Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணக்கார கைதிகளுக்கு சிறையில் ‛ராஜ உபசாரம்'

Featured Replies

உபசாரம்
பணக்கார கைதிகளுக்கு சிறையில் ‛ராஜ உபசாரம்'
 
 
 

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், பரபரப்பன அக்ரஹாரா சிறையில், பணக்கார கைதிகளுக்கு ராஜ உபசாரம் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

பணக்கார,கைதிகளுக்கு,சிறையில்,'ராஜ உபசாரம்'

பெங்களூரு மத்திய சிறை, முதலில், நகரின் மையப்பகுதியான, தற்போதைய சுதந்திர பூங்கா இருக்கும் இடத்தில் தான் அமைக்கப் பட்டிருந்தது. கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, நகருக்குள் போக்குவரத்து நெருக் கடி போன்றவற்றால், 2000 ல், இச்சிறையை, பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு மாற்றினர்.

சிறையில் முறைகேடு என்பது, காலம், காலமாக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. சிறைக்கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் பலரும், 'தண்டம்' அழாமல், சிறை வளாகத்துக்குள் செல்லக்கூட முடியாது.
 

பணம் கொடுக்கல் ஆரம்பம்


சிறை வளாகத்தின் நுழைவு பகுதியில், இரு போலீசார் அமர்ந்திருப்பர். அவர்களை முத லில், 'கவனிக்க' வேண்டும். இங்கு தான், லஞ்சம் கொடுப்பது ஆரம்பமாகிறது. இரண்டா வதாக, கைதிகளில் யாரை பார்க்க வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும். வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும்.

ஒரு கைதியை பார்க்க, ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். பதிவு செய்வதற்கே, 20 ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டும்.அதிக மான நபர்கள், செல்ல வேண்டுமென்றால், அங்குள்ள ஊழியர்களுக்கு குறைந்தது,

100 ரூபாயாவது கொடுக்க வேண்டும். பார்க்க வருப வர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அன்பளிப்பு தொகை உயர்ந்து கொண்டே இருக்கும்.
 

சோதனை மேல் சோதனை


இங்கு பதிவு செய்த சீட்டை எடுத்து கொண்டு, கைதி களை பார்க்கும் வரிசையில் நிற்க வேண்டும். அப் பகுதியில், சிறை ஊழியர்கள், உள்ளே செல்பவர் களைசோதனையிடுவர். உணவுப்பொருட்கள் உட்பட கைதிகளுக்கு கொடுக்க கொண்டு செல்லும் பொருட்களை பரிசோதிப்பர். இங்கும் பணம் விளையாடும்.

இதன் பின், கைதிகளை பார்ப்பதற்காக, கூண்டுப் பகுதிக்கு செல்வர். அங்கு கைதியை பார்க்க காத்தி ருக்க வேண்டும். அவர் வந்தவுடன், குறிப்பிட்ட நேரத்துக்குள் பேசி முடிக்க வேண்டும். அவரிடம் பேசிய பின், கொண்டு செல்லும் பொருட்கள், கொடுப்பதற்கு முன், 'ஸ்கேனிங்' செய்யப்படும். அவர்கள், குறைந்த பட்சம் 20, 30 ரூபாய் என வசூலித்து விடுவார்கள்.
 

ரூ.200 வரை செலவு


ஸ்கேனிங் முடிந்த பின், ெபாருட்களை, நேரடியாக கைதியிடம் வழங்க முடியாது. அங்குள்ள கவுன்டர் ஒன்றில் அமர்ந்திருப்பவர், கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். அதற்குள், 50 ரூபாயை, தண்டம் அழுது விட்டால், எதையும் கேட்க மாட்டார்.

ஒரு கைதியை பார்க்க வேண்டுமென்றால், 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை, கொடுத்தால் தான் பார்க்க முடியும்.அதுவும் பல மணி நேரம் காத்தி ருக்க வேண்டும்.கைதிகளை பார்க்க வந்துள்ளவர் கள் பற்றிய தகவலை, சிறையினுள் மைக்கில் அறிவிக்கப் படும்.

சில நேரங்களில், இந்த அறிவிப்பில், பல மணி நேரம் தாமதம் ஏற்படும். சிறை ஊழியர் களை நன்கு கவனித்து விட்டால், சிறையின் நுழைவு பகுதி வழியாக, நேரடியாக உள்ளே சென்று விடலாம். அங்கு, பெயரளவில் சோதிக் கப்படுவர். கையில்,

 

ஒரு சீல் வைக்கப்படும். பின், அப்பகுதியில் உள்ள அறை ஒன்றில் அமர வைக்கப்படுவர்.

ஏற்கனவே, நன்கு கவனித்து விட்டதால், சிறிது நேரத்திலேயே பார்க்க வேண்டிய நபர், அழைத்து வரப்படுவார். கொடுக்கும் பணத் துக்கு தகுந்தவாறு, சம்பந்தப்பட்ட நபருடன் பேசிக்கொண்டிருக்கலாம். பேசி முடித்த பின், வெளியே வரும்போது, கையில் வைக்கப்பட்ட சீலை பார்த்த பின் வெளியேற்று வர். சந்திக்க வருபவர்களை, சம்பந்தப்பட்ட கைதி, பார்க்க வரும் போது, சிறை கதவில் பாதுகாப்பில் இருப்பவர்களை யும் கவனிக்க வேண்டும்.
 

உயர் அதிகாரிகள் வரை


வசதி படைத்தவர்கள் சிறையின் அடி மட்ட ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை கவனிப்பதால், சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு, சிறையினுள் ராஜ மரியாதை நடக்கிறது. இவ்வாறு ஒரு கைதிக்கே இவ்வளவு செல வழிக்க வேண்டுமென்றால், ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்பதை கணக்கிட முடியாது.

சிறையில் நடக்கும் முறைகேடுகளை, சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா, அவ்வப்போது, தன் மேலதிகாரிகளுக்கு கொண்டு சென்றும் முடிவு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- -நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1812399

  • தொடங்கியவர்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் வேறு சிறைகளுக்கு அதிரடி மாற்றம்

 
பரப்பன அக்ரஹார சிறை | படம்: கே.முரளி குமார்.
பரப்பன அக்ரஹார சிறை | படம்: கே.முரளி குமார்.
 
 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் இரவோடு இரவாக வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடைபெறும் ஊழல் தொடர்பாக உயரதிகாரிகளுக்கு எதிராக சில கைதிகள் வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருந்ததாலேயே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

32 கைதிகளுக்கு அதிகாலை 1 மணி அளவில் பெல்லாரி, பெலகாவி சிறைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா தரப்பிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு, சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு சிறப்புச் சலுகை காட்டி வருவதாக டிஐஜி ரூபா டி. மவுட்கில் கடந்த புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.

அவரது அறிக்கை தமிழக, கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் நேற்று (சனிக்கிழமை) தாக்கல் செய்த இரண்டாவது அறிக்கையில் சசிகலாவுக்கு விவிஐபி வசதிகள் செய்யப்பட்டு இருந்தததற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் இரவோடு இரவாக வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடைபெறும் ஊழல் தொடர்பாக உயரதிகாரிகளுக்கு எதிராக சில கைதிகள் வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருந்ததாலேயே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தி இந்து ஆங்கிலம் சார்பில் சிறைத்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

http://tamil.thehindu.com/india/பெங்களூரு-பரப்பன-அக்ரஹாரா-சிறையில்-இருந்து-32-கைதிகள்-வேறு-சிறைகளுக்கு-அதிரடி-மாற்றம்/article9770906.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.