Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பொதுச் செயலாளர் நானா? தினகரனா?’ - சிறையில் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive

Featured Replies

‘பொதுச் செயலாளர் நானா? தினகரனா?’ - சிறையில் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive

 

சசிகலா

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ‘கட்சி அதிகாரம் யார் கையில் இருக்கிறது?’ என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் வலம் வருகிறது. ‘தினகரனின் செயல்பாடுகளால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் சசிகலா. ‘இனியும் தினகரனுக்காக அணி திரட்டும் வேலைகளைத் தொடங்கினால், விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்' என நிர்வாகிகளிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

‘பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை, கட்சிப் பதவியில் இருந்து யாராலும் நீக்க முடியாது. கட்சியின் தலைமைப் பதவியில் அவர்தான் இருக்கிறார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்' என நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அதேநேரம், எம்எல்ஏ-க்களில் ஒரு சிலரும் தினகரனை தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகின்றனர். இன்று காலை நெல்லை மாவட்ட எம்.பி பிரபாகரன், தினகரனை சந்தித்துப் பேசினார். “எம்.பி-க்கள் அன்வர் ராஜா, பிரபாகரன், விஜிலா சத்தியானந்த் ஆகியோர், தினகரனை சந்திப்பதற்குக் காரணம், இந்த மாவட்டங்களில் சசிகலா சமூகத்துக்கு வேண்டப்பட்ட நிர்வாகிகள் அதிகம் இருப்பதுதான். இந்த மாவட்டங்களில் உள்ள சாதிரீதியான செல்வாக்கை மனதில் வைத்துக் கொண்டே, அவர்கள் சசிகலா குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். ஆனால், இதுபோன்ற சந்திப்புகள் நடப்பதை சசிகலா ரசிக்கவில்லை" என விவரித்த அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர், 

தினகரன்“சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற நாளில் இருந்தே, கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலைகளில் தினகரன் இறங்கிவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா பெயரை தினகரன் தரப்பினர் இருட்டடிப்பு செய்தனர். தேர்தல் பிரசாரத்தின் எந்த இடத்திலும் சசிகலா என்ற பெயரை தினகரனும் அமைச்சர்களும் உச்சரிக்கவில்லை. இந்தக் கோபம் இன்னும் சசிகலாவிடம் இருந்து மறையவில்லை. ‘ஜெயலலிதா இறந்தபோது, உடைந்து போக இருந்த கட்சியை நான்தான் ஒற்றுமையோடு வழிநடத்தினேன். இதை டெல்லியில் விரும்பாததால்தான், நான் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் இல்லாவிட்டால், கட்சி பல துண்டுகளாக உடைந்து சிதறியிருக்கும். அனைவரையும் அரவணைத்துக் கொண்டு தினகரன் வழிநடத்துவார் என்றுதான் நம்பினேன். இந்தளவுக்குச் செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை’ என அப்போதே வேதனையை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரிப்பது குறித்து, சசிகலாவிடம் பேசி முடிவு செய்தோம்’ எனப் பேட்டி அளித்தார் தம்பிதுரை. தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களில் சிலர் தனி அணியாக உருவாகி, ‘கட்சியின் துணைப் பொதுச் செயலாளரிடம் பா.ஜ.க தலைமை பேசினால், ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்போம்' என நேரடியாகப் பேசியுள்ளனர். இதனை பா.ஜ.க தலைமை ரசிக்கவில்லை. இதைப் பற்றி தம்பிதுரையிடம் அவர்கள் பேசியுள்ளனர். அவரும் சசிகலாவின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார். ‘நான் சொல்லும் வரையில் எந்த நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம்' என தினகரனிடம் கண்டிப்புடன் கூறிவிட்டார் சசிகலா.

தம்பிதுரைஇதன் பின்னரும் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, எம்எல்ஏ-க்கள் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் தினகரன் ஆதரவு மனநிலையில் பேசி வந்தனர். ‘தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது நல்லது அல்ல’ என குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு சிறையில் சசிகலாவை சந்திக்கச் சென்றிருக்கிறார் அ.தி.மு.க பேச்சாளர் ஒருவர். அவரிடம் பேசிய சசிகலா, ‘தினகரனுக்கு ஆள் திரட்டும் வேலைகளில் ஈடுபட்டால், நான் வேறு மாதிரி செயல்பட வேண்டியது வரும். கட்சிக்கு நான் பொதுச் செயலாளரா? தினகரன் பொதுச் செயலாளரா? எங்கு மேடை கிடைத்தாலும், இப்படித்தான் பேசுவீர்களா? இனியும் தினகரனுக்கு ஆதரவாக அணி திரட்டும் வேலைகளில் இறங்கினால், கட்சியை விட்டு நீக்கவும் தயங்க மாட்டேன். எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்' எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். இந்த அதிரடிக்குப் பிறகு, தினகரன் புகழ்பாடுவதை பேச்சாளர்கள் குறைத்துக் கொண்டுவிட்டனர். கட்சியில் நடக்கும் நிலவரங்களையும் அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்" என்றார் விரிவாக. 

 

“தினகரனுக்கு எதிராக சசிகலா இந்தளவுக்குக் கோபத்தை வெளிப்படுத்துவதற்குக் காரணமே, அவருடைய குடும்ப உறவுகள்தான். தினகரனின் தன்னிச்சையான செயல்பாடுகளும் இளவரசி குடும்பத்து உறுப்பினர்களின் நடவடிக்கைகளையும் அவருடைய கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகிறது. ‘கட்சியின் முழு அதிகாரமும் உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் வெளியில் வரும்போது, அந்த அதிகாரம் தொடர வேண்டும் என நினைக்கிறோம். தினகரனை இனியும் செயல்பட அனுமதித்தால், பொதுச் செயலாளர் பதவியும் கையைவிட்டுப் போய்விடும். நாங்களும் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். பணத்தை வைத்து மொத்த எம்எல்ஏ-க்களையும் விலை பேசிவிடுவார்’ என எச்சரித்துள்ளனர். இதன்பிறகே, தினகரன் ஆதரவு நிர்வாகிகளிடம் கடுமையைக் காட்டினார் சசிகலா” என்கிறார் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/93633-who-is-the-general-secretary-of-admk---me-or-ttv-dinakaran---sasikala.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.