Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான ஒரு பார்வை

Featured Replies

காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான ஒரு பார்வை

 


காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான ஒரு பார்வை
 

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை நம்பகமான சுயாதீன நிறுவனமொன்றிடம் ஒப்படைக்க வேண்டுமென ஐ.நா வலியுறுத்தியது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிக்கமைய, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட போதிலும் அந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான திருத்தப் பிரேரணைக்கு சபை அங்கீகாரமளித்தது.

காணாமற்போனோரை பற்றி அலுவலகத்தின் முடிவுகளை ஏதேனும் குற்றவியல் அல்லது குற்றவியல் பொறுப்பை எழுப்பலாகாது என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் பற்றி அலுவலகத்துடன் தொடர்புடையோர், இரகசியத் தன்மையை பேணிப்பாதுகாப்பதுடன் அதற்கு உதவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகள், அலுவலகத்தின் தகவல்கள் தொடர்பாக ஏற்புடையதல்ல எனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருத்தப் பிரேரணையின் போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் பின்னர் விமர்சனங்களுக்குள்ளாகின.

காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பது காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொறுப்பென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், குற்றச்செயல்கள் பற்றி விசாரிக்கும் அதிகாரம் அலுவலகத்திற்கு கிடையாதெனவும் பிரதமர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம், நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏதுவான கட்டமைப்போ அல்லது பொறுப்புக்கூறலுக்கான அமைப்போ அல்லவென அமைச்சர் டி.எம் சுவாதிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், சிவில் அல்லது குற்றவியல் சட்டநடவடிக்கைகளை மெற்கொள்ள முடியாது எனவும், தகவல் அறியும் சட்டத்தின் கீழோ அல்லது நீதிமன்ற செயற்பாட்டின் ஊடாகவோ தகவல்களைப் பெற முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

 

 

http://newsfirst.lk/tamil/2017/06/காணாமற்போனோர்-அலுவலகம்-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.