Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரை விமர்சனம்: யானும் தீயவன்

Featured Replies

திரை விமர்சனம்: யானும் தீயவன்

 
திரை விமர்சனம்: யானும் தீயவன்
   
திரைப்படம் யானும் தீயவன்
 
நடிகர்கள் அஸ்வின் ஜெரோம், வர்ஷா, ராஜு சுந்தரம், பொன் வண்ணன், சந்தான பாரதி, விடிவி கணேஷ், மதுமிதா
 
இசை அச்சு
 
ஒளிப்பதிவு; இயக்கம்: பிரசாந்த் ஜி சேகர். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா;பிரசாந்த் ஜி சேகர்.

புதிய இயக்குனர், அறிமுக நாயகன், புதிய தயாரிப்பாளர் என்றவுடன் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் சென்றால்கூட சற்று ஏமாற்றத்தைத் தரும் படம்.

மைக்கலும் (அஸ்வின் ஜெரோம்) சவுமியாவும் (வர்ஷா) காதலர்கள். ஒரு நாள் கடற்கரைக்குச் செல்லும்போது ஏற்படும் பிரச்சனையில் ஒரு சைக்கோ கொலைகாரனை அடித்துவிடுகிறார்கள். பிறகு வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டு, அந்த கொலைகாரன் இருக்கும் வீட்டின் மாடியிலேயே தங்குகிறார்கள்.

திரை விமர்சனம்: யானும் தீயவன்

அப்போது சவுமியா வேறு ஒரு கொலையைப் பார்த்துவிடுகிறாள். கொலைகாரனும் இந்த ஜோடியைப் பார்த்துவிடுகிறான். பிறகு அவர்களைச் சித்ரவதை செய்து கொல்ல முடிவுசெய்கிறான். இதே நேரத்தில் அந்த கொலைகாரனை காவல்துறை அதிகாரி ஒருவரும் (பொன்வண்ணன்) தேடுகிறது.

ஒரு சைக்கோ கொலைகாரன் - அவன் பிடியில் நாயகன், நாயகி - கொலைகாரனை கொல்லத் துரத்தும் போலீஸ் என்பது ஒரு நல்ல த்ரில்லருக்கான ஒன் லைன்தான். ஆனால், திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் மைக்கலும் சவுமியாவும் காதலிக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது 80களின் இறுதியில் வந்த படத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறது. காட்சியமைப்பு மட்டுமல்ல, ஒளிப்பதிவே அப்படித்தான் இருக்கிறது.

திரை விமர்சனம்: யானும் தீயவன்

 

இதன் பிறகு தொடரும் காதல், வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் என எந்தக் காட்சியிலும் மனம் ஒட்டவில்லை. ராஜு சுந்தரம் வரும் காட்சிகள் மட்டும் - குறிப்பாக படத்தின் பின் பாதியில் வரும் காட்சிகள் - சற்றுப் பரவாயில்லை.

க்ளைமாக்ஸில் ஹீரோ, ஏதோ புத்திசாலித்தனமாக செய்து தப்பிக்கப்போகிறார் என்று பார்த்தால், வில்லனை அடித்துப்போட்டுவிட்டு தப்பிக்கிறார்.

திரை விமர்சனம்: யானும் தீயவன்

இதை முதலிலேயே செய்திருக்க வேண்டியதுதானே என்று தோன்றுகிறது. கௌதம் மேனன் படங்களைப் போல அவ்வப்போது பின்னணியில் குரல் ஒலிப்பது, படத்திற்கு எந்த விதத்திலும் உதவிசெய்யவில்லை. ஒளிப்பதிவு, இசை ஆகியவை மிக சராசரி ரகம்.

படத்தில் நாயகனாக வரும் அஸ்வின் ஒரு நல்ல அறிமுகம். நாயகி வர்ஷா, ஏற்கனவே சதுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு நல்ல கவனிப்பைத் தரக்கூடும். வில்லனாக வரும் ராஜு சுந்தரம் இந்தத் திரைக்கதைக்குள் என்ன செய்திருக்க முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.

படம் ஒன்றே முக்கால் மணி நேரமே ஓடுகிறது என்பது ஆசுவாசமளிக்கிறது. இதற்கேற்றபடி காட்சிகளை சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

http://www.bbc.com/tamil/arts-and-culture-40439717

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: யானும் தீயவன்

 

 
 
 
thee_3181653f.jpg
 
 
 

வம்பு தும்புக்கும் செல்லாமல் காதலியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் கல்லூரி மாணவர், சூழ்நிலை காரணமாக தீயவனாக மாறும் கதை.

யாருடைய பல கொலைகளைச் செய்துவிட்டு சர்வ சாதாரணமாக நடமாடும் சைக்கோ ரவுடி ராஜு சுந்தரம். கல்லூரி மாணவரான அஸ்வின் ஜேரோமும், சக மாணவியான வர்ஷாவும் காதலர்கள். கடற்கரைக்கு செல்லும் இவர்களை, ராஜு சுந்தரத்தின் ஆட்கள் கிண்டல் செய்ய, அவர்களை அஸ்வின் ஜெரோம் நையப் புடைக்கிறார். பொடிப் பையன் தன்னை அடித்ததால் கோபமடையும் ராஜு சுந்தரம், அவர்களை பழிவாங்க துடிக்கிறார். எதிர்பாராத தருணத்தில் ராஜு சுந்தரத்திடம் காதலர்கள் சிக்கிக் கொள்ள, அவர்களை கொடுமைப்படுத் திக் கொல்ல முடிவெடுக்கிறார். இதற் கிடையில் ராஜு சுந்தரத்தை என் கவுன்ட்டர் செய்ய போலீஸார் முடிவெடுக்கின்றனர்.

அப்புறம் என்ன ஆச்சு என்ற 2-வது பாதி விறுவிறுப்பாக இருந்தாலும், முதல் பாதி சொதப்புகிறது.

காதலர்களின் குடும்பம், அவர்களது கல்லூரி வாழ்க்கை, காதல், ரவுடியின் உளவியல் சிக்கல், காவல் துறை அதிகாரியின் நிலைமை ஆகியவற்றை நிறுவுகிறோம் என்ற பெயரில் உப்புச் சப்பில்லாத காட்சிகளால் பொறுமை யைச் சோதிக்கிறார்கள். முதல் பாதியில் நிமிர்ந்து உட்கார வைக்கும் ஒரே இடம், ரவுடிகளை நாயகன் திருப்பி அடிக்கும் சண்டைக் காட்சி.

‘‘குறும்படம் மாதிரி போகுது..” என்று படம் தொடங்கியதுமே ரசிகர்கள் மத்தியில் இருந்து கமெண்ட் வருகிறது. முழுப்படத்தையும் பார்த்த பிறகு, ‘என்னே தமிழ் சினிமா ரசிகர்களின் தீர்க்கதரிசனம்’ என மெச்சாமல் இருக்க முடியவில்லை.

காதல் காட்சிகளும், ஏதோ பழைய படம் பார்ப்பதைப் போல் சலிப்பை தருகின்றன. நாயகி வர்ஷா, நஸ்ரியா சாயலில் பளிச்சிடுகிறார். நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். நாயகன் அஸ்வின் சண்டை காட்சிகளில் ஈர்க் கிறார்.

காதலித்து திருமணம் செய்து கொண்டால், பெண்ணைப் பெற்றவர்கள் அத்தோடு மகளை தலைமுழுகி விடுவார்கள், பையன் தரப்பில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் என்ற ஃபார்முலாவை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது, மிஸ்டர் இயக்குநர்? சௌமியாவின் அப்பா, ‘அப்பா, அம்மான்னு சொல்லிக்கிட்டு வீட்டுப் பக்கம் வந்தே செருப்பு பிஞ்சிடும்’ என்று சொல்வது; மைக்கேலின் அம்மா, பையனுக்கு பாஸிட்டிவாக அட்வைஸ் தந்துவிட்டுப் போவது, இந்தக் காட்சிகளுக்குப் பிறகு இரு தரப்புமே பிள்ளைகளை அப்படியே மறந்து போவது அத்தனையும் பழைய சினிமாத்தனங்கள்.

பாடல் வரிகள் ரசிக்கும்படி இருந் தாலும் இசை கைகோக்கவில்லை. அச்சு ராஜாமணி இசையில் இன்னும் கொஞ்சம், கவனம் செலுத்தியிருக் கலாம். அதேபோல் படத்தின் எடிட் டிங்கிலும் பல காட்சிகள் தொங்கலாக, தனித்து நிற்கிறது. படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் மட்டுமே ஆறுதல் தருகின்றன. காவல் ஆய்வாளராக பொன்வண்ணன் நிறைவான நடிப்பை தந்துள்ளார்.

முதல் பாதியின் தேக்கத்தைக் களைந்திருந்தால் முழுமையான த்ரில்லராக இன்னும் ஈர்த்திருப்பான் இந்த யானும் தீயவன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-யானும்-தீயவன்/article9745156.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.