Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நான் என்ன தப்பு செய்தேன்னு சின்னம்மா கேட்டாங்க!”

Featured Replies

“நான் என்ன தப்பு செய்தேன்னு சின்னம்மா கேட்டாங்க!”

பூரிப்பில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்

 

அ.தி.மு.க-வில் எடப்பாடி கோஷ்டியில் எத்தனை பேர் தினகரன் பக்கம் இருக்கிறார்கள், எத்தனை பேர் எடப்பாடிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், எத்தனை பேர் நடுநிலை வகிக்கிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. இந்தச் சூழலில், கடந்த திங்கள்கிழமை தினகரனுடன் திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று, சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள் ஐந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அரூர் எம்.எல்.ஏ முருகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ பழனியப்பன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, மானாமதுரை எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி, ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்ரமணி ஆகியோரே அவர்கள். இந்த ஐந்து பேரில் சிலரிடம் பேசினோம்.

p2b.jpg

‘‘டீ குடிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்!’’

அரூர் எம்.எல்.ஏ முருகன் மிகுந்த பரவசத்தோடு பேச ஆரம்பித்தார். ‘‘சின்னம்மாவின் உடல்நலத்தை விசாரித்து வர வேண்டும் என்று கருதி நான் மட்டும் தனியாகப் போயிருந்தேன். நான் போயிருந்த வேளையில், மற்ற நான்கு எம்.எல்.ஏ-க்களும் வந்திருந்தார்கள். மொத்தமாக ஐந்து பேருக்கும் சின்னம்மாவைப் பார்க்க சிறைத்துறையின் அனுமதி கிடைத்தது. ஒருவித படபடப்போடு நாங்கள் உள்ளே போனோம்.

நான்கு மாதங்களுக்கும் மேலாக சிறைக்குள் இருப்பதால் சோர்வாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், களையான முகத்தோடு ஆரோக்கியமாக வந்து அமர்ந்தார். ‘அம்மா... நல்லா இருக்கீங்களா?’ என நாங்கள் கேட்பதற்கு முன்பே அவர் எங்களையெல்லாம் பார்த்து, ‘நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டார். 

‘நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படிம்மா இருக்கீங்க? இங்கு என்ன மாதிரியான வசதிகள் இருக்கு’ எனக் கேட்டோம். ‘நான் நல்லா இருக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மூன்று வேளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி நல்ல சாப்பாடு வழங்குகிறார்கள். என்னுடைய ரூமில் பெட், ஃபேன், டி.வி எல்லாம் இருக்கிறது. இங்கு இருக்கும் சிறைத்துறைப் பாதுகாவலர்கள் எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்’ என்று கூறினார்.

p2d.jpg

சின்னம்மாவின் முக பாவனைகளைப் பார்க்கும்போது, அம்மா நிச்சயமாக நன்றாக இருக்கிறார்கள் என்று உணர முடிந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறைத்துறை அலுவலர்களைப் பார்த்து, ‘இவர்களுக்கு டீ கொடுங்கள்’ என்றார். அவர்களும் உடனே போய் டீ போட்டுக் கொண்டுவந்து எங்களுக்கும் சின்னம்மாவுக்கும் கொடுத்தார்கள். சின்னம்மாவோடு ஒன்றாக அமர்ந்து டீ குடிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்.

நான் கட்சியில் அடிமட்டத் தொண்டன். அவர்களிடம் அமர்ந்து அரசியல் பேசும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. சின்னம்மாவின் உடல்நலத்தை மட்டும் விசாரித்தேன். இளவரசியைப் பார்க்கவில்லை. சிறையை விட்டு வெளியே வரும்போது பாதுகாவலர்களிடம் ‘சின்னம்மாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினேன். அவர்களும் ‘சரி’ என்று சொன்னார்கள்’’ என்றார்.

‘‘அரசியல் ஆலோசனைகளை வழங்கினார்!’’

முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சரும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வுமான பழனியப்பன், ‘‘சின்னம்மா ஆரோக்கியமாகவும் தெளிவாகவும் இருக்கிறார். எங்களையெல்லாம் ஊக்கப்படுத்தும் விதமாகப் பேசினார். அவரின் உடல்நலம், சாப்பாடு முறைகளை விசாரித்தோம். நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். உண்மையிலேயே தைரியத்தோடு இருக்கிறார். அவர் கட்சியின் பொதுச் செயலாளர் என்பதால் எங்களுடைய சந்திப்பு மரியாதை நிமித்தமாகவும் உடல்நலம் விசாரிப்பதுமாகவே இருந்தது.

தமிழகத்தின் இப்போதைய அரசியல் நிலவரங்களைக் கேட்டார். ஒன்றுவிடாமல் சொன்னோம். அவர் மதிநுட்பத்தோடு நாங்கள் சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்டார். ஆனால், ‘நீங்கள் இப்படிச் செயல்படுங்கள்... அப்படிச் செயல்படுங்கள்’ என்று ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மாறாக, ‘அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். உங்களுடைய தொகுதிப் பிரச்னைகளைச் சட்டசபையில் பேசுங்கள். அடிக்கடி அமைச்சர்களை நேரில் சந்தித்துத் தொகுதிப் பிரச்னைகளைக் கூறி, சரி செய்யச் சொல்லுங்கள். தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். முடிந்தவரை தொகுதி மக்களுக்கு நன்மைகளைச் செய்யுங்கள். இதுதான் மிகமிக முக்கியம்’ என்றார்.

‘நான் இல்லை என்று வருத்தப்பட வேண்டாம்’ என்று சொன்னவர், பல அரசியல் ஆலோசனைகளையும் கூறி எங்களை ஊக்கத்தோடு அனுப்பி வைத்தார்’’ என்றார்.

p2a.jpg

‘‘சின்னம்மாவின் அடுத்த வாரிசு...’’

மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி, ‘‘சின்னம்மா இந்த வேதனையிலும் மனதளவில் தைரியமாகவே இருக்கிறார். ‘நமக்குள்ள ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைச் சரி பண்ணிடலாம். அவற்றையெல்லாம் பெரிசுபடுத்த வேண்டாம். நாம சண்டை போட்டு தி.மு.க-வை உள்ளே வர விட்டுவிடக் கூடாது. இன்னும் இருக்கின்ற நான்கு ஆண்டு கால ஆட்சி நீடிக்க வேண்டும். நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருங்க’ன்னு சொன்னாங்க. ஓ.பி.எஸ் பத்தி பேச்சு வந்தபோது, ‘நான் என்ன தப்பு செஞ்சேன்? அம்மாகூட இருந்தேன். கட்சியை வளர்க்க அம்மாவுக்காக வாழ்ந்தேன். இதுதானே நான் செய்தது? இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா அம்மாவுக்கு முன்னாடியே நான் இறந்திருக்கலாம் போல தெரியுது’ என விரக்தியா சொன்னாங்க. ஆனா, அவங்க தைரியமாக இருக்காங்க. ஒரு தலைவருக்கான தைரியம் இருக்கிறது.

p2.jpgஅம்மா இறந்ததை, சின்னம்மாவால் ஜீரணிக்க முடியவில்லை. உடன்பிறந்த சகோதரிகூட இப்படி இருந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அம்மாவின் மரணத்தைப் பற்றி கவலைப்படுகிறார். ‘எப்படியாவது உயிரோடு போயஸ் கார்டனுக்கு அழைத்துவர முயற்சி செய்தேன். இப்படி நடந்துவிட்டதே’ என்றார்.

டெல்லி சிறையில் இருந்து வெளியே வந்ததும் டி.டி.வி.தினகரன் பெங்களூரு சிறைக்குச் சென்று சின்னம்மாவைப் பார்த்தார். அப்போது அவரிடம் சின்னம்மா என்ன சொன்னார் என்பதை எனக்குச் சொன்னார்கள். ‘தமிழக அரசியல் வரலாற்றைப் பார்... அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்கள் எல்லாம் இயக்கத்தை வளர்க்கப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நாமும் சந்திக்கிறோம். தைரியமாக இரு. கட்சிப் பணியைத் தொடர்ந்து செய்’ என்று சொல்லி அனுப்பினார் சின்னம்மா.

சின்னம்மாவை வெளியே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மறு சீராய்வு மனு போட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற வழக்கு இதற்கு முன்பு ஏதாவது நடந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சின்னம்மாவின் அடுத்த வாரிசாக தினகரனைப் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு அரசியல் அனுபவம் தினகரனுக்கு இருக்கிறது’’ என்றார்.

எல்லோருமே தெளிவாதான் இருக்காங்க!

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.