Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடுவரை இருந்த ஜெயாவின் உறவுகள் எல்லாம் வீதி வரை வந்து சந்தி சிரிக்க வைத்த காட்சிகள்

Featured Replies

வீடுவரை இருந்த ஜெயாவின் உறவுகள் எல்லாம் வீதி வரை வந்து சந்தி சிரிக்க வைத்த காட்சிகள்

 

ஜூன் 11 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை சாம்­பியன்ஸ் கோப்­பைக்கு இந்­தியா அரை­யி­று­திக்குத் தகுதி பெறும் ஆட்­டத்தை காண தமிழ்­நாடே ஆவ­லாகக் காத்­தி­ருந்­தது.

ஆனால் அதை­விட விறு­வி­றுப்­பான ஆட்­டத்தைத் தமி­ழகம் கண்டு பர­வ­ச­ம­டைந்­தது. அதுதான் தீபா – தீபக்– ராஜா – மாதவன் ஆகியோர் இணைந்து போயஸ் தோட்­டத்தில் நடத்­திய கர­காட்டம். என்ன நடந்­தது?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் போயஸ் கார்டன் இல்­லத்தில் ஜெய­தீபா முற்­றுகை என்று வந்த செய்­தியைப் பல பத்­தி­ரி­கை­யா­ளர்கள் கூட நம்­ப­வில்லை.

பேபி­யம்­மா­வா­வது காலையில் எந்­தி­ருச்சு வர்­ற­தா­வது என்று தட்டிக்கழித்­து­விட்டுப் போர்­வைக்குள் சுருண்ட பத்­தி ­ரி­கை­யா­ளர்­களை, அடுத்த சில நிமி­டங்­களில் பின்­னங்கால் பிட­ரியில் பட ஓடி வர­வைத்தார் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேர­வையின் நிறு­வுநர் (!) தலைவர் (!) பொதுச் செய­லாளர் (!) ஜெய­தீபா.

அங்கே பத்­தி­ரி­கை­யா­ளர்­களும் டி.வி. கேம­ரா­மேன்­களும் சென்­ற­போது, போயஸ் தோட் டம் மூடப்­பட்­டி­ருந்­தது. யாரும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

விசா­ரித்தால், போயஸ் கார்டன் இல்­லத்தில் ஜெய­ல­லி­தாவின் படத்­திற்கு மல­ரஞ்­சலி செலுத்த வரு­மாறு தனது தம்பி தீபக் பல­முறை தொடர்பு கொண்டு அழைத்­த­தா­கவும் இதனை நம்பி தானும் தனது நண்பர் ராஜாவும் கார்டன் இல்­லத்­திற்கு வந்­த­தா­கவும் கூறிய தீபா, வீட்­டிற்குள் நுழைந்­த­வுடன் தங்­களைச் சிலர் தீபக் முன்­னி­லை­யி­லேயே தாக்­கி­ய­தாகப் பொலி­ஸா­ரிடம் முறை­யிட்டுக் கொண்­டி­ருந்தார்.

அந்த நேரத்தில் மனைவி சிக்­கிக்­கொண்­ட­தாகத் தகவல் கிடைத்­ததும் மனை­வியை மீட்க (?) நாலு அல்லு சில்­லு­க­ளுடன் ஓடி­வந்தார் மாதவன். பொலி­ஸா­ரிடம் அவரும் மல்­லுக்­கட்ட ஒரு வழி­யாக அவரை மட்டும் பொலிஸார் அனு­ம­தித்­தனர்.

என்­னதான் நடந்­தது? தீபா­வுடன் சென்­ற­வர்­க­ளி­டமும் கார்டன் ஊழி­யர்­க­ளி­டமும் பேச்சுக் கொடுத்­த­போது, காலை 5 மணிக்கு தீபாவின் செல்­போனை தொடர்பு கொண்ட தீபக், அத்தை படத்­துக்கு சில பூஜை­யெல்லாம் பண்ண வேண்­டி­யி­ருக்கு. நீ மட்டும் தனியா கார்­ட­னுக்கு வா என்று கூறினார்.

இல்­லடா எனக்கு டயர்டா இருக்­குது. நான் தூங்­கிட்டு இருக்கேன். ஈவ்னிங் வர்­றேன் தீபா கூறவே, இல்லை நீ வந்தே ஆகணும் என்று தீபக் மல்­லுக்­கட்ட அதற்கு மேல் பேச விரும்­பாமல் தீபா போனை கட் செய்து விட்டார்.

பிறகு தீபாவின் நண்­பரும் தீபா பேர­வையின் பொரு­ளா­ள­ரு­மான ராஜாவைத் தொடர்பு கொண்ட தீபக், அக்­காவ எப்­ப­டி­யா­வது கார்டன் வீட்­டுக்கு அழைச்­சுட்டு வந்­துடு என்று கேட்டுக் கொள்­ளவே இரு­வரும் காலை 9 மணி­ய­ளவில் கார்டன் இல்­லத்­திற்கு வந்­தனர்.

வரும்­போதே தனியார், ஆங்­கில தொலைக்­காட்சி ஒன்­றையும் கூடவே அழைத்து வந்­தனர். வீட்­டிற்குள் நுழைய எந்த எதிர்ப்பும் இல்லை. சக­ஜ­மாக உள்ளே நுழைந்த போர்­டி­கோவில் வைக்­கப்­பட்­டுள்ள ஜெய­ல­லி­தாவின் படத்­திற்கு மல­ரஞ்­சலி செலுத்­தினார். இதற்கு பிற­குதான் பிரச்­சினை ஆரம்­பித்­தது.

மல­ரஞ்­சலி செலுத்­திய தீபா, வீட்­டிற்குள் நுழைய முயன்றார். இதனை எதிர்­பா­ராத கார்டன் ஊழி­யர்­களும் பாது­கா­வ­லர்­களும் அதற்கு அனு­மதி மறுத்­தனர். நீ யாருடா என்னைத் தடுக்­கு­ற­துக்கு? என்று சீறிய தீபா, வீட்­டிற்குள் நுழைந்து அங்கு சுவரில் மாட்­டப்­பட்­டி­ருந்த படங்­களை எல்லாம் எடுத்து தனது காரில் வைக்கச் சொன்னார். அவ­ருடன் வந்­த­வர்கள், ஜெய­ல­லி­தாவின் சிறு வய­துப்­ப­டங்­களை எல்லாம் எடுத்து தீபாவின் காரில் வைத்­தனர்.

அப்­பொ­ழுது சசி­க­லாவின் ஓவியம் ஒன்று சுவரில் மாட்­டப்­பட்­டி­ருப்­பதைப் பார்த்த தீபா திடீ­ரென்று டென்­ஷ­னாகி, ராஜாவை அழைத்து உட­ன­டி­யாக அதை எடுத்து வெளியே போடச் சொன்னார். ராஜாவும் அதைக் கழற்றி வெளியே கொண்டு போகவே எங்­கி­ருந்தோ ஓடி­வந்த கோதண்டம் என்ற ஊழியர், இதை­யெல்லாம் நீங்க எடுக்­கக்­கூ­டாது என்று தடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இரு தரப்­பிற்கும் வாக்­கு­வாதம் முற்றிக் கைக­லப்­பா­னது. கார்டன் பாது­காப்­பிற்கு நின்ற தனியார் நிறு­வன பாது­கா­வ­லர்கள், தீபா­வையும் ராஜா­வையும் கார்­டனை விட்டு வெளி­யேற்­றினர். இவர்­களை யாரும் தாக்­க­வில்லை. இவர்­க­ளோடு வந்­தி­ருந்த தனியார் தொலைக்­காட்­சியின் நிருபர், கேம­ராமேன் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்டு அவர்­க­ளது கேமரா உடைக்­கப்­பட்­டது.

வீட்டை விட்டு வெளி­யேற்­றப்­பட்ட தீபா ஆவே­ச­மாக அங்கு பாது­காப்­பிற்கு நின்­றி­ருந்த பொலி­ஸா­ரிடம் வாக்­கு­வாதம் செய்யத் தொடங்­கினார். என்ன சார் அரெஸ்ட் பண்­ணி­டு­வீங்­களா? எங்க பண்­ணுங்க பார்க்­கலாம் என்று மல்­லுக்­கட்­டவே செய்­வ­த­றி­யாது பொலி­ஸாரும் திகைத்­தனர். அப்­போது அங்கு வந்த பொலிஸ் துணை கமி­ஷனர் சர­வணன், தேனாம்­பேட்டை பொலிஸ் உதவி கமிஷன் சுப்­பி­ர­ம­ணியன் ஆகியோர் நீங்கள் இங்கே இருந்து கிளம்­புங்க. உங்க தம்­பியும் காரில் ஏறிப் போய்­விட்டார். ஏன் பிரச்­சினை செய்­கி­றீர்கள் என்­றனர்.

என்ன சார் நான் சாகிற வரைக்கும் இங்கே உண்­ணா­வி­ரதம் இருப்பேன் என்று மிரட்டத் தொடங்­கினார் தீபா. அச்­ச­மயம் தீபாவின் கணவர் மாதவன் போயஸ் கார்டன் வந்து சேரவே அவ­ரிடம் தீபா, தீபக் தான் தேவை­யில்­லாம எங்­கள இங்க வர­வச்சு மாட்­டி­விட்டான். நாங்­களா வரலை, அவன் தான் கூப்­பிட்டான் என்று அவ­ரிடம் புலம்­பிக்­கொண்­டி­ருந்தார்.

அப்­பொ­ழுது ஒரு பொலிஸ் அதி­காரி மாதவன் மீது கை வைத்து கௌம்­புங்க சார் என்று கூறவே தீபா­வுக்கு சுர்ர்ர் என்று கோபம் தலைக்­கே­றி­விட்­டது. அந்த அதி­கா­ரியைப் பார்த்து, அவ்­வ­ளோதான் உங்­க­ளுக்கு எல்லாம். மாதவன் யார்ன்னு தெரி­யும்ல. என் ஹஸ்­பெண்டு என்று சொல்ல, அந்த ரண­க­ளத்­திலும் ஒரு குதூ­க­ல­மாக மாதவன் முகத்தில் மத்­தாப்பு சிரிப்பு!

திடீ­ரென அங்கே வந்த தீபக், தனி­யாகப் போய்ப் பேசிக் கொள்­ளலாம் வா என்று தீபாவை அழைத்தார். டேய் என்­னடா நடிக்­குற? நீ தானே எங்­கள வர­வச்சு? மாதவன் மேல கை வைக்­குற, ராஜாவா தெரி­யா­துன்னு சொல்ற, போடா எச்­சக்­கல, பிச்சைக் காசுக்­காக இப்­படிப் பண்­ணாத என்று தன் சொந்தத் தம்பி மீது ஆத்­தி­ரத்தைக் கொட்­டினார்.

தீபக் தன் காரில் ஏறிச் செல்­லவும், ஓடி வந்த ராஜா, இப்ப வர்­றீயா இல்­லையா? நீ (கட்சித் தலைவர் என்ற மரி­யாதை கூட இல்­லாமல் தீபாவை ஒரு­மையில் விளித்­த­படி பேசினார் ராஜா) என்று தீபா­வுக்கு அதட் டல் போட்டார். உனக்கு விஷயம் புரி­யல. நம்­மள தீபக் சிக்­கல்ல மாட்டி விட்­டி­ருக்கான். நம்ம எல்­லா­ருக்கும் இத­னால பிரச்­சினை இருக்கு. இந்தப் பிரச்­சினை தீர்ற வரைக்கும் நீ வெயிட் பண்­ணணும் என்று ராஜாவை அடக்­கினார்.

இதை­யெல்லாம் தீபாவின் கணவர் மாதவன் தனது செல்­போனில் படம் பிடித்துக்கொண்டே, நான் தீபாவைப் பார்த்­துக்­கிறேன். நீ கிளம்பு என்று ராஜா­விடம் பவ்­ய­மாகச் சொன்னார். மாதவன், உஷ்­ண­மான ராஜா, டேய் இத ஏன்டா படம் புடிக்­கிற பர­தேசி. மொபைல் போனை ஆப் பண்­ணுடா. (கட்சித் தலை­வியின் கண­வ­ருக்கு என்னா மரி­யாதை என்னா மரி­யாதை) என்று தீபாவின் முன்­னி­லை­யி­லேயே அவரைத் திட்­டி­ய­தோடு ஒரு கட்­டத்தில் உஷ்­ண­மாகி, “பணத்­துக்­காகப் பிச்சை எடுக்­கிற நாய் நீ சொந்த வீட்­டுல நகை, பணம் திரு­டிட்டு போன நாய் நீ" என்று எகி­றவே தீபாவின் முகத்தில் எந்த ரியாக் ஷனும் இல்லை. கணவர் மீது கைவைத்­து­விட்­ட­தாகப் பொலிஸ் அதி­கா­ரியைக் காய்ச்­சிய தீபா, ராஜாவை மட்டும் ஏனோ எதிர்த்து வாய்­தி­றக்­க­வில்லை.இறு­தி­யாகப் பொலிஸார் தீபாவைச் சமா­தா­னப்­ப­டுத்தி கார்டன் ஏரி­யாவை விட்டு வெளியே அனுப்­பினார்.

பத்­தி­ரி­கை­யா­ளர்­களைச் சந்­தித்த தீபா, பொறம்­போக்கு அவன். சசி­க­லா­வோட ஆளுங்க அவன். சொந்த அத்­தையத் தாய் மாதிரி இருந்­த­வங்­கள சசி­க­லா­வோட சேர்ந்து பணத்­துக்­காகக் கொன்­னுட்டான் என்று ஏதோ பிதற்­றினார். உங்க அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை என்ன? என்று கேட்­ட­தற்கு, பிர­தமர் இந்த ஆட்­சியக் கலைக்­கணும். சட்டம், ஒழுங்கு நாசமாப் போய்க்­கிட்டு இருக்­குது. இது ஒரு ஆட்­சியா? என்று சீறி­விட்டு, இது சம்­பந்­த­மாகப் பிர­தமர் மோடியை நேரில் சந்­தித்து முறை­யிடப் போவ­தாகச் சொல்­லி­விட்டு தீபா கிளம்­பவே, நடந்­தது புரி­யாமல் பத்­தி­ரி­கை­யா­ளர்கள் திரு திரு­வென விழித்­தது நிஜம்.

இதுபற்றி விளக்­க­ம­ளித்த தீபக், ஆமாம் நான் தான் தீபாவக், கூப்­பிட்டேன். போயஸ் கார்டன் வீட்­டுக்­குள்ள போற­துக்கு எங்­க­ளுக்கு எப்­பொ­ழு­துமே தடை இல்ல. அது எங்க சொத்து. அங்க யாரும் தாக்­கப்­ப­டலை. விளம்­ப­ரத்­துக்­காக இப்­படிப் பேசுற தீபாவை அந்த போயஸ் கார்டன் வீடு வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கச் சொல்­லங்க பார்க்­கலாம் என்று சீறினார். மாத­வனோ, பிரச்­சினை முடிஞ்சு. ஒன்றா ஒரே கார்ல கிளம்­பின எங்­களப் பிரிச்சு தனி கார்ல சில பொலிஸ் அதி­கா­ரி­களும் ராஜாவும் என்­னைய அனுப்பி வச்சாங்க. புருஷன் பொண்டாட்டிய பிரிக்கிறதுல இவங்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியல? என்று சொல்லிவிட்டு கபி…கபி…. மேரே தில் மே என்ற பாடலை முணுமுணுத்தார்.

ஜூன் 11 ஆம் திகதி போயஸ் தோட்டத்தில் நடந்த கூத்துக்களைப் பார்க்கும்போது, நான்தான் சொப்பன சுந்தரி…. என்னை யாரு வைச்சிருக்கா என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது. ஆம் அந்த போயஸ் தோட்ட பங்களாவை யாரு வைச்சிருப்பது என்ற பிரச்சினைக்குத்தான் இந்த ஆட்டம் அரங்கேறியதாகவே தெரிகிறது. விரைவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு எடுத்துக்கொண்டால்தான் அவருக்குப் புண்ணியம் செய்தது போல இருக்கும்!

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-24#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.