Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஆளுங்கட்சியும் நானே... எதிர்க்கட்சியும் நானே!” - தினகரன் டபுள் ரோல்

Featured Replies

மிஸ்டர் கழுகு: “ஆளுங்கட்சியும் நானே... எதிர்க்கட்சியும் நானே!” - தினகரன் டபுள் ரோல்

 
 

 

‘‘இப்போது அ.தி.மு.க  ஆட்சிக்குத் தினகரன்தான் ஹீரோ... வில்லனும் அவரே...” என்றபடியே நம்முன் வந்து குதித்தார் கழுகார்.

‘‘இரண்டு வேஷங்களையும் ஒரே நேரத்தில் கட்ட முடியுமா?” என்ற கேள்வியைப் போட்டோம்.

p44a.jpg‘‘பொருத்தமாக அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்து விட்டார் தினகரன் என்றே சொல்கிறார்கள். இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதும் தினகரன்தான், கவிழ்க்கப் போவதும் தினகரன்தான் என்பதே ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேச்சு. ‘ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை, பொதுச்செயலாளர் முடிவு செய்து அறிவிப்பார்’ என்றார் தினகரன். அதற்குள் முந்திக்கொண்டு, ‘பி.ஜே.பி-க்கு ஆதரவு’ என்று எடப்பாடி அறிவித்துவிட்டார். பொதுவாக, இதுபோன்ற முக்கிய அரசியல் முடிவுகளைக் கட்சியின் ஆட்சி மன்றக்குழுவைக் கூட்டி ஜெயலலிதா அறிவிப்பார். ஆனால், ‘பிரதமர் ஆதரவு கோரினார். அதன் அடிப்படையில் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு’ என்று தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை கொடுத்துவிட்டார்கள்.”

‘‘பி.ஜே.பி வேட்பாளரை விட்டுவிட்டு, வேறு யாரை எடப்பாடி அணியால் ஆதரிக்க முடியும்?”

‘‘வேறு யாரையும் ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், ‘எதற்காக இவ்வளவு சீக்கிரம் அறிவிக்க வேண்டும்? மூத்த அமைச்சர்கள் சிலரை பெங்களூருக்கு அனுப்பி சசிகலாவைச் சந்திக்கவைத்து, அவர்கள் மூலமாக அறிவிக்க வைத்திருக்கலாமே?’ என்று தினகரன் ஆட்கள் கேட்கிறார்கள்.”

‘‘ஓஹோ!”

‘‘சசிகலா கட்டுப்பாட்டிலோ, தினகரன் கட்டுப்பாட்டிலோ, தாம் இல்லை என்பதைக் காட்ட இதை ஒரு வாய்ப்பாக எடப்பாடி எடுத்துக்கொண்டார். தினகரன் மேற்பார்வையில்தான்,  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். அதை எடப்பாடிக்கு நிபந்தனையாகவும் வைத்தார்கள். இதை, கடந்த முறை நானே சொல்லி இருந்தேன். ஆனால், ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்’ என்று அனைத்து நாளிதழ்களிலும் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துவிட்டார் எடப்பாடி. அதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன், எடப்பாடி படமும் பளிச்சென இடம்பெற்று இருந்தது.”

‘‘அரசு விழாதானே அது? அதில், தினகரனுக்கான முக்கியத்துவம் இருக்காதுதானே?”

p44c.jpg

‘‘எல்லாமே தனது மேற்பார்வையில், சசிகலாவின் உத்தரவின் பேரில் நடக்க வேண்டும் என்று தினகரன் விரும்புகிறார். அது எடப்பாடியிடம் நடக்கவில்லை. தினகரன் தரப்புக்கு எதிராக எடப்பாடி இருந்தாலும், சசிகலா குடும்பத்தில் இருக்கும் பிற உறவுகளோடு அவரும் அமைச்சர்கள் சிலரும் நல்ல தொடர்பில்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்தில் அவர்கள் சொல்வதெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ‘தினகரனை அனுசரிப்பதற்குப் பதிலாக பன்னீரைச் சேர்த்துக்கொள்ளலாம்’ என்று எடப்பாடி ஆட்களும், ‘தினகரனை அனுசரிப்பதற்குப் பதிலாக எடப்பாடியுடன் சேர்ந்து கொள்ளலாம்’ என்று பன்னீர் ஆட்களும் சொல்கிறார்கள். இதுதான் தினகரனைக் கடுப்பாக்கியது. எனவே, ‘நான்தான் ஆளுங்கட்சி, நான்தான் எதிர்க்கட்சி’ என்று தினகரன் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். அதன் வெளிப்பாடுதான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.”
‘‘ஒருவர் வெளிநடப்பு செய்வதால் என்ன ஆகப் போகிறது?”

‘‘அந்த ஒருவர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்பதுதான் முக்கியம். மேலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் என்று 34 பேர் இருக்கிறார்கள். திடீரென இவர்கள் வெளிநடப்பு செய்தால் ஆட்சி ஆடிவிடும். மானியக்கோரிக்கை மீது விவாதம் நடத்தி, கடைசியில் அது நிறைவேற வேண்டும். தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்து தீர்மானம் தோற்றுவிட்டால், அன்றோடு ஆட்சியில் விரிசல் விழுந்துவிடுமே?”

‘‘பி.ஜே.பி வேட்பாளரைப் பன்னீரும் ஆதரிக்கிறாரே?’’

‘‘ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசை ஆதரிக்கவேண்டிய நிர்பந்தம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், அரசியல் எதிர்காலத்துக்காகவும் பி.ஜே.பி-யை ஆதரிக்கவேண்டிய சூழ்நிலை ஓ.பி.எஸ்-ஸுக்கு ஏற்பட்டுள்ளது.”

‘‘தினகரன் ஆதரவு?”

‘‘சமீபத்தில் பெங்களூரு சென்று சசிகலாவை ஒரே நாளில் காலையில் தம்பிதுரையும், மாலையில் தினகரனும் சந்தித்தார்கள். தம்பிதுரை, பி.ஜே.பி-யின் தூதர் போலத்தான் சசிகலாவைச் சந்தித்துள்ளார். ‘ஜனாதிபதி தேர்தலில் நாம்
பி.ஜே.பி-யை ஆதரித்தால்தான் எதிர்காலத்துக்கு நல்லது. மத்திய அரசு நம்மோடு இணக்கமான போக்கைக் கையாளும்’ என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், அன்று மாலையே தினகரன், ‘ஆட்சி நம்மைவிட்டுப் போனாலும் பரவாயில்லை; கட்சியை நாம் காப்பாற்ற வேண்டும்.பி.ஜே.பி-யை, தொடர்ந்து ஆதரித்தால் காலைச் சுற்றும் பாம்பாக நமக்கு அவர்கள் இருந்துவிடுவார்கள். அவர்களை ஆதரிப்பதைப் பற்றி நாம் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்’ என்று கோபமாகப் பேசினார். ஆனாலும், மத்திய அரசைப் பகைத்துக்கொள்ளும் முடிவில் சசிகலா இல்லையாம். அதை தினகரனிடம் சொல்லியும் இருக்கிறார். இப்போது, ‘எடப்பாடி இப்படிப்பட்ட முடிவைத்தான் எடுக்க வேண்டும் என்று சசிகலா சொல்லி அனுப்பினார்’ என்று தம்பிதுரை சொல்கிறார். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை எடப்பாடியும் பன்னீரும் டெல்லியில் இருந்த நேரத்தில், ‘சசிகலாவின் உத்தரவுப்படி அ.தி.மு.க தன் ஆதரவை பி.ஜே.பி வேட்பாளருக்கு வழங்குகிறது’ என தினகரனும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.’’

‘‘அடடே!’’

‘‘யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று இந்தத் தேர்தலில் கட்சிக் கொறடா உத்தரவு போட்டு, யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. எனவே, எம்.எல்.ஏ-க்கள் அவரவர் மனசாட்சிப்படி ஓட்டுப்போடலாம். அவர்கள் சொந்தமாக முடிவு எடுத்தால் ஓட்டுகள் அணி மாறலாம். எனவே, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முழுமையாக பி.ஜே.பி-க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று சொல்லமுடியாது. ஏற்கெனவே, அ.தி.மு.க ஆதரவில் வெற்றிபெற்ற தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள் ஆளும்கட்சிக்கு எதிராக சட்டசபையிலே வெளிநடப்பு செய்துள்ளனர். இந்த மூவரும் இனி எடப்பாடி அணிக்குச் சாதகமாக நடக்கும் மனநிலையில் இல்லை. தனி அணியாகத்தான் செயல்பட உள்ளார்கள்.’’

‘‘இவர்களைத் தனியாகப் பிரித்தது தினகரன்தானா?”

‘‘அப்படித்தான் சொல்கிறார்கள்! அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பில்லை. வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார்கள் என்ற கோபம் அவருக்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும் தினகரனுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அவரை ஓரம்கட்டி வருவதைத் தினகரன் ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அரசு சார்பில் எடப்பாடி விழா நடத்தட்டும், கட்சி சார்பில் நாம் விழா நடத்துவோம் என்று தினகரன் தரப்பு சொல்லி வருகிறது. ஆனால், அப்படி விழா நடத்த விடக்கூடாது என எடப்பாடி தரப்பு உஷாராக இருக்கிறது. மாவட்டவாரியாக உளவுப்பிரிவு போலீஸார், தினகரன் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மூன்று நிர்வாகிகளுடன், ஐந்து அமைச்சர்கள் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். இந்த ரகசியச் சந்திப்பின்போது, தினகரனைக் கழற்றிவிட்டு விட்டு ஓ.பி.எஸ் அணியைக் கட்சிக்குள் கொண்டுவருவது பற்றி விவாதித்துள்ளார்கள்” என்ற கழுகார், தி.மு.க மேட்டருக்கு வந்தார்.

p44b.jpg

‘‘கடந்த சில நாட்களாகவே, சட்டமன்றத்தில் தி.மு.க தரப்பில் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் செய்யவில்லை, கவனித்தீரா?’’

‘‘ஏனாம்?”

‘‘பிப்ரவரி 18-ம் தேதியன்று தமிழக  சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஏழு பேர் கண்ணியம் தவறி நடந்துகொண்டதாகச் சொல்லி அவை உரிமைக்குழு விசாரித்து வந்தது. ஆரம்பத்தில் இதைத் தி.மு.க பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஜனாதிபதி தேர்தல் வருகிற இந்த நேரத்தில், ஏழு எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்கிற தகவல் மு.க.ஸ்டாலினுக்குக் கிடைத்தது. அவை உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. தி.மு.க, காங்கிரஸ் சார்பில் அவை உரிமைக்குழுவில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், மெஜாரிட்டியினர் அ.தி.மு.க-வினர்தான். அடுத்த  மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஏழு எம்.எல்.ஏ-க்களையும் சஸ்பெண்டு செய்யும் நடவடிக்கை எடுப்பது பற்றிய பேசியதாகச் சொல்கிறார்கள். இந்தத் தகவல் வந்ததும், தி.மு.க தரப்பில் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார்கள்.”

‘‘யார் அந்த ஏழு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்?”

‘‘அம்பேத்குமார், மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், சுரேஷ்ராஜன், கார்த்திகேயன், முருகன் மற்றும் கு.க.செல்வம் ஆகியோர்தான் அவர்கள். இவர்களுடன், ரெங்கநாதன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட சில பேரையும் கூடுதலாக சேர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்கலாமா என்று பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். உடனே, பொள்ளாச்சி ஜெயராமனைத் தி.மு.க முக்கிய பிரமுகர்கள் சந்தித்து, ‘புது உறுப்பினர்கள்... விவரம் தெரியாமல் நடந்துவிட்டார்கள். இனி அப்படி நடக்காது’ என்று சொன்னார்களாம்.

‘2006-11 ஆண்டுகளில் உங்கள் ஆட்சியில் எங்களை என்ன பாடு படுத்தினீர்கள்? இப்போது இதைச் சும்மா விட முடியுமா?’ என்று கோபமாகக் கேட்டிருக்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன். ஏதேதோ சொல்லி தி.மு.க-வினர் சமாதானம் பேசியிருக்கிறார்கள். அதையடுத்து, முதல்வர் எடப்பாடியைக் கடந்த 21-ம் தேதியன்று தி.மு.க சீனியர்களான ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பெரியகருப்பன், ரகுபதி, சக்கரபாணி உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.”

“அப்புறம் என்ன ஆனது?’’

“சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் அப்போது வருத்தம் தெரிவிக்கப்பட்டதாம். இனி அப்படி நடந்துகொள்ளமாட்டார்கள் என்று தி.மு.க-வும் உத்தரவாதம் கொடுத்ததாம். அதன் பிறகுதான், முதல்வர் எடப்பாடி கொஞ்சம் இறங்கி வந்தாராம். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது’’ என்றபடி எழுந்த கழுகார், ‘‘ரஜினி மும்பை போய்விட்டார். ஐந்து நாள்கள் அங்கு படப்பிடிப்பு. அதை முடித்துவிட்டு ஜூலை இறுதியில் அமெரிக்கா செல்வதாகவும், அங்கு சிகிச்சை நடக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். அநேகமாக இரண்டு மாதங்கள் கழித்துத்தான் அவர் தனது ரசிகர்களைச் சந்திப்பாராம்” என்றபடி பறந்தார்.

படங்கள்: தி.விஜய், ந.கண்பத்
அட்டை கிராஃபிக்ஸ்: பிரேம் டாவின்ஸி


p44.jpg

‘‘காத்திருக்க முடியுமா?’’

ச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான மேற்கு வங்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடந்த 20-ம் தேதி கோவையில் கைது செய்திருக்கிறது மேற்கு வங்க போலீஸ். கிட்டத்தட்ட 42 நாள்கள் அவர் பல ஊர்களுக்கு மாறி மாறிச் சென்றுகொண்டிருந்தார். ஆந்திராவில் தடா, காளஹஸ்தி என அவர் சென்றதை போலீஸ் கண்டறிந்தது. காளஹஸ்தி கோயிலில் இடிந்த கோபுரத்தை 90 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய கமிட்டிக்குக் கர்ணனே தலைவர். அதனால், அவர் அங்கு இருப்பார் எனச் சந்தேகப்பட்டது போலீஸ்.

பிறகு கொச்சி, பாலக்காடு எனச் சென்ற அவர், கடைசியில் கோவையில் தங்கியிருந்தார். போலீஸ் அவர் வீட்டுக் கதவைத் தட்டியதும், ‘‘என்னுடைய கருணை மனு ஜனாதிபதி பரிசீலனையில் இருக்கிறது. சில நாட்களில் முடிவு தெரிந்துவிடும். அதுவரைக் காத்திருக்க முடியுமா?’’ என்று அமைதியான குரலில் கேட்டார் கர்ணன். ‘‘எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் சொல்லுங்கள்’’ என்ற போலீஸார், அவர் தன் அறைக்கதவை உள்பக்கமாகத் தாழிடாமல் உடை மாற்றிக்கொள்ள மட்டும் அனுமதித்தனர்.

‘கர்ணனின் ஓய்வுக்கால சலுகைகளைத் தடுக்காமல் வழங்க வேண்டும்’ என்று கேட்டு, கர்ணனின் நண்பர்கள் சிலர் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்தித்தனர்.அந்தச் சந்திப்பு நடந்த சில மணி நேரங்களில் கர்ணன் கைது செய்யப்பட்டார்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.