Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது

Featured Replies

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது

 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேடப்பட்டுவந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், மேற்கு வங்க காவல்துறையினரால் கோவையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நீதிபதி கர்ணன் கோயம்புத்தூரில் கைதுபடத்தின் காப்புரிமைTWITTER Image captionமுன்னாள் நீதிபதி கர்ணன் கோயம்புத்தூரில் கைது

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி என்ற இடத்தில் ஒரு தனியார் கல்லூரிக்கு அருகில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, செவ்வாய்க்கிழமை மாலை கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், பிபிசி தமிழிடம் இதை உறுதி செய்தார்.

தமிழக காவல்துறையின் உதவியுடன் மேற்குவங்க காவல் துறை அவரைக் கைது செய்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பிற்காக கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்தது. அவர் கடந்த மே 10ஆம் தேதியிலிருந்து தேடப்பட்டுவருகிறார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், இந்த மாதம் 12ஆம் தேதி ஒய்வுபெற்றார்.

உச்ச நீதிமன்றம்படத்தின் காப்புரிமைAFP Image captionஉச்ச நீதிமன்றம்

நீதித்துறைக்கே களங்கம் கற்பித்ததாக, கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் கர்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் நீதிபதிகளைப் பற்றியும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைப் பற்றியும் ஊழல் புகார்களைத் தெரிவித்து நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியதையடுத்து இந்த விவகாரம் வெடித்தது.

http://www.bbc.com/tamil/india-40346164

  • தொடங்கியவர்
கர்ணன் கைதுக்கு உதவிய தமிழக அதிகாரி
 
 
 

கோவை: சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த, கொல்கத்தா உயர்நீதிமன்ற மாஜி நீதிபதி கர்ணன், யாரும் எதிர்பாராத வகையில், கோவையில் நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

 

கர்ணன், கைது, உதவிய, தமிழக, அதிகாரி


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எட்டு ஆண்டுகளாக பணியாற்றியவர் கர்ணன், 60; கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சக நீதிபதிகள், 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய இவர், அது தொடர்பான பட்டியலை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதன் எதிரொலியாக, கடந்த பிப்ரவரியில் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாறுதல் செய்யப்பட்டார். அதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த கர்ணன், தாழ்த்தப்பட்டவர் என்பதால், தன்னை மற்றவர்கள் பழி வாங்குவதாகக் குற்றம்சாட்டினார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சுப்ரீம் கோர்ட் தன்னிச்சையாக முன் வந்து பதிவு செய்தது.
மேலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியது. அதை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஐந்து பேருக்கு, தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக தீர்ப்பு வழங்கினார். அவரது செயல்பாட்டை கண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அவரது மனநிலை குறித்து பரிசோதனை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
அவரை மருத்துவ பரிசோதனை செய்வதற்காகச் சென்ற மருத்துவக் குழுவினருக்கு, ஒத்துழைப்பு அளிக்காமல், திருப்பி அனுப்பினார் கர்ணன். இதனால், அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை

விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. உடனடியாக, கொல்கத்தாவிலிருந்து கிளம்பி சென்னை வந்த கர்ணன், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார். அவர், தலைமறைவாயிருந்த நிலையிலேயே, கடந்த 12ம் தேதியுடன், அவரது பணிக்காலம் முடிவுக்கு வந்தது.
முறைப்படி ஓய்வு பெறாத அவரை, கைது செய்வதற்காக மேற்குவங்க போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் பல்வேறு இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். மேற்குவங்க, டி.ஜி.பி, தலைமையிலான தனிப்படை போலீசார் தமிழகத்தில் முகாமிட்டிருந்தனர்.
 

ரகசியமாக தங்கியிருந்தார்


இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, கோவை அருகே நேற்று மாலை, மாஜி நீதிபதி கர்ணனை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர். கோவை - பொள்ளாச்சி சாலைக்கு அருகிலுள்ள மாச்சேகவுண்டன்பாளையம் கிராமத்தில், வீடுகள் அதிகமில்லாத பகுதியில், தனியாக இருந்த ஒரு புதிய வீட்டில், ரகசியமாக தங்கியிருந்த அவரை, தமிழக போலீசார் உதவியுடன் மேற்குவங்க போலீஸ் உயரதிகாரிகள் கைது செய்தனர்.
இங்கு இவர் எத்தனை நாட்களாக கோவையில் தங்கியிருந்தார், அவர் இங்கு தங்குவதற்கு உதவியவர்கள் யார் யார் என்பது குறித்து மத்திய, மாநில உளவு போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கர்ணனை நேரடியாக ஆஜர்படுத்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்ததன் காரணமாக, மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக, அவரை மேற்குவங்க போலீசார் நேற்றிரவு கோவை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு நிருபர்களிடம் கர்ணன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராகஆவேசமாக பேட்டியளித்தார்.
 

கைதுக்கு உதவிய தமிழக அதிகாரி


கர்ணனை கைது செய்வதற்காக வந்த அதிகாரிகளில் முக்கியமானவர், தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரியான டாக்டர் சுதாகர். தற்போது, சென்னையில் துணை கமிஷனராக பணியாற்றி வரும் இவர், கோவை ரூரல் எஸ்.பி.,யாக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சிக்கியது எப்படி?


கர்ணன் தங்கியிருந்த வீட்டின் அறையில், ஒரு காலண்டரில் ஓர் அலைபேசியின் எண், பச்சை நிற மையால் எழுதப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, எதிர் முனையில் பேசிய பெண், முதலில் பதட்டமாக, 'அப்பா! எதுவும் சொன்னாரா' என்று கேட்டார். அவரிடமிருந்து போனை வாங்கிப் பேசிய மற்ற இரு பெண்களும் எதுவும் விபரம் சொல்லவில்லை.
கர்ணன் கைது செய்யப்பட்ட விபரங்களைக் கூறியதும், 'ராங் நம்பர்; நாங்கள் யு.கே.,யில் இருக்கிறோம்' என்று கூறி, இணைப்பைத் துண்டித்து விட்டனர். அந்த எண், 'சாந்தி ஐசக்' என்ற பெயரில் பதிவாகியுள்ளது தெரியவந்தது. அவர் யார் என்பது தெரியவில்லை. கர்ணன், இந்த எண்களில் பேசியதை வைத்து, அவரது இருப்பிடத்தை போலீசார் கண்டு பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.

அறையில் இருந்தவை:


கர்ணன் தங்கியிருந்த வீடு, அந்த கிராமத்துக்கு சற்று ஒதுக்குப்புறமாக உள்ளது. தனி வீடாக இருந்த அந்த வீடு, முன்னாள் நீதிபதி ஒருவரின் வீடு என்று கூறப்படுகிறது. அந்த வீட்டில், இதுவரையிலும் கல்லுாரி மாணவர்கள் சிலர் தங்கியிருந்துள்ளனர்; தற்போது அவர்கள் இல்லை.
கர்ணன் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது, ஒரு பையில் டைரி இருந்தது. ஒரு வோட்கா பாட்டில், சோடா, தயிர் பாக்கெட் ஆகியவையும் இருந்துள்ளன. அவர் இருந்த அறையில், ஏ.சி., இல்லை; ஏர் கூலர் மட்டும் இருந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1794866

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.