Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலமைப்பு குழப்பத்தில் மலையகத்தின் நிலை?

Featured Replies

அர­சி­ய­ல­மைப்பு குழப்­பத்தில் மலை­ய­கத்தின் நிலை?

pp2-089ab7a24a905ef43971f77796518bdffb8c31dc.jpg

 

தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான தேர்தல் வாக்­கு­று­தி­களில் முதன்­மை­யாக அமைந்­தது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களின் மீள்­கட்­ட­மைப்பு ஆகி­ய­வை­யாகும். இவ்­வி­டயம் சிறு­பான்மை மக்கள் மட்­டு­மன்றி கற்ற சிங்­களச் சமூ­கமும் வர­வேற்­கக்­கூ­டிய நிலைப்­பாட்டை அடைந்­த­தற்கு காரணம் மோசடி மிகு­தி­யாலும், வரம்பு மீறிச் சென்ற ஊழல், இனத்­து­வேஷம், பாகு­பாடு போன்ற கார­ணங்­களாலும் நாடு சின்­னா­பின்­ன­மாகி இருந்­த­மை­யாகும்.

ராஜபக் ஷக்­களின் அதி­கார மையம் தேசிய அரசின் கைக்கு வந்­த­வுடன் தமிழ் மக்­களும் சற்றே நிம்­மதி அடைந்­தனர். வட­கி­ழக்கு மற்றும் மலை­ய­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களும் தேசிய அரசின் பக்கம் நின்று ஒத்­து­ழைக்­கவும் தயா­ரா­கின. ஆனால் விளைவு வேறு­வி­த­மான பெறு­பேற்றை தந்­து­விட்­டது.

மைத்­திரி அரசு அளித்த வாக்­கு­று­தி­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் போது சில சிக்­கல்கள் இருப்­பதை காண முடிந்­தது. காரணம் எவ்­வாறு வாக்­கு­று­திகள் அளித்­தாலும் இந்­நாட்டில் சில வரை­ய­றை­க­ளுக்­குட்­பட்டே செயற்­பட முடியும் என்­பதை மைத்­திரி ரணில் அரசு அனு­பவ ரீதி­யாக உணர்ந்­தது. சில சமயம் உணர்த்­தப்­பட்­டது. இவ்­வி­ட­யத்தில் சிறு­பான்மை மக்கள் சார்ந்து எடுக்­கப்­படும் தீர்­மா­னங்கள் எப்­போதும் பல்­வேறு இன­வாத தூற்­றல்கள், சர்ச்­சைகள் என்­ப­வற்றைக் கடந்தே ஓய்வுப் பெரு­கின்­றமை நாம் அறிந்­ததே.

அந்த வகையில் இந்­நாட்­டிற்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்கி அதன் மூலம் அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு சென்று இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை எட்­டலாம் என்று மைத்­திரி அரசு நினைத்­தது. இச்­சிந்­த­னைக்குச் சாத­க­மாக வடக்கில் தமிழ் கூட்­ட­மைப்பும் மற்றும் ஏனைய சிறு­பான்மைக் கட்­சி­களும் தம்­முடன் இருப்­ப­தா­கவும், இச்­சூ­ழலைப் பயன்­ப­டுத்தி தமி­ழர்­களின் வர­லாற்றுப் பிரச்­சி­னைக்கு முடிவு காணலாம் எனவும் எண்­ணினர். இவ்­வி­ட­யத்தில் தலை தூக்­கிய பௌத்த தேசி­ய­வாதம் சர்ச்­சையை உண்­டு­பண்ணி இன்று பூதா­க­ர­மாக இப்­பி­ரச்­சி­னையை மாற்­றி­ய­மைத்­துள்­ளது.

அடிப்­ப­டை­வா­திகள் கூறு­வ­துபோல் என்­றுமே ஒற்­றை­யாட்சி தன்மை மாறாது என்றும், சமஷ்­டியின் மூலம் நாடு பிள­வு­படும் என்றும் அடி­மட்ட சிங்­கள மக்கள் மத்­தியில் அபிப்­பி­ராய உரு­வாக்கம் நூத­ன­மாக செய்­யப்­ப­டு­கி­றது. அதேபோல் பல்­லின மக்கள் வாழும் இந்­நாட்டில் பௌத்த மதமே முதன்மை அந்­தஸ்­துக்கு உட்­பட்­டது என்றும், மாகாண அதி­கா­ரங்கள் ஆளுநர் மூலம் ஜனா­தி­ப­தியின் கீழ் வர­வேண்டும் என்றும் , ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் நீக்­கப்­ப­டக்­கூ­டாது என்றும் இன்று மகா­சங்­கத்­தினர் தீர்­மானம் நிறை­வேற்றும் அள­விற்கு சிங்­கள அடிப்­ப­டை­வாதம் இப்­பி­ரச்­சி­னையை பர­வ­லாக்­கி­யுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பில் 19 ஆவது திருத்தம் மூலம் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களின் சேவையை உறு­திப்­ப­டுத்­து­மாறு அமைந்­த­வி­டத்தும் நடை­மு­றையில் மக்கள் முழு­யை­மாக அச்­சு­தந்­தி­ரத்­தினை அனு­ப­விக்க முடி­யாத நிலை அர­சாங்­கத்தின் இய­லா­மைக்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. அதேபோல் சிறு­பான்மை இனங்கள் சம்­பந்­தப்­பட்ட யாப்புத் திருத்­தங்­களும் வெறும் வாய் வார்த்­தை­க­ளுக்குள் முடிந்­து­விடும் அபாயம் இருக்­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யத்தில் மைத்­திரி அரசு மக்­களின் விருப்­பத்­தினை அள­வி­டு­மாறு நாட­ளா­விய ரீதியில் மக்கள் கருத்­த­றியும் அமர்­வு­களை ஏற்­பாடு செய்து சிவில் சமூ­கத்தின் அபி­லா­ஷைகள் குறித்து பதிவு செய்­து­கொண்டு அதன் பின் அர­சி­ய­ல­மைப்பு குழு­வுக்கு பரிந்­து­ரை­களை முன்­வைக்­கு­மாறு கேட்டுக் கொண்­டது. இவ்­வி­டத்தில் மலை­ய­கத்தை முன்­னி­றுத்­தியும், சிவில் அமைப்­பு­களும், அர­சியல் கட்­சி­களும் தமது முன்­மொ­ழி­வு­களை வழங்­கி­யி­ருந்­தன. எனினும் வட, கிழக்­குக்கு அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம் மலை­யக தேசியம் குறித்த சிந்­த­னைக்கு அளிக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வி­டயம் குறித்த தெளிவு மலை­யக மக்கள் மத்­தியில் ஏற்­ப­டா­ம­லி­ருக்கச் செய்யும் செயற்­பா­டு­களும் அர­சிடம் தாரா­ள­மா­கவே இருந்­தன. காரணம் வட­கி­ழக்கு தமி­ழர்கள் தொடர்­பாக பேசும்­போது அதி­காரப் பர­வ­லாக்கம்,

மாகாண சபை­களின் அதி­காரம், சமஷ்டி தீர்வு போன்ற கருத்­தா­டல்­களே முக்­கி­யத்­துவம் பெறப்­பட்­டன. எனினும் வட­கி­ழக்­கிற்கு வெளியே வாழும் சிறு­பான்­மை­யி­னரின் இருப்பு குறித்தும் காணி உரி­மைகள், தொழில், கல்வி, போன்ற விட­யங்கள் குறித்தும் பெரி­தாக பேசப்­பட­ வில்லை. வட­கி­ழக்­கிற்கு அடுத்­த­ப­டி­யாக மலை­யக மக்­களே இந்­நாட்டில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு சனத்­தொ­கையைக் கொண்ட இனக்­குழு என்ற அடிப்­ப­டையில் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

  அதுவும் அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­ப­டுத்­தப்­படும் பாது­காப்பு, இருப்பு என்­பன இனக் கல­வ­ரங்­க­ளாலும் ஒடுக்­கு­மு­றை­யாலும், சுரண்­ட­லாலும் பாதிக்­கப்­பட்ட எம்மை போன்ற ஒரு இனக்­கு­ழு­வுக்கு அவ­சி­ய­மான தேவை­யாகும். இன்­றைய சூழலில் இவ்­வி­ட­யங்­க­ளுக்கு இரண்டாம் அந்­தஸ்தை வழங்கி, ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள், தேர்தல் முறை மாற்றம், ஒற்­றை­யாட்சி போன்ற பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் செல்­வாக்குப் பெறத்­தக்க விட­யங்­களை மகா­சங்­கத்­தி­னரும் ஜனா­தி­பதி, பிர­தமர் போன்­றோரும் பேசிக்­கோண்­டி­ருப்­பதால், மலையக் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் எங்கே கிடைக்­கப்­போ­கின்­றது என்ற ஐயப்­பாடு மலை­யக மக்கள் மத்­தியில் எழுந்­தி­ருப்­பது நியா­யா­மா­ன­தாகும். அது மட்­டு­மன்றி இந்­நாட்டில் தமிழர் பிரச்­சினை என்றால் அது வட கிழக்கில் மட்­டும்தான் என்ற அபத்­த­மான விளக்­கமும் நாட்­டி­னுள்ளும், சர்­வ­தே­சத்­திலும் ஏன் இந்­தி­யா­விலும் கூட ஏற்­ப­டுத்­தப்­பட்டு மலை­யகம் மறக்­கப்­பட்­டுள்­ளது.  

மலை­யக தேசியம் குறித்து பரந்­து­பட்ட விளக்­க­மின்­மையும் அர­சியல் பேதங்­களால் ஒன்­றாக குரல் கொடுக்கும் நிலையில் நாம் அனை­வரும் இல்­லா­த­தையும் அனை­வரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். யாப்புத் திருத்­தத்தில் எம் மக்­களின் இருப்பை உறு­திப்­ப­டுத்தும் சரத்­துகள் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்றும், காணி உரி­மைகள் குறித்த தீர்­மா­னங்­களை எடுக்கும் அதி­காரம் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்றும் குத்­த­கைகள் கூலிகள் என்ற நிலை­மையில் இருந்து நாம் விடு­படும் வரை குரல் கொடுக்க வேண்டும். அதா­வது பெருந்­தோட்ட மக்­களின் தொழில், இருப்­பிடம், சுகா­தாரம், கல்வி உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளுக்கும் அர­சாங்­கமே பொறுப்பு எனும் நிலை யாப்பு ரீதி­யாக ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். எனினும் நாம் இது குறித்து இன்னும் சிந்­திக்­கத்­த­லைப்­ப­ட­வில்லை. ஒரு சில அர­சியல் கட்­சிகள் யாப்பில் உள்­ள­டக்க முடி­யாத அற்ப விட­யங்­களை அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தில் பேசி தங்கள் சமூக அறிவை அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தி­ய­துதான் எமக்கு கிடைத்த வரப்­பி­ர­சாதம்.

அதேபோல் தேர்தல் முறை மாற்­றத்­திற்கு மகா­சங்­கத்­தினர் ஒப்­புதல் அளித்­தி­ருக்­கின்­றனர். அதா­வது பிர­தே­ச­வாரி பிர­தி­நி­தித்­துவம் நீக்­கப்­பட்டு விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவம் ஏற்­ப­டுத்­தப்­படும் என்று சில கருத்­துகள் முன் வைக்கப்பட்டுள்ளன அல்லது கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவும் மலையகத்தைப் பொறுத்தவரையில் பாதகமான விடயமே ஆகும். இப்போது எமக்கிருக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் கூட எட்டாக்கனியாகி விடும் அபாயம் இங்கு இருக்கின்றது. இன்று நாம் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை நாம் இழந்துவிடுவோம் என்ற கவலையாவது எமது பிரதிநிதிகளுக்கு ஏற்பட வேண்டும். மலையக தேசியம் குறித்து கற்ற சமூகம் தனது சமூகக் கடமையை நிறைவேற்றத் தயாராக வேண்டும். அரசியல் யாப்பில் மலையக மக்கள் தனியான அலகாக கருதப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனும் குரல் உரத்து ஒலிக்க வேண்டிய தருணம் இது. எதிர்க்கட்சித் தலைமை தமிழராக இருக்கும் வேளையில்கூட நாம் தனித்து உரத்து குரல் கொடுக்க வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2017-07-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.