Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெனீஸ்வரனையும் பதவி விலக்குகிறார் முதலமைச்சர் விக்கி

Featured Replies

டெனீஸ்வரனையும் பதவி விலக்குகிறார் முதலமைச்சர் விக்கி

 
டெனீஸ்வரனையும் பதவி விலக்குகிறார் முதலமைச்சர் விக்கி
 

வடக்கு மாகா­ணப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரனை, தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் (ரெலோ) கோரிக்­கைக்கு அமை­யப் பதவி நீக்­கம் செய்­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்.

வடக்கு மாகாண சபை­யின் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா ஆகி­யோ­ரைப் பதவி நீக்­கி­ய­தால் தோன்­றிய சர்ச்சை அடங்­கு­வ­தற்கு முன்­னரே, இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 13ஆம் திகதி, தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் செய­லா­ளர் ந.சிறீ­காந்­தா­வால் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­குக் கடி­தம் ஒன்று அனுப்­பப்­பட்­டது. அதில், எமது கட்­சி­யைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி வடக்கு மாகாண சபை­யில் தங்­கள் தலை­மை­யில் அமைந்­துள்ள அமைச்­ச­ர­வை­யில் தொடர்ந்தும் அங்­கம் வகிப்­ப­தற்­கான சகல தகு­தி­க­ளை­யும் பா.டெனீஸ்­வ­ரன் இழந்­துள்­ளார் என கட்சி தீர்­மா­னித்­துள்ளது.

பா.டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ர­வை­யில் இருந்து நீக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மா­றும் அவ­ருக்­குப் பதி­லாக எமது கட்­சி­யி­னால் பரிந்­து­ரைக்­கப்­ப­டும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னரை அமைச்­ச­ராக நிய­மிக்­கு­மாறு தங்­க­ளைக் கோரு­வ­தற்­கும் கட்சி மேலும் தீர்­மா­னித்­துள்­ளது. டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ர­வை­யில் இருந்து நீக்­கும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கு­மாறு வேண்­டிக் கொள்­கின்­றேன். தங்­கள் அமைச்­ச­ர­வைக்­கான எமது கட்­சி­யின் பிர­தி­நி­தி­யின் பெயரை உரிய நேரத்­தில் அறி­யத்­த­ரு­வோம் – என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதற்கு அன்­றைய தினமே, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பதில் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

அதில், உங்­கள் கடி­தம் கிடைத்­தது. அதன் உள்­ள­டக்­கங்­கள் கவ­னத்­தில் எடுக்­கப்­பட்­டன. ஏற்­க­னவே அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் எமது விசா­ர­ணைக்­குழு முன் தான் தெரி­ப­ட­மாட்­டார் என்று பகி­ரங்­க­மா­கக் கூறி­யதை முன்­வைத்­தும் வேறு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தீர்­மா­னித்­தி­ருந்­தேன். எனவே உங்­கள் பரிந்­து­ரை­க­ளும் கவ­னத்­தில் எடுக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வன என்­ப­தைத் தங்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­கின்­றேன் – என்­றுள்­ளது.

பின்­னணி
வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான ஊழல், மோசடி குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்த நிய­மிக்­கப்­பட்ட குழு தனது அறிக்­கை­யில், விவ­சாய அமைச்­ச­ராக இருந்த பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் கல்வி அமைச்­ச­ராக இருந்த த.குரு­கு­ல­ராசா ஆகி­யோ­ரைப் பதவி நீக்­கப் பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அவர்­கள் இரு­வ­ரைப் பதவி நீங்­கு­மாறு கோரி­யி­ருந்­த­து­டன், ஏனைய இரு அமைச்­சர்­க­ளான ப.சத்­தி­ய­லிங்­கம் மற்­றும் பா.டெனீஸ்­வ­ரன் ஆகி­யோ­ரைக் கட்­டாய ஒரு மாத விடுப்­பில் செல்­லு­மா­றும் அவர்­கள் மீது மற்­றொரு விசா­ரணை நடக்­கும் என்­றும் அறி­வித்­தி­ருந்­தார்.

இத­னால் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது. வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம், வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. கட்­டாய விடுப்­பில் செல்­லு­மாறு கோரி­யதை, முத­ல­மைச்­சர் மீளப் பெற்­ற­தைத் தொடர்ந்து நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­ன­மும் முன்­கொண்டு செல்­வது நிறுத்­தப்­பட்­டது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், விசா­ர­ணைக் குழு ஒன்­றைத் தான் நிய­மிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தார். அமைச்­சர்­க­ளான ப.சத்­தி­ய­லிங்­கம் மற்­றும் பா.டெனீஸ்­வ­ரன் ஆகி­யோர் இந்த விசா­ர­ணைக் குழு முன் தோன்­ற­மாட்­டோம் என்­றும், சட்­ட­ரீ­தி­யான – சுயா­தீ­ன­மான – மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கிய தெரி­வுக் குழு முன்­பா­கவே தோன்­று­வோம் என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

இதற்­கி­டை­யில், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் இடை­யில் நேர­டிப் பேச்சு நடை­பெற்ற பின்­னரே மற்­றொரு விசா­ரணை தொடர்­பான விட­யங்­கள் ஆரா­யப்­ப­டும் என்று கூறப்­பட்டு அவை கிடப்­பில் போடப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே மேற்­படி முடிவை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் எடுத்­துள்­ளார். இது மேலும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தும் என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

1-1-3.jpg

http://uthayandaily.com/story/11777.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டெனிஸ்வரன் மீதான நடவடிக்கைகளின் போது டெலோ அமைப்பின் பரிந்துரைகள் கவனத்திற் கொள்ளப்படும்

 

 

டெனிஸ்வரன் மீதான நடவடிக்கைகளின் போது டெலோ அமைப்பின் பரிந்துரைகள் கவனத்திற் கொள்ளப்படும்
 

வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மீதான நடவடிக்கைகளின் போது, டெலோ அமைப்பின் பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டெலோ எனப்படும் ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு, ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகத்தினால் கடந்த வௌ்ளிக்கிழமை கடிதமொன்று அனுப்பப்பட்டது.

தமது கட்சியில் அங்கம் வகிக்கும் பா.டெனிஸ்வரன் கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும், மாறாகவும் செயற்பட்டுள்ளார் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனால், தமது கட்சியின் அமைப்பு விதிகளின் பிரகாரம், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமாகாண அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் பா.டெனிஸ்வரன் இழந்துள்ளார் என கட்சி தீர்மானித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறும், அவருக்கு பதிலாக தமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடமாகண சபை உறுப்பினர் ஒருவரை அமைச்சராக நியமிக்குமாறு கோருவதாக முதலமைச்சருக்கு டெலோ கடிதம் அனுப்பியிருந்தது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் உள்ளடக்கம் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தமது விசாரணைக்குழு முன் தான் தெரிபட மாட்டார் என்று டெனீஸ்வரன் பகிரங்கமாக கூறியதை முன்வைத்தும் வேறு காரணங்களுக்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருந்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, டெலோவின் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

டெலோ அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தின் பிரதியொன்றை, பா.டெனிஸ்வரனுக்கும் முதலமைச்சர் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/tamil/2017/07/டெனிஸ்வரன்-மீதான-நடவடிக்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.