Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு மகிழ்ச்சி…பெருமை…. பாரம்பரிய நகர அறிவிப்பில் -?

Featured Replies

யாருக்கு மகிழ்ச்சி…பெருமை…. பாரம்பரிய நகர அறிவிப்பில் -?

இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக குஜராத்
மாநிலத்தின் அகமதாபாத் நகரம் யுனெஸ்கோவால், தேர்வு
செய்யப்பட்டிருப்பதாகவும்,

அதில் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சி அடைவதாகவும்
சில ‘பெரிய மனிதர்கள்’ ட்விட்டர் மூலம் மகிழ்ச்சி
தெரிவித்திருக்கிறார்கள்….


heritage-bjp-p.jpg?w=640

அஹமதாபாத் 600 ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான்
உருவான ஒரு நகரம்…

அதைவிட புராதனமான,
அதைவிட கலாச்சார, சரித்திர பெருமை உடைய,
அதைவிட உலகப்புகழ் பெற்றவை
இந்த இந்திய நகரங்கள் –
( இதைத்தவிர – இன்னமும் சிலவும் இருக்கின்றன…)

வாரணாசி ( காசி )-
-கௌதம புத்தர், புத்த மதத்தை கி,மு.528 -ல்
அதாவது சுமார் 2545 வருடங்களுக்கு முன் இங்கு தான்
ஸ்தாபித்தார் என்று சரித்திரம் கூறுகிறது ( புராணங்களை
இங்கு விட்டு விடுவோம்…)

banaras-varansi-b.jpg?w=640&h=469

உஜ்ஜயின் –
கி.மு.6-வது நூற்றாண்டிலேயே (அதாவது 2600 ஆண்டுகளுக்கு
முன்னரே ), இந்த நகரம் இருந்ததாக சான்றுகள்
கிடைத்திருக்கின்றன…. (கவி காளிதாசனையும், சாகுந்தலத்தையும் மறந்து விடுவோம்….)

ujjain.jpg?w=640

மதுரை –
கடைச் சங்க காலத்திய தமிழ் நகரம் –
மெகஸ்தனீசும், குப்தர் காலத்து சாணக்கியரும்,
3-வது நூற்றாண்டிலேயே ( 2300 ஆண்டுகளுக்கு முன்னர்)
தங்கள் எழுத்துக்களில் மதுரையை பற்றி கூறி
இருக்கிறார்கள்.

madurai.jpg?w=640&h=360

பாட்னா (பாடலிபுத்திரம்)-
கி.மு.490-ல், அதாவது சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர்,
மகத மன்னர்களால் உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற
மௌரிய சாம்ராஜ்யம் வளர்ந்தது இங்கு தான்…

patna.jpg?w=640&h=352

தஞ்சாவூர் –
பண்டைய சோழ நாட்டின் தலைநகர் –
ஆட்சியில் இருப்பவர்கள் மறந்து விட்டாலும் கூட,
உலகம் நினைவில் வைத்து போற்றும், 985-ஆம் ஆண்டு
கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் இருப்பது இங்கு தான்…

tanjore.jpg?w=640&h=360

அயோத்தி –
இன்றைய விஷயங்களை தள்ளி விடுவோம். புராணங்களையும்
மறந்து விடுவோம்…. கி.பி.6-ம் நூற்றாண்டில் குப்தர்களின் காலத்திய நகரம் இது. காளிதாசன் “ரகுவம்சம்” பாடிய ஊர்….

1_ayodhya.jpg?w=640&h=427

காஞ்சிபுரம் –
மௌரியர் காலத்திய பட்டயங்களில் ( கி.மு.320 -128 )
காஞ்சியின் பெயர் காணப்படுகிறது. கி.பி.6-ம் நூற்றாண்டில்
பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியதற்கு சான்றுகள்
இருக்கின்றன…( மாமல்லபுரத்தை மறந்து விடுவோம்…!!! )

kanchipuram.jpg?w=640


இந்த “அஹமதாபாத்” அறிவிப்பினால் –
குஜராத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடையலாம்…
“பக்தர்”களும் பெருமகிழ்ச்சி அடையலாம்.,
ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்…!!!

ஆனால் –

– எங்களை மறந்தது எப்படி
என்று மேற்படி ஊர்களைச் சேர்ந்தவர்கள்,
மேற்படி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கேட்கக்கூடும்…

– அவர்கள் விஷயம் புரியாதவர்கள்… கேட்கலாம்…!

– ஆனால் நமக்கு புரிகிறது …..
எப்படி, ஏன் – கிடைத்தது என்று…!!!
எனவே நாம் அப்படியெல்லாம் கேட்கமாட்டோம் …

http://www.tamilenfo.com/story/152798

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல் வாதிகளை குளிர்விக்க... அவர்களுக்கு  சாதகமான நகரத்தை  தேர்ந்தெடுத்தமை,
 யுனெஸ்கோ அமைப்பிற்கே.... கேவலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.