ற வீரர்கள் 2019 உலகக் கோப்பைக்கு ஃபிட்டாக இருப்பார்களா என்று தெரியவில்லை. தோனி கூட விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். ஆனால், யுவராஜின் ஃபீல்டிங் முன்பு போல இல்லை. எனவே, மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலேயே இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். இந்திய அணிக்கு தற்போது இளைஞர்கள்தான் தேவை. அதுவும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அந்தளவுக்கு ஃபார்மில் இல்லை. எனவே, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/sports/93258-india-no-need-coach-if-kohli-thinks-he-is-boss-says-erapalli-prasanna.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.