Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்

Featured Replies

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்

 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் நரேந்திர மோடியுடன் வென்று நாடாளுமன்றத்துக்குள் சென்ற 543 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 39 பேர்.

மோடி ஆட்சியின் மூன்றாண்டு கொண்டாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நம் எம்.பி-க்களும் நாடாளுமன்றத்துக்குள் சென்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அங்கே, அவர்களின் பெர்ஃபாமென்ஸ் எப்படி, அரையாண்டுப் பரீட்சையில் அவர்கள் வாங்கிய மார்க் என்ன?

2014 ஜூன் 4-ம் தேதிதான் 16-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஆரம்பமானது. அன்றுமுதல் இன்றுவரையில் 11 கூட்டத் தொடர்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கூட்டத்தொடர்களின் மொத்த நாள்கள் 213. அதாவது, இந்த மூன்றாண்டுகளில் 213 நாள்கள் நாடாளுமன்றம் கூடியிருக்கிறது. நான்காவது கூட்டத்தொடர்தான் மிக அதிக பட்சமாக 35 நாள்கள் நடைபெற்றது. இந்தக் கணக்கு எல்லாம் தெரிந்தால்தான், நம் எம்.பி-க்கள் எந்த அளவுக்கு மட்டம் போட்டார்கள் என்பது தெரியும். நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் எம்.பி-க்கள் கையெழுத்துப் போடுவதற்காக வருகைப் பதிவேடு வைக்கப் பட்டிருக்கும். அதில் போடப்படும் கையெழுத்தை வைத்துத்தான் எம்.பி-க்களின் வருகைப் பதிவேடு கணக்கிடப்படுகிறது. அமைச்சர்கள், சபாநாயகர் போன்றவர்கள் கையெழுத்திடுவதில்லை. அதனால் தம்பிதுரை, பொன்.ராதாகிருஷ்ணன் இந்த லிஸ்ட்டில் இல்லை.

p10a.jpg

நம்பர் ஒன் அன்புமணி

அன்புமணியின் நாடாளுமன்ற அட்டெண்டன்ஸ் ரொம்ப வீக். 37 எம்.பி-க்களில் அதிகம் மட்டம் போட்டதில் முதல் இடத்தில் இருப்பவர் அன்புமணிதான். 213 நாள்களில், 101 நாள்கள்தான் அவர் அவைக்கே வந்திருக்கிறார். அதாவது, பாதிநாள்கள்கூட அவர் அவைக்கு வரவில்லை. மொத்தமே, 10 விவாதங்களில்தான் கலந்துகொண்டார். நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய மொத்தக் கேள்விகள் வெறும் 23-தான்.

அணி மாறிய அன்வர்

அன்புமணிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அன்வர் ராஜா. தினகரனுக்கு ஆதரவாக டி.வி விவாதங்களில் தலைகாட்ட நேரம் இருக்கும் அன்வர் ராஜாவுக்கு, நாடாளுமன்றத்துக்குள் செல்ல காலம் கைகூடவில்லை. 154 நாள்கள்தான் அவைக்கு வந்திருக்கிறார். 28 விவாதங்களிலும் 107 கேள்விகள் எழுப்பியிருக்கிறார். பெரம்பலூர் மருதராஜா, தஞ்சை பரசுராமன், சிவகங்கை செந்தில்நாதன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் மட்டம் போட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

வாழ்றதே அங்கேதான்!

அதிக நாள்கள் அவைக்கு வந்த ‘மக்கள் பிரதிநிதி’களில் ஆரணி ஏழுமலைதான் முதல் இடத்தில் இருக்கிறார். அவர், 194 நாள்கள் அவைக்கு வந்திருக்கிறார். 61 விவாதங்களில் பங்கேற்றதுடன் 333 கேள்விகளையும் கேட்டி ருக்கிறார். இரண்டாவது இடத்தில் திருவண்ணா மலை வனரோஜாவும் (193 நாள்கள்), மூன்றாவது இடத்தில் அரக்கோணம் ஹரியும் (191 நாள்கள்), நான்காவது இடத்தில் கள்ளக்குறிச்சி காமராஜும், திருப்பூர் சத்தியபாமாவும் திருவள்ளூர் வேணுகோபாலும் (190 நாள்கள்) இருக்கிறார்கள்.

ஏப்ரல் மேயிலே...

2016 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கூட்டத் தொடரில்தான் தமிழக எம்.பி-க்கள் அதிக அளவுக்கு அவைக்கு வராமல் இருந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், அப்போது தமிழகச் சட்ட சபைத் தேர்தல் நடைபெற்றது. பிரசாரத்துக்குப் போனதால், பலரும் நாடாளு மன்றத்துக்குச் செல்லவில்லை. 

p10b.jpg

விவாத மன்னர்கள்!

விவாதங்களில் கலந்துகொண்டவர்களை எடுத்துக்கொண்டால், விருதுநகர் ராதாகிருஷ்ணன்தான் மிகக் குறைந்த விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவர், பங்கேற்ற விவாதங்கள் ஏழு மட்டுமே.  இவருடைய வருகைப் பதிவு 166 நாள்கள். இப்படிக் குறைந்த விவாதங்களில் கலந்துகொண்டவர்களில் ராதாகிருஷ்ணனுக்கு மேலே இருப்பவர்கள் அன்புமணி (10 விவாதங்கள்), திருநெல்வேலி பிரபாகரன் (12), பெரம்பலூர் மருதராஜா (14), விழுப்புரம் ராஜேந்திரன் (15) ஆகியோர். 

அதிக விவாதங்களில் கலந்துகொண்ட வர்களைப் பட்டியல் போட்டால், திருப்பூர் சத்தியபாமா முதல் இடத்தில் இருக்கிறார். அவர், 80 விவாதங்களில் கலந்துகொண்டார். சத்தியபாமாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் தஞ்சாவூர் பரசுராமன் (73 விவாதங்கள்), நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் (68 விவாதங்கள்), கிருஷ்ணகிரி அசோக்குமார் (67 விவாதங்கள்), ஆரணி ஏழுமலை (61 விவாதங்கள்) ஆகியோர் இருக்கிறார்கள். 

கேள்வியின் நாயகரே...

அடுத்து, கேள்விகள் கேட்டவர்களின் பெர்ஃபாமென்ஸ் எப்படி எனப் பார்ப்போம். மிகக் குறைந்த அளவு கேள்வி கேட்டவர்களின் பட்டியலிலும் அன்புமணிக்குத்தான் முதல் இடம். அவர் எழுப்பிய மொத்த கேள்விகள் 23. அவருக்கு  அடுத்தடுத்த இடங்களில் திருநெல்வேலி பிரபாகரன் (79 கேள்விகள்), ஈரோடு செல்வகுமார சின்னையன் (89 கேள்விகள்), ராமநாதபுரம் அன்வர் ராஜா (107 கேள்விகள்), விழுப்புரம் ராஜேந்திரன் (130 கேள்விகள்) ஆகியோர் உள்ளனர்.

அதிகக் கேள்விகளைக் கேட்டவர்களில் விருதுநகர் ராதாகிருஷ்ணன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் எழுப்பிய கேள்விகள் 571. இவருடைய வருகைப்பதிவு 166 நாள்கள்தான். இரண்டாவது இடத்தில் மத்திய சென்னை விஜயகுமாரும் (549 கேள்விகள்), மூன்றாவது இடத்தில் வட சென்னை வெங்கடேஷ் பாபுவும் (519 கேள்விகள்), நான்காவது இடத்தில் திருவள்ளூர் எம்.பி டாக்டர் வேணுகோபாலும் (483 கேள்விகள்), ஐந்தாவது இடத்தில் தென் சென்னை ஜெயவர்த்தனும் (454 கேள்விகள்) இருக்கிறார்கள்.

39 எம்.பி-க்களில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பி.ஜே.பி எம்.பி பொன் ராதாகிருஷ்ணன், தர்மபுரியைச் சேர்ந்த பா.ம.க எம்.பி. அன்புமணி தவிர, மற்ற 37 எம்.பி-க்களும் அ.தி.மு.க-வினர்தான். நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி அ.தி.மு.க. ஆனால், இவ்வளவு பலம் இருந்தும் என்ன புண்ணியம்?

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.